இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். உபாகமம் 28:1

Sri Lanka Christian

நான் என் இயேசு
15 Aug 2010 


என்னிடத்தில் ஒன்றுமில்லை..



என்னிடத்தில் ஜீவனில்லை



என்னிடத்தில் பொருளில்லை



என்னிடத்தில் வாழ்வு இல்லை...






இயேசுவிடம் எல்லாமுண்டு



இயேசுவிடம் ஜீவனுண்டு



இயேசுவிடம் பொருளுண்டு



இயேசுவிடம் நித்திய வாழ்வு உண்டு...






இயேசுவை நான் பெற்றுக்கொள்வேன்



இயேசுவிடம் பெற்றுக்கொள்வேன்



இயேசுவையே பெற்றுக்கொள்வேன்



இயேசுவிடம் வாழ்வை பெறுவேன்...






என்னை நானே ஒப்புவிப்பேன்



இயேசுவிடம் ஒப்புவிப்பேன்



இயேசுவுக்கே ஒப்புவிப்பேன்



இயேசுவையே அண்டிக்கொள்வேன்...






இயேசுவிடம் நீயும் சேரு



இயேசுவையே நோக்கிப் பாரு



இயேசுவினால் ஜீவன் பெறு



இயேசுவினால் நித்தியமாய் வாழு...

 

 

 

from : I. Libni Hezron


Uyiron · 8 views · Leave a comment
கைவிடப்போவதில்லை....
15 Aug 2010 
என் நேசர் தம் ஜனங்களை கைவிடப்போவதில்லை....
இயேசு நாதர் உலக மக்களை கைவிடப்போவதில்லை....

உலக முடிவு வரை என் தேவன் என்னை கைவிடப்போவதில்லை....
நாளின் முடிவு வரை என் தேவன் அவர் பிள்ளைகளை கைவிடப்போவதில்லை....

வெற்றியை தரும்வரைக்கும் என்னை கைவிடப்போவதில்லை....
தோல்வியில் துவளும் மக்களை மீட்பதற்காய் கைவிடப்போவதில்லை....

ஆசீர்வாதத்தால் நிறைக்கும் வரை என்னை கைவிடப்போவதில்லை....
சாபத்தால் வாடுவேரை மீட்கும்வரை கைவிடப்போவதில்லை....

சமாதானம் கிடைக்கும் வரை என்னை கைவிடப்போவதில்லை....
யுத்தத்தின் போது அவரது பிள்ளைகளை இயேசு கைவிடப்போவதில்லை....

அதனால் நான் இயேசுவை கைவிடப்போவதில்லை....
அவரது பிள்ளைகள் நீங்களும் இயேசுவை கைவிடப்போவதில்லை....



from - I. Libni Hezron
Uyiron · 5 views · Leave a comment
השליח סרי לנקה בישראל, אומר שהממשלה תומכת 
22 Jul 2010 
 השליח סרי לנקה בישראל, אומר שהממשלה תומכת במאבק של ישראל נגד הטרור <br>יום חמישי, 22 יולי 2010, 11:07 זמן SL, חדשות ColomboPage Desk, סרי לנקה. <br> <br>22 ביולי, קולומבו: השליח סרי לנקה בישראל, לשעבר ראש צוות ההגנה דונלד פררה צוטט בתקשורת באומרו כי כוחות הביטחון הישראלים זקוקים לתמיכה ציבורית בהצלחה למיגור הטרור. <br> <br>בראיון ל &quot;ידיעות אחרונות&quot; (חדשות) אייר מרשל פררה ציין את הדמיון בין LTTE לבין החמאס אמר סרי לנקה הוא תומך נלהב במאבק של ישראל נגד הטרור. <br> <br>&quot;אף אחד לא רוצה שפיכות דמים. הצד השני (הפלשתינאים) יש הציע מו&quot;מ ישיר, ללא תנאים מוקדמים, כדי לקבוע את רמת הרצינות. בשיחות אלה צריך להתמקד בניסיון להגיע לפשרה שתאפשר לשני הצדדים לחתום על הסכם,&quot; הוא סיפר היומית. <br> <br>הוא גם צוטט כאומר, &quot;במקרה שהצד השני מראה זה אינו מעוניין בפשרה, (ישראל) חייב לעבור לשלב הצבאית במלוא העוצמה. (הממשלה) יצטרך להסביר לאזרחים כי ( ישראל) עומד על מאבק ארוך וקשה, כי יגבה מחיר כבד, אך בסופו של מאבק זה המצב של המדינה יהיה הרבה יותר טוב. &quot; <br> <br>&quot;ברגע שיש לך את תמיכת הציבור, אתה צריך להילחם ללא לאות עד שכל את מוקדי הטרור נהרסים. אין דרך חזרה,&quot; ידיעות אחרונות &quot;ציטט את השגריר. <br> <br>בהתייחסו הפשיטה 31 מאי קומנדו על אונייה טורקית עזה הנכנס, פררה הוא אמר, &quot;כאיש צבא אני יכול להבין, כי ישראל צריכה להגן על עצמה. בשל ניסיונה הרב סרי לנקה בלחימה בטרור, אני יכול לומר שזה יהיה תמיד תמיכה המדינות גם מתנגדים (הטרור) &quot;. <br>
Uyiron · 9 views · 0 comments
Today is Tish B'av!
22 Jul 2010 
  On this day, Orthodox Jews around the world are fasting remembering the destruction of the FirstTemple (586 BCE)
built by King Solomon and the Second Temple (70 AD) in which Yeshua (Jesus) spent a lot of time visiting and where
He stated that He was the Messiah.
 
 

 
Photo left: Destruction of 2nd Temple by fire in 70AD.             Photo Right: Stones from 2nd Temple knocked down by Romans.


On this day throughout history the Jewish people faced horrific atrocity!

According to tradition the Temples were destroyed on the exact same day.

It is also recorded that on this day in history, The Temple Mount was plowed under, and Jerusalem was rebuilt as a pagan city.

On this day the Spanish Inquisition began in 1492, and the outbreak of World War One in 1914, along with the mass deportation
of Jews from the Warsaw Ghetto in 1942.

 

Menorah created for the Third Temple.
It is currently housed near the Wailing Wall.
 
"We know the Messiah will come back soon, and rebuild the Temple," said Gilad, an Orthodox
Jew living in Jerusalem.  "Hopefully this is the last year that we will mourn the destruction of
the Temples, and next year it will be rebuilt," he said.
 
 

The only thing hindering the building of the Third Temple is the Muslim Al Aqsa mosque,
which sits in the same area where the Temple will be built.  See photo of Yellow Dome below.
 
 
Jerusalem - where the Temple Stood 2000 years ago.

Today the book of Lamentations is read in the synagogues and in Sephardic synagogues the Book of Job is also read.
It is a day of mourning.  However, as Believers in Yeshua the Messiah, it can be a day of joy.

2000 years Yeshua (Jesus) answered the Jewish leaders saying, "Destroy this temple, and I will raise it again in three days."

The Jews replied, "It has taken forty-six years to build this temple, and you are going to raise it in three days?"
But the temple he had spoken of was his body. After he was raised from the dead, his disciples recalled what he had said.
Then they believed the Scripture and the words that Yeshua had spoken.  John 2

Like the disciple’s of Yeshua (Jesus) who were living during this time (the destruction of the Second Temple in 70AD),
we long for the day of Yeshua’s return which we know is coming soon!

Until then, Rabbi Shaul (Paul) writes that God has given us His living Spirit to dwell in us; we are His Holy Temple and dwelling place.
Lipni · 9 views · 0 comments
உலகில் தமிழ் பேசுவோர்
20 Jul 2010 

Top 100 Languages by Population Last updated: February 1999 The population figures in this table refer to first language speakers in all countries. Note that these figures are updated from the 13th Edition of the Ethnologue (1996). Click on the language name to view its home country Ethnologue entry. For other countries in which the language is spoken, click on the three-letter abbreviation. Rank Language Name Primary Country Population 1 CHINESE, MANDARIN [CHN] China 885,000,000 2 SPANISH [SPN] Spain 332,000,000 3 ENGLISH [ENG] United Kingdom 322,000,000 4 BENGALI [BNG] Bangladesh 189,000,000 5 HINDI [HND] India 182,000,000 6 PORTUGUESE [POR] Portugal 170,000,000 7 RUSSIAN [RUS] Russia 170,000,000 8 JAPANESE [JPN] Japan 125,000,000 9 GERMAN, STANDARD [GER] Germany 98,000,000 10 CHINESE, WU [WUU] China 77,175,000 11 JAVANESE [JAN] Indonesia, Java, Bali 75,500,800 12 KOREAN [KKN] Korea, South 75,000,000 13 FRENCH [FRN] France 72,000,000 14 VIETNAMESE [VIE] Viet Nam 67,662,000 15 TELUGU [TCW] India 66,350,000 16 CHINESE, YUE [YUH] China 66,000,000 17 MARATHI [MRT] India 64,783,000 18 TAMIL [TCV] India 63,075,000 19 TURKISH [TRK] Turkey 59,000,000 20 URDU [URD] Pakistan 58,000,000 21 CHINESE, MIN NAN [CFR] China 49,000,000 22 CHINESE, JINYU [CJY] China 45,000,000 23 GUJARATI [GJR] India 44,000,000 24 POLISH [PQL] Poland 44,000,000 25 ARABIC, EGYPTIAN SPOKEN [ARZ] Egypt 42,500,000 26 UKRAINIAN [UKR] Ukraine 41,000,000 27 ITALIAN [ITN] Italy 37,000,000 28 CHINESE, XIANG [HSN] China 36,015,000 29 MALAYALAM [MJS] India 34,022,000 30 CHINESE, HAKKA [HAK] China 34,000,000 31 KANNADA [KJV] India 33,663,000 32 ORIYA [ORY] India 31,000,000 33 PANJABI, WESTERN [PNB] Pakistan 30,000,000 34 SUNDA [SUO] Indonesia 27,000,000 35 PANJABI, EASTERN [PNJ] India 26,013,000 36 ROMANIAN [RUM] Romania 26,000,000 37 BHOJPURI [BHJ] India 25,000,000 38 AZERBAIJANI, SOUTH [AZB] Iran 24,364,000 39 FARSI, WESTERN [PES] Iran 24,280,000 40 MAITHILI [MKP] India 24,260,000 41 HAUSA [HUA] Nigeria 24,200,000 42 ARABIC, ALGERIAN SPOKEN [ARQ] Algeria 22,400,000 43 BURMESE [BMS] Myanmar 22,000,000 44 SERBO-CROATIAN [SRC] Yugoslavia 21,000,000 45 CHINESE, GAN [KNN] China 20,580,000 46 AWADHI [AWD] India 20,540,000 47 THAI [THJ] Thailand 20,047,000 48 DUTCH [DUT] Netherlands 20,000,000 49 YORUBA [YOR] Nigeria 20,000,000 50 SINDHI [SND] Pakistan 19,720,000 51 ARABIC, MOROCCAN SPOKEN [ARY] Morocco 19,542,000 52 ARABIC, SAIDI SPOKEN [AEC] Egypt 18,900,000 53 UZBEK, NORTHERN [UZB] Uzbekistan 18,466,000 54 MALAY [MLI] Malaysia, Peninsular 17,600,000 55 AMHARIC [AMH] Ethiopia 17,413,000 56 INDONESIAN [INZ] Indonesia 17,050,000 57 IGBO [IGR] Nigeria 17,000,000 58 TAGALOG [TGL] Philippines 17,000,000 59 NEPALI [NEP] Nepal 16,056,000 60 ARABIC, SUDANESE SPOKEN [APD] Sudan 16,000,000 61 SARAIKI [SKR] Pakistan 15,015,000 62 CEBUANO [CEB] Philippines 15,000,000 63 ARABIC, NORTH LEVANTINE SPOKEN [APC] Syria 15,000,000 64 THAI, NORTHEASTERN [TTS] Thailand 15,000,000 65 ASSAMESE [ASM] India 14,634,000 66 HUNGARIAN [HNG] Hungary 14,500,000 67 CHITTAGONIAN [CIT] Bangladesh 14,000,000 68 ARABIC, MESOPOTAMIAN SPOKEN [ACM] Iraq 13,900,000 69 MADURA [MHJ] Indonesia, Java, Bali 13,694,000 70 SINHALA [SNH] Sri Lanka 13,220,000 71 HARYANVI [BGC] India 13,000,000 72 MARWARI [MKD] India 12,104,000 73 CZECH [CZC] Czech Republic 12,000,000 74 GREEK [GRK] Greece 12,000,000 75 MAGAHI [MQM] India 12,000,000 76 CHHATTISGARHI [HNE] India 10,985,000 77 DECCAN [DCC] India 10,709,800 78 CHINESE, MIN BEI [MNP] China 10,537,000 79 BELARUSAN [RUW] Belarus 10,200,000 80 ZHUANG, NORTHERN [CCX] China 10,000,000 81 ARABIC, NAJDI SPOKEN [ARS] Saudi Arabia 9,800,000 82 PASHTO, NORTHERN [PBU] Pakistan 9,685,000 83 SOMALI [SOM] Somalia 9,472,000 84 MALAGASY [MEX] Madagascar 9,398,700 85 ARABIC, TUNISIAN SPOKEN [AEB] Tunisia 9,308,000 86 RWANDA [RUA] Rwanda 9,306,800 87 ZULU [ZUU] South Africa 9,142,000 88 BULGARIAN [BLG] Bulgaria 9,000,000 89 SWEDISH [SWD] Sweden 9,000,000 90 LOMBARD [LMO] Italy 8,974,000 91 OROMO, WEST-CENTRAL [GAZ] Ethiopia 8,920,000 92 PASHTO, SOUTHERN [PBT] Afghanistan 8,206,000 93 KAZAKH [KAZ] Kazakhstan 8,000,000 94 ILOCANO [ILO] Philippines 8,000,000 95 TATAR [TTR] Russia 8,000,000 96 FULFULDE, NIGERIAN [FUV] Nigeria 7,611,000 97 ARABIC, SANAANI SPOKEN [AYN] Yemen 7,600,000 98 UYGHUR [UIG] China 7,595,512 99 HAITIAN CREOLE FRENCH [HAT] Haiti 7,372,000 100 AZERBAIJANI, NORTH [AZE] Azerbaijan 7,059,000 101 NAPOLETANO-CALABRESE [NPL] Italy 7,047,400 102 KHMER, CENTRAL [KMR] Cambodia 7,039,200 103 FARSI, EASTERN [PRS] Afghanistan 7,000,000 104 AKAN [TWS] Ghana 7,000,000 105 HILIGAYNON [HIL] Philippines 7,000,000 106 KURMANJI [KUR] Turkey 7,000,000 107 SHONA [SHD] Zimbabwe 7,000,000 (http://web.archive.org/web/19990429232804/www.sil.org/ethnologue/top100.html)

பதினைந்தாம் நூற்றாண்டிலோ பதினாறாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்ட கிறித்தவ சமய வழிபாட்டு ஓலைச் சுவடிகள்

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, செந்தமிழ் நடையில் எழுதப்பட்ட விவிலிய நூலின் முகப்பு
Uyiron · 35 views · 0 comments
கிறிஸ்தவமும் சபை பிரிவுகளும்
06 Jul 2010 
 எண்ணிறைந்த கிறிஸ்தவ சபைகள் பல பிரிவுகளை காண்பதற்கு சீர்திருத்தங்கள் ஓர் முக்கிய காரணியாகும். இன்றுள்ள அநேகம் சபைகள் பிரிவினைக்கு வேதாகம கோட்பாடுகளும் கிறிஸ்தவ தலைவர்களின் வேறுபட்ட தரிசனங்களுமே காரணமாயமைகின்றன. கிறிஸ்து ஒருவரே தலையாக இருக்கிறார். அவரது சபைகள் சரீரத்தின் அவயவங்களாயிருக்கின்றன. பக்தியுள்ள தலைவர்களின் அர்ப்பணிப்பின் நிமித்தம் ஒவ்வொரு சபையும் தனக்கென ஒரு தனிப்பாங்கான போக்கை உலகிற்கு காண்பிக்கின்றது. வேதாகம தத்துவங்களிலிருந்து மனித அறிவினால் மாற்றப்பட்ட கருத்துக்களே ஏற்றுக்கொள்ளப்பட்டதாயின் அல்லது வேதாகமத்துடன் சரிவர பொருந்தவில்லையாயின் அச்சபை பிரயோஜனமற்றதாயிருக்கும். கிறிஸ்துவின் வாழ்வின் பின்னர் அவரது சீடர்களது முயற்சியால் இயேசுவின் போதனைகள் உலகமெங்கும் சென்றடைந்தது. அக்கால உலகை ஆளுகை செய்த ரோம இராச்சியத்தினால் கிறிஸ்தவ சிந்தனைகள் ஏற்கப்பட்டு ரோம சாம்ராஜ்யத்தினாலேயே கிறிஸ்தவ வழிமுறைகளும் சடங்குகளும் மாற்றத்திற்குள்ளானது அல்லது உருவானது. பலம் பொருந்திய கிறிஸ்தவ அமைப்பாக ரோம் பல்லாண்டுகளாக திகழ்ந்து விளங்கியது. அதன் பயனாகவே இன்றும் ரோம் வத்திக்கானில் பாரம்பரிய கிறிஸ்தவ அமைப்பு செயல்படுகின்றது. 1) ரோம சாம்ராஜ்ய காலத்தில் அல்லது போப்புவின் முழுமையான அதிகாரமுள்ள நாட்களில் ரோம அரசியலில் மற்றும் துறவற பிரிவினால் மற்றும் சீர்திருத்தங்களால் ஏற்பட்ட சபை பிளவுகள் இத்தனை சபைகள் தோன்றும் காலம் கி.பி 1000ற்கு பின்னர் சீர்திருத்த காலத்தில் என்றே தெளிவாக தோன்றும். உலகளாவிய கிறிஸ்தவ சபையின் முதற் பிரிவு உரோமாபுரியில் மேற்காகவும் கிழக்காவும் பிரிந்திருந்த உரோம வல்லரசில் இடம்பெற்றது. கி.பி 1054ல் போப்புவிற்குரிய அதிகாரங்களை தானும் பெறவேண்டும் என்னும் நோக்கத்தில் கான்ஸ்தைந்து நோபிளில் (கிழக்கு ரோமில்) புதிய சபையாக மாற்றம் பெற்றது. சாதாரண அரசியல் மோதல்கள், மேற்கில் பேசப்பட்ட லத்தீன் மொழி கிழக்கில் பேசப்பட்ட கிரேக்க மொழியின் தாக்கங்கள், கிழக்கத்திய சபையை புறம்பாக்கிய மேற்கத்திய சபையின் போக்கு போன்றன காரணமாகின. எனினும் கிரேக்கத்திய கிழக்கு சபை துருக்கியரின் பேராட்டங்களுக்குள் சிக்கி துன்பத்தை அனுபவித்தது. சபை பிரிவுகளுக்கான அடித்தளத்தில் கிறிஸ்தவத் துறவிகள் பிரிவுகளை ஏற்படுத்தினர். முதற்பிரிவு துறவற வாழ்வில் ஆரம்பிக்கப்பட்டது. துறவற வாழ்வு வாழ்ந்த கிறிஸ்தவ துறவிகளின் அர்ப்பணிப்பு, வாஞ்சை போன்றவற்றில் தங்களை இணைக்கும் ஏனையவர்கள் குறிப்பிட்டவர்களை மட்டும் சார்ந்துகொண்டு சென்றதால் பிரிவுகள் ஏற்படலாயின. கிளயர்வேயி பேர்னாட் என்பவரால் கூறப்பட்ட கருத்துக்கள் பேச்சு சாதூரியம் மிக்கதாகையால் அவரது கருத்துக்கள் ஏற்கப்பட்டு 1173ல் மேற்கத்திய சபையின் துறவறத் தந்தை எனும் நிலைக்குள்ளானார். கார்த்தூசிய் புரூனேயால் கார்த்தூசியன் துறவற ஒழுங்கு இயக்கம் தோன்றினது. கத்தாரி என்றும் வால்டன்ஷியர் என்றும் பிரிவுகள் 12ம் நூற்றாண்டில் உருவாயின. இவர்களது போக்கை போப்பு எதிர்த்தார். ஆதலால் சபையிலிருந்து இவர்கள் நீக்கப்பட்டதோடு உபத்திரவங்களுக்குள்ளாக்கப்பட்டனர். 13ம் நூற்றாண்டில் புதிதாக ப்ரையர்ஸ் அல்லது சகோதரர் எனும் அர்த்தமுடைய இயக்கம் உருவானது. இவர்களில் பிரான்சிஸ்கன் மற்றும் தொமினிக்கன் எனும் குழுக்களாக பிரிந்தனர். கியோவான்னி பெர்னாடூன் என்னும் அசிசி நாட்டு பிராசிஸ் என்பவரது சேவையால் கவரப்பட்டவர்கள் அவரை சார்ந்து கொள்ள பிரான்சிஸ்கன் உதயமாகியது. போப்பின் அதிகாரத்துடன் இவரது முயற்சி இருந்தாலும் புதிய ஒழுங்கானது. தொமினிக் ஸ்பெயினில் பிறந்தவராவார். இவரை பின்பற்றியோர் தொமினிக்க உபதேசத்தை முன்னெடுத்தனர். 1524ல் தியத்தைன் 1526ல் காப்புக்கின் 1530ல் பர்னபா 1535ல் உர்சல்லைட் போன்ற துறவற இயக்கங்கள் தோன்றின. இன்னாசியு லயோலா என்பவரால் 1540ல் போப்புவானவரின் ஒப்புதலோடு ஜெசுய்ட்ஸ் எனும் இயேசு நாதரின் சங்கம் உருவானது. சபை பிரிவின் முதற்படி சீர்திருத்த காலத்தில் பற்றவைக்கப்பட்ட தீயைப் போன்றதாகும். 14ம் நூற்றாண்டில் சீர்திருத்தகால தலைவர்கள் இதில் பெரும் பங்காற்றியுள்ளார்கள் எனலாம். கிறிஸ்தவ சீர்திருத்தத்தில் யோன் வைக்ளிப் முதன்மையானவர். இவரை பின்பற்றியோர் லொல்லார்ட்ஸ் எனப்படும் குழுவினராவர். பின் வந்தவர் யோன் ஹஸ் ஆவர். இவரது உபதேசங்களை ரோம போப் எதிர்த்ததால் ஹஸ்ஸை தீயிட்டு கொளுத்தினர். ஆல்ஜென்ஸ் (கத்தாரை), வால்டன்செஸ், பொதுமக்களின் சகோதரர், போன்ற சீர்திருத்த குழுக்கள் உருவானது. 2) ரோம அரசியல் பிரிவின் பின் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பானியா, ஜெர்மனியில் கிறிஸ்தவ சபை அமைப்புக்கள். ரோமின் சர்வாதிகார சபை ஆதிக்கத்திலிருந்து இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பானியா, ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்ற நாடுகள் பிரிந்து தனித்தனி சபையாக மாற்றமடைகின்றன. ஏற்கனவே தனித்தனி அரசுகள் இந்நாடுகளில் இருந்தபோதும் போப்பின் கிறிஸ்தவ ஆதிக்கத்தினால் போப்பின் கீழாகவே இந்நாட்டு அரசுகள் இருந்தன. ஜெர்மனியின் (மற்றும் சுவிட்சலாந்தின்) புரட்டஸ்தாந்து கிறிஸ்தவம் மார்ட்டின் லூத்தர் ஜேர்மனியிலிருந்து ரோமாபுரி போப்பின் பாவமன்னிப்பு சீட்டு விற்பனைக்கு எதிராக எழுந்தார். போப்பு ரோமாபுரியில் தமக்கெதிராக எழுந்தவர்களை கொன்றழித்ததுபோல் ஜெர்மனியில் தமக்கெதிரானவர்களுக்கு எதிராக எழுந்தாலும் ஜெர்மனிய நாடு லூத்தருக்கு ஆதரவாய் அவரது கருத்துக்களை பரப்பினதால் போப்புவின் ஆதிக்கம் ஜெர்மனியில் தலையிட முடியவில்லை. தொமினிக்க துறவிகளும் அவரோடு இணைந்து கொண்டனர். ரோமபுரி மேற்கொண்ட கிறிஸ்தவ முறைக்கு மாறுபட்ட அவசியமற்ற பாரம்பரியங்களுக்கு லூத்தர் எதிர்ப்பை தெரிவித்தார். ஜேர்மனியில் நிலை லூத்தருக்கு எதிராய் இருந்தாலும் லூத்தரின் நண்பர்கள் அவரை பாதுகாத்துக்கொண்டதால் லூத்தர் தப்பித்துக்கொண்டார். பல்வேறு பிரச்சினைகளில் தப்பி வடஜெர்மனியில் இறுதியாக லூத்தரின் கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதினால் 1529 ஏப்ரல் 19ல் லூத்தரை சார்ந்தவர்கள் ரோமாபுரி சபையை நீக்கி தமக்கென புதிதாக சபையை அமைத்துக்கொண்டதனால் அவர்கள் புரட்டஸ்தாந்தினர் எனப்பட்டனர். 1555ன் பின்னர் ஜெர்மனியானது கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்தாந்து எனும் இரு பாகங்களாக அமைந்தது. இதே காலகட்டத்தில் போப்புக்கு எதிராக சுவிஸ்லாந்தில் ஸ்விங்ளி எழுந்து பாவமன்னிப்பு சீட்டு இன்னும் பல காரியங்களை எதிர்த்தார். இவரை பின்பற்றியோரும் புரட்டஸ்தாந்தினர் எனப்பட்டனர். சுவிட்சலாந்தில் யோன் கல்வின் 1532ல் புரட்டஸ்தாந்து இயக்கத்தினரானார். ஸ்கொட்லாந்திற்கும் புரட்டஸ்தாந்து சபை பரவினது. ஸ்கொட்லாந்தில் யோன் நாக்ஸ் புரட்டஸ்தாந்திற்காக செயற்பட்டார். இங்கிலாந்தின் ஆங்கிலேய திருச்சபை இங்கிலாந்து அரசனை போப்புவின் அதிகாரத்தினால் ரோமபுரி கட்டிவைத்திருக்க, சீர்திருத்தத்தின் விளைவால் இங்கிலாந்து விடுபட்டு இங்கிலாந்தின் அரசன் புதிய கிறிஸ்தவ ஒழுங்குமுறையை ஏற்படுத்தினான். 1532ல் 8ம் ஹென்றி போப்புக்கு செல்லும் வரிப்பணத்தை நிறுத்தினான். 1540ற்குள் இங்கிலாந்திலிருந்த துறவிகளும் துறவறமும் அடியோடு அழிக்கப்பட்டன. இங்கிலாந்தில் ஆங்கிலேய சபை, தூய்மையானவர்கள், சபை ஆட்சிமுறை, பேராய ஆளுகை முறை, குவாக்கர்ஸ் ஆகிய பிரிவுகள் உண்டாயின. வில்லியம் டின்டேன் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து வெளியிட்டார். அத்தோடு 8ம் ஹென்றியால் வேதாகமம் ஒவ்வொரு திருச்சபையிலும் வைக்க கட்டளை பிறப்பிக்கப்பட்டது. பின் இங்கிலாந்தில் 1570-தோடு போப்பின் அதிகாரங்களை துடைத்தெறிந்து ஆங்கிலிக்கன் சபை அல்லது ஆங்கிலேய கத்தோலிக்கர் என இங்கிலாந்து கிறிஸ்தவம் அறியப்பட்டது. ஆங்கிலேய சபையானது வேதாகமம், ஜெப புஸ்தகம், 39 விசுவாச அம்சம் ஆகியவற்றை கொண்டிருந்தது. - கொசினியஸ் என்பவரால் கொசினிய கொள்கை கொண்டுவரப்பட்டது எனினும் இயேசு சங்கத்தினரும் புரட்டஸ்தாந்தினரும் இதை அடக்கினர். - ஆர்மீனியத்தை ஜேக்கப் ஆர்மீனியஸ் கொண்டுவந்தார். இதனால் ஆர்மீனிசம் உருவாகி நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்துக்கு நாடுகளுக்கு சென்றது. - பியுட்டானிய குருக்கள் உரோம முறையை எதிர்த்து ஆங்கில சபையில் இணைந்தனர். சிலர் அதிலிருந்து பிரிந்தனர். சபை ஆட்சிமுறையை அனுசரித்தனர். - ரொபர்ட் ப்ரவ்ன் என்பவரால் சபையாட்சி முறை கொண்டுவரப்பட்டது. ஆங்கில திருச்சபையிலிருந்து பிரிந்து நார்விச்சில் முதல் சபையை உருவாக்கினார். இந்த சபையானது ஆங்கில கங்கிரிகேஷனல் எனப்படுகிறது. இது இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு பரவியது. இவர்கள் கங்கிரிகேஷனலிஸ்ட் எனப்படுகின்றனர். - ஸ்கொட்லாந்து மூப்பராட்சிசபை அமெரிக்காவிலும் பரவியது. - ஜோர்ஜ் பொக்ஸ் என்பவரால் குவேக்கர்ஸ் குழு உருவானது. இது நண்பர்களின் சங்கம் எனவும் அழைக்கப்படுகின்றது. 1689ல் குவேக்கர் உரிமை பெற்று இடையூறின்றி வாழ்கிறார்கள். - சூரிச்சில் கிராபெல் மற்றும் மேன்ஸ் என்பவர்களால் மறுமுழுக்குவாதிகள் இவ்வியக்கம் 1524-1529 வரை காணப்பட்டது. - ஜெர்மனியில் பக்தி இயக்கம் - மெரொவிய இயக்கத்தை சீமான் சின்சன்டார்ப் என்பவர் ஆரம்பித்தார். 1727ல் புதிய உத்வேகத்துடன் அமெரிக்காவிலும் ஆபிரிக்கா, லேபிரொடர் பகுதிகளில் பரவியது. இங்கிலாந்தில் மெதடிஸ்த இயக்கம் 1700 களில் சாமுவெல் வெஸ்லியால் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேய சபையிலிருந்து 1739ல் முழு அளவில் மெதடிஸ்ட் இயக்கம் பிரிந்து வளர்ச்சி கண்டது. 19ம் நூற்றாண்டில் இங்கிலாந்து கிறிஸ்தவ சபைகள் உருவாயின விதம். - விசால சபை பிரிவு ஆனது ஆங்கில சபைகளிலிருந்து மாறுபட்ட இயக்கமாகும். - ஆங்கிலேய கத்தோலிக்க பிரிவு அல்லது ஆக்ஸ்பர்ட் இயக்கம் 1833ல் உருவானது. - கத்தோலிக்க அப்போஸ்தல திருச்சபை இது அமெரிக்கவுக்கும் ஜெர்மனிக்கும் பரவியது. - பிளிமத் சகோதரர் இயக்கம் டாhர்பியால் உருவாக்கப்பட்டு சுவிஸ்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்காவிற்கு பரவியது. - இரட்சண்ய சேனை மெதடிஸ்த இயக்கத்திலிருந்து 1873ல் வில்லியம் பூத் எனபவரால் உருவாக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டில் அமெரிக்க கிறிஸ்தவ சபைகள் உருவாயின விதம். - உரோமன் கத்தோலிக்கர் - அமெரிக்க ஆங்கிலேய சபை - அமெரிக்க மெதடிஸ்த சபை - லூத்தரன் சபை - அனைத்துலக மீட்புகொள்கை சபை யோன் மூரேயால் உருவாக்கப்பட்டது - ஒருமைக் கொள்கை சபை - கும்பர்லாந் மூப்பர் ஆளுகை சபை - கிறிஸ்துவின் சீடர்கள் என 1832ல் அழைக்கப்பட்ட சபை தோமா காம்பலால் உருவாக்கப்பட்டது. - அட்வன்டு சபை - விஞ்ஞான கிறிஸ்து சபை - எகோவா சட்சிகள் - பெந்தகொஸ்து சபைகள் - எசெம்ப்ளி ஒப் கோர்ட் ஆபிரிக்க கிறிஸ்தவ சபைகள் உருவாயின விதம். - முஸ்லிம் ஆட்சியில் அதிக கிறிஸ்தவ சபைகள் அழிக்கப்பட்டன. தற்போதைய ஆபிரிக்கர்கள் 17ம் நூற்றாண்டுக்கால மனோபிசித்த கொள்கையை பின்பற்றுகின்றனர். கிறிஸ்தவ மிஷனரி சங்கங்கள் (கிறிஸ்தவ சபை பிரிவுகள் அறிமுகப்படுத்திய சங்கங்கள்) 1. உரோமன் கத்தோலிக்க மிஷன் 1542ல் பிரான்சிஸ் சேவியர் இந்தியாவிற்கு (கோவாவிற்கு) அனுப்பப்பட்டார். தென் இந்தியா> ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பின்னர் சென்றார். ஜெசுய்ட் மிஷனால் மேட்டியோ றிக்சி சீனாவிற்கு சென்றார். இந்தியாவிற்கு 1606ல் ரொபர்ட் நொபிலி மதுரைக்கு வந்தார். 2. சுவிசேஷ பிரபல்ய சங்கம் 1701ல் நிறுவப்பட்டது 3. தரங்கம்பாடி மிஷன் இந்திய தரங்கம்பாடிக்கு டென்மார்க் அரசனால் (4ம் பிரடெரிக்) சீகன்பால்குவும் ஹென்றிச் பூளுச்சௌவும் அனுப்பப்பட்டு இந்தியாவிற்கு 1706ல் வந்து சேர்ந்தனர். 4. மெரோவிய மிஷன் 1732ல் ஆரம்பிக்கப்பட்டு சுரீனம், கயானா, எகிப்து, தென் ஆபிரிக்க நாடுகளில் செயல்பட்டது. 5. பெப்டிஸ்ட் மிஷனரி சங்கம் இந்தியாவிற்காக ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கம் 1792ல் வில்லியம் கேரியால் ஆரம்பிக்கப்பட்டு வில்லியம் கேரி இந்தியாவிற்கு முதல் மிஷனரியாக வந்தார். 6. லண்டன் மிஷனரி சங்கம் 1795ல் டேவிட் போக் என்பவரால் உருவாக்கப்பட்டது. மடகஸ்கா, இந்தியா, பப்புவா ஆகிய இடங்களுக்கு மிஷனரிமார் சென்றனர். 7. சபை மிஷனரி சங்கம் யோன் வென், மற்றும் தோமா ஸ்கொட் ஆகியோரால் 1799ல் உருவானது. 8. அமெரிக்கன் அயல்நாட்டு மிஷன் போர்ட் 1810ல் உருவானது. ஜோன் மில்ஸ் காரணமாயமைந்தார். 9. 1813ல் இங்கிலாந்து வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷனரி சங்கம் 10. 1819ல் அமெரிக்கன் மிஷனரி சங்கம் 11. 1814ல அமெரிக்கன் பாப்டிஸ்ட் சங்கம் 12. 1825ல் ஸ்கொட்லாந் சபையின் மிஷன் போர்ட் 13. 1821ல் பேசில் சுவிசேஷ மிஷனரி சங்கம் 14. 1821ல் டேனிஸ் மிஷனரி சங்கம் 15. 1924ல் பெர்லின் மிஷனரி சங்கம் 16. 1924ல் பாரீஸ் மிஷனரி சங்கம் 17. சீன உள்நாட்டு மிஷன் 1865ல் ஹட்சன் டெய்லரால் உருவாக்கப்பட்டது.
நீதிமான்
23 Jun 2010 
பாவம் செய்கிறவனின் குடும்பமே பாவத்தின் சாபத்தை அனுபவிக்கிறதிலிருந்து விடுவிக்க தேவனுடைய கிருபை ஒவ்வொருவன் மேலும் தனிப்பட்ட விதமாய் காணப்படுகின்றது. இது தனிப்பட்ட நியாயத்தீர்ப்பை காண்பிக்கின்றது. பாவத்திலிருக்கின்ற மனிதன் தன் தகப்பனின் பாவத்தினால் தனக்குச் சாபம் வந்ததென்று சொல்லமுடியாது. அவன் பாவத்திலிருந்து மீளவும் அல்லது பாவத்திற்குள் நிலைத்திருக்கவும் அவனுடைய ஆத்துமாவுக்கு இடமுள்ளது. முன்னோர் நிமித்தமாக அவனுக்குள் ஏற்படும் சாபங்களை அவன் பாவத்திலிருந்து விடுபடும்போது நீக்கிக்கொள்ள முடியும். 
தேவனுடைய கரமானது ஒவ்வொருவரையும் தனித்தனியாக காண்கின்றது. அவர் தம்மை நோக்கிக் கூப்பிடுகின்ற அனைவரது சத்தத்தையும் கேட்கின்றவர். அவரால் ஒவ்வொருவருடைய பாவத்தையும் நீக்குவதற்கு வல்லமையுள்ளது. இவ்விதமாய் பாவத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றவன் நீதிமானாகின்றான். 
   “இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள். தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது. பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசேக்கியேல் 18:4)
தேவன் நீதிமானை அதிசயவிதமாய் நடத்துகின்றார். அவனுடைய அனைத்து காரியங்களையும் அவர் அறிந்துவைத்திருப்பதோடு அவனுக்குரிய தேவைகளை நிறைவேற்றுவதில் வல்லவராயிருக்கின்றார். தேவன் நீதிமானை மிகவும் நேசிக்கின்றார். அவனுடைய வாழ்வினை தேவன் பிழைக்கப்பண்ணுகின்றார். அவன் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் தேவன் தாமே அவனுக்கு சிறந்தவராய் காணப்படுவார். 
நீதிமானாய் வாழும் வாழ்க்கையானது முற்றிலும் மாறுபட்டதாகும். அவனுடைய காரியங்கள் அனைத்தும் அவனோடிருக்கும் அனைவருக்கும் புதிய முன்மாதிரியாகக் காணப்படும். அவனுடைய வெளிச்சம் இருளிலே பிரகாசிக்கின்ற ஒளியைப் போன்றது. அவனுடைய பாதைகள் தெளிவாயும், செம்மையாயும் காணப்படுகின்றது. தேவன் அவனை ஒருபோதும் கைவிடுவதில்லை. அவனுடைய காரியங்கள் வாய்க்கும். 
  “ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,
  மலைகளின்மேல் சாப்பிடாமலும், .. நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும்,
  ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக் கொடுத்து, தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து,
  வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன்கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கை உண்மையாய்த் தீர்த்து,
 என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான். அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.” (எசேக்கியேல் 18:5-9)

Uyiron · 45 views · 3 comments
சத்தியவசனம்
22 Jun 2010 
உண்மையுள்ள தேவனுடைய வசனத்தை அடக்கிவைக்கிறவர்கள் மேல் தேவ கோபம் உண்டாகின்றது. மனிதர் தங்களுடைய அவபக்தியின் நிமித்தமாக தேவ சத்தியத்தை அடக்கி வைப்பது எத்தனை பரிதாபமானது. இதனால் தேவகோபம் சீக்கிரம் அவர்கள் மேல் வெளிப்படும் என வேதாகமம் எச்சரிக்கின்றது. 
 “சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது” (ரோமர் 1:18) ஆகையினால் தேவனுடைய சத்தியத்தை அறிவிக்கும் பொறுப்பு அதனை அறிந்துள்ள அனைவருக்கும் உரியது. தாங்கள் சத்தியத்தை அறிந்தவர்களாய் மாத்திரமல்ல அதனை மற்றவர்களுக்கும் அறிவிக்க வேண்டிய பொறுப்பு வலியுறுத்தப்படுகின்றது. அவ்வாறில்லையாயின் தேவனுடைய கோபத்திற்கு உள்ளாக வேண்டிய பொறுப்பினை சுமக்க வேண்டியிருக்கும். தேவ கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளுவதற்கான வழியை ஆரம்பியுங்கள். சத்தியத்தை அடக்கி வையாமல் அதை பிரசித்தம் பண்ணுங்கள். 

தேவன் தம்மை தமது ஜனங்களுக்கு காண்பித்திருக்கிறார். அவருடைய செயல்களை அவருடைய ஜனம் அறிந்துகொண்டுள்ளது. ஏனெனில் தேவன் தம்மை மறைப்பவரல்ல. அவர் தம்முடைய ஜனங்கள் தம்மை அறிந்து கொள்ளும்படிக்கு தம்முடைய காரியங்களை தினமும் அறிவித்துக்கொண்டிருக்கின்றார்.
 “தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது. தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.” (ரோமர் 1:19)
எவ்விதம் தேவன் தம்மை வெளிப்படுத்தினார் என்பதற்கு பலவழிகளை காட்டமுடியும். பரிசுத்த வேதாகமம் அதற்குச் சிறப்புச் சான்று. தம்முடைய ஜனத்தாருக்கு தம்மை பரிசுத்த வேதாகமத்தின் ஊடாக வெளிப்படுத்துகின்றார். எவ்வாறு இஸ்ரவேலரை வழிநடத்தினார் என்பதை வேதாகமம் நமக்கு இன்றும் அறிவித்துக்கொண்டிருக்கின்றது. அன்றைய பண்டைய கால இஸ்ரவேலரை வழிநடத்தி வந்த இறைவனின் கரத்தை இன்றும் அதே தேசத்தில் நாம் காணமுடிவது இன்னோர் சிறப்புச் சான்று. நம்மத்தியில் கூட தேவன் இன்றும் தம்முடைய மகிமையை வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றார். 

Uyiron · 19 views · 2 comments
சர்வதேவன்
21 Jun 2010 
உலகத்தில் உள்ளவைகள் கூட தேவனுடைய மகிமையைக் காண நமக்கு வழிவகுக்கின்றன. மலைகள், மரங்கள், மிருகங்கள், பறவைகள், நீரூற்றுக்கள் அவருடைய மகிமையின் மகத்துவத்தை பறைசாற்றுகின்றன. அவைகளை காண்பவர்கள் நிச்சயம் மகிமையுள்ள தேவனின் மகத்துவத்தை உணர்ந்துகொள்ள முடிகின்றது. 
 “எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும். ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.” (ரோமர் 1:20)
யாரும் தேவனை அறியவில்லை என அவருடைய சிங்காசனத்திற்கு முன்னால் கொண்டுவரப்படும் போது கூற முடியாது. ஏனெனில் மவர் தம்முடைய மகிமையை எங்கும் வைத்திருக்கிறார். அதன் மூலம் அவருடைய மகிமை எத்தனை பெரிதென்று ஜாதிகள் விளங்கிக்கொள்ள வேண்டும். 
மனிதரோ நிச்சயம் தேவனை அறிந்தும் அவரை விரும்பாமற் போகும்போது அல்லது அவரை விட்டு நீங்கும் பொழுது அவர்கள் கெட்டுப்போவதற்கான முடிவு சமீபமாகின்றது. உங்கள் இருதயத்தை நீங்கள் ஏன் கடினமாக்கிக்கொள்ள வேண்டும்?
 “அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள். உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.” (ரோமர் 1:18)
மனிதர் உண்மையை அறிந்து கொள்ளுவதில் தாமதமுள்ளவர்களாயிருக்கிறார்கள். உணர்வற்றுப் போவதில் அவர்கள் முன்னணியில் திகழ்கிறார்கள். நீதியை பின்பற்ற முடியாமல் அநீதி செய்வதில் குறியாயிருக்கிறார்கள். நன்மை மறந்து தீமையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் செய்வதை அவர்களே அறியாதிருக்கிறார்கள். அவர்களுடைய வழியை அவர்கள் சீரமைக்கவில்லை. எத்தனை தூரம் அவர்கள் தங்களை அறியாமல் போய்விட்டார்கள். 
 “அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். (ரோமர் 1:22-23)
தேவனை மறந்த மனிதன் தன் அறிவீனத்தால் செய்யும் ஏளனமிக்க காரியங்களை தேவன் அவதானித்துக் கொண்டிருக்கின்றார். உயிருள்ள இறைவனை காண்பதில் உள்ள ஈடுபாட்டை மனிதன் இழந்து மாயமான உலகில் உள்ளவைகளை தெய்வமாக்கிக்கொண்டு தன் சரீரத்தை கெடப்பண்ணுகின்றான். தன் வாழ்க்கையை அற்ப கல்லுகளுக்கு ஒப்படைக்கின்றான். உக்கிப்போகும் மரக்கட்டையை தனக்கு தெய்வமாக்கிக் கொள்ளுகிறான். அவைகள் அவனை மீட்குமோ? அவனது மரணத்தின் பின்னர் அவைகள் அவனுக்கு வழிகாட்டுமோ? 
ஆகையினால் அவர்கள் பொல்லாப்பை செய்து தேவ கோபத்தை தங்கள் மேல் வருவித்துக்கொள்ளுகிறார்கள். 
“அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்திலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு. பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
 புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குப் கீழ்ப்படியாதவர்களுமாய்,
 உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவஅன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.”
(ரோமர் 29-32)
குற்றவாளியே இரட்சிப்பை இயேசுவிடமிருந்து பெற்றுக்கொள். அல்லது தேவனின் கோபத்தண்டனைக்கு ஆளாகு!

Uyiron · 30 views · 2 comments
சர்வதேவன்
21 Jun 2010 
உலகத்தில் உள்ளவைகள் கூட தேவனுடைய மகிமையைக் காண நமக்கு வழிவகுக்கின்றன. மலைகள், மரங்கள், மிருகங்கள், பறவைகள், நீரூற்றுக்கள் அவருடைய மகிமையின் மகத்துவத்தை பறைசாற்றுகின்றன. அவைகளை காண்பவர்கள் நிச்சயம் மகிமையுள்ள தேவனின் மகத்துவத்தை உணர்ந்துகொள்ள முடிகின்றது. 
 “எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும். ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.” (ரோமர் 1:20)
யாரும் தேவனை அறியவில்லை என அவருடைய சிங்காசனத்திற்கு முன்னால் கொண்டுவரப்படும் போது கூற முடியாது. ஏனெனில் மவர் தம்முடைய மகிமையை எங்கும் வைத்திருக்கிறார். அதன் மூலம் அவருடைய மகிமை எத்தனை பெரிதென்று ஜாதிகள் விளங்கிக்கொள்ள வேண்டும். 
மனிதரோ நிச்சயம் தேவனை அறிந்தும் அவரை விரும்பாமற் போகும்போது அல்லது அவரை விட்டு நீங்கும் பொழுது அவர்கள் கெட்டுப்போவதற்கான முடிவு சமீபமாகின்றது. உங்கள் இருதயத்தை நீங்கள் ஏன் கடினமாக்கிக்கொள்ள வேண்டும்?
 “அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள். உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.” (ரோமர் 1:18)
மனிதர் உண்மையை அறிந்து கொள்ளுவதில் தாமதமுள்ளவர்களாயிருக்கிறார்கள். உணர்வற்றுப் போவதில் அவர்கள் முன்னணியில் திகழ்கிறார்கள். நீதியை பின்பற்ற முடியாமல் அநீதி செய்வதில் குறியாயிருக்கிறார்கள். நன்மை மறந்து தீமையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் செய்வதை அவர்களே அறியாதிருக்கிறார்கள். அவர்களுடைய வழியை அவர்கள் சீரமைக்கவில்லை. எத்தனை தூரம் அவர்கள் தங்களை அறியாமல் போய்விட்டார்கள். 
 “அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். (ரோமர் 1:22-23)
தேவனை மறந்த மனிதன் தன் அறிவீனத்தால் செய்யும் ஏளனமிக்க காரியங்களை தேவன் அவதானித்துக் கொண்டிருக்கின்றார். உயிருள்ள இறைவனை காண்பதில் உள்ள ஈடுபாட்டை மனிதன் இழந்து மாயமான உலகில் உள்ளவைகளை தெய்வமாக்கிக்கொண்டு தன் சரீரத்தை கெடப்பண்ணுகின்றான். தன் வாழ்க்கையை அற்ப கல்லுகளுக்கு ஒப்படைக்கின்றான். உக்கிப்போகும் மரக்கட்டையை தனக்கு தெய்வமாக்கிக் கொள்ளுகிறான். அவைகள் அவனை மீட்குமோ? அவனது மரணத்தின் பின்னர் அவைகள் அவனுக்கு வழிகாட்டுமோ? 
ஆகையினால் அவர்கள் பொல்லாப்பை செய்து தேவ கோபத்தை தங்கள் மேல் வருவித்துக்கொள்ளுகிறார்கள். 
“அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்திலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு. பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
 புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குப் கீழ்ப்படியாதவர்களுமாய்,
 உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவஅன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.”
(ரோமர் 29-32)
குற்றவாளியே இரட்சிப்பை இயேசுவிடமிருந்து பெற்றுக்கொள். அல்லது தேவனின் கோபத்தண்டனைக்கு ஆளாகு!

Uyiron · 31 views · 2 comments
வசதியில் பெருமை
20 Jun 2010 


வசதிகள் ஒருபோதும்
நிரந்தரமாகி விடாது.
வாழ்விலே தினம் மாற்றமுண்டு
வசதியில் நம்பிக்கை வையாதே

எம்மிடம் உள்ள ஐஸ்வரியங்களைக் குறித்து நாம் மிகவும் மகழ்வு கொள்ளலாம், ஆயினும் இவ்வுலக பொருட்கள் அழிவுக்குரியவை. அவைகளால் ஒருபோதும் எங்களை மீட்டுக்கொள்ள முடியாது. நாங்கள் அவைகளை எடுத்துக்கொண்டு செல்லவும் முடியாது. அழிவுள்ள பொருட்களில் நம்பிக்கை கொள்வது மனிதனின் விருப்பமாயிருக்கின்ற போதிலும் நிச்சயம் அதின் முடிவோ வேதனைக்குரியது.
உலகத்தில் உள்ளதை விடவும் தேவனின் காரியங்கள் அதிக முக்கியத்துவமுள்ள காரியங்களாகும். தேவனைப ;பற்றிக்கொள்வது எத்தனை இன்பமானது
“தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற,
ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,
எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே.
அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது. அது ஒரு போதும் முடியாது.
ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.
தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம். அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்.
ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை. அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.
இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் பைத்தியம். ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா.)
ஆட்டுமந்தையைப்போலப் பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள். மரணம் அவர்களை மேய்ந்துபோடும். செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள். அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.
ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.)
ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.
 அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை. அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை.
 அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும், 
 அவன் என்றென்றைக்கும்  வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான்.
 20. கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.
(சங்கீதம் 49:6-20)
Uyiron · 27 views · 2 comments
ஆசீர்வாத வழிகள்
18 Jun 2010 

பரிசுத்த வேதாகமம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்க பல வழிகளைக் காட்டுகின்றது. அதின் ஒவ்வொரு எழுத்தும் எமக்குரிய ஆசீர்வாதமாகவே உள்ளது. 1பேது-1:25 கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

இவ்வித ஆசீர்வாதத்தை தேவன் யாருக்கு கொடுக்கிறாரோ அவர்கள் பூமியை சுதந்தரிப்பார்கள். அவர்களுடைய எதிரிகளுக்கோ தேசத்தில் இடமிராது. இன்று இவ்வித ஆசீர்வாதத்தை இஸ்ரேல் எனும் ஜாதி பெற்றுள்ளது. சங்-37:22 அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள்.

தேவனுடைய ஆசீர்வாதம் யார் மேல் காணப்படுகின்றதோ அவர்களைக் குறித்து உலகம் பயப்படும். உலக நாடுகளில் அவர்களைக் குறித்த பயம் காணப்படும். சங்-67:7 தேவன் எங்களை ஆசீர்வதிப்பார். பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.

இன்று தமிழர்களையும் இஸ்ரவேல் தேசத்தாரையும் தேவன் மிகவும் பலமாக ஆசீர்வதிப்பதை நாம் கண்களால் காணமுடிகின்றது. ஏனெனில் தேவனே ஆசீர்வதிப்பவர். சங்-107:38 அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள். அவர்களுடைய மிருகஜீவன்கள் குறையாதிருக்கப்பண்ணுகிறார்.

கர்த்தர் தமக்காக யார் யாரையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறாரோ அவர்களையெல்லாம் அவர் ஆசீர்வதிப்பார். அவர்களுடைய குடும்பங்களை கடவுள் ஆசீர்வதிப்பார். சங்-115:12 கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார். இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.

கர்த்தருடைய ஆசீர்வாதத்தின் காரணமாக செல்வமும் ஐசுவரியமும் கிடைக்கின்றது. நீதி-10:22 கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும். அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.

உலகில் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜாதி ஆசீர்வாதமாயிருந்து ஏனைய உலக நாடுகளுக்கு ஆசீர்வாதத்தை தருமென வேதாகமம் கூறுகிறது. அந்த ஜாதி ஆபிரகாமிலிருந்து ஈசாக்குக்கூடாக வந்த இஸ்ரேல் ஆகும். ஆதி-22:17 நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், 18. நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். (ஆபிரகாமின் சந்ததியில் அரபியரும் யூதரும் சேர்த்துக்கொள்ளப்படுவார்களெனினும் யூதர்கள் தங்களது தனித்தன்மையை இன்றளவும் விட்டுக்கொடுக்கவில்லை என்பதால் பூரண ஆசீர்வாதத்தை அவர்களில் காணலாம். அரபியரில் அநேகர் ஏனைய நாடுகளில் கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் இதற்கு பாத்திரரல்ல. “ஆதி 25:11. ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார்.”)

கர்த்தர் ஆபிரகாமை தொடர்ந்து அவனது மகனை ஆசீர்வதித்தார். அதினால் அவன் ஐசுவரியவானான். ஆதியாகமம் 26:12-13. ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான். கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான். அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். (ஈசாக்கிலிருந்து ஏசாவுக்கு ஆசீர்வாதம் செல்லாமல் யாக்கோபிற்கு சென்றது. ஏசாவும் ஆசீர்வாதத்திற்கு ஏற்றவனாயிருந்தும் ஏனைய ஜாதிகளோடு கலந்து போனதால் அவனது சந்ததியும் இதற்கு பாத்திரமல்ல)

யாக்கோபிற்கே தேவனது பூரண திட்டத்தின் ஆசீர்வாத்தினால் முழுமையான இஸ்ரவேலுக்கான ஆசீர்வாதம் ஆரம்பிக்கின்றது. இங்கு யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் எனப்படுவதோடு ஆண்டவர் தமது ஆசீர்வாதத்தை யாக்கோபிலிருந்து ஆரம்பிக்கின்றார். ஆதியாகமம் 28:13-15. அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர். நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும். நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய். உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

தேவன் யாக்கோபிற்கு கட்டளையிட்டதை நிறைவேற்றியதை இஸ்ரேல் சரித்திரத்தில் நாம் இன்று காண முடிகின்றது. ஆசீர்வதிக்கப்பட்ட இஸ்ரவேலராலேயே உலகம் ஆசீர்வதிக்கப்பட முடியும். ஆதி 28:15 உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

யாக்கோபின் பன்னிரண்டு குமாரரும் ஆசீர்வாதமான இஸ்ரேல் கோத்திரத்திற்கு தலைமையாகினர். அவர்களையே தேவன் இந்த உலகில் ஆசீர்வாதமுள்ளவர்களாவும், ஏனைய ஜாதிகளுக்கு ஆசீர்வாதமாகவும் மாற்றினார்.


சங்கீதம் 128:1-6
1. கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
2. உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய். உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
3. உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள். உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
4. இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.
5. கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார். நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
6. நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

Uyiron · 24 views · 1 comment
தரித்திருங்கள்
17 Jun 2010 
வரப்போகும் இராஜாவின் ஆட்சிக்குத்தக்க ஆடையை இன்றே அணிந்து கொள்ளுங்கள். இராஜாவை வரவேற்க ஆயத்தமாகுங்கள். இராஜா வந்தபின் அவருக்காய் ஆயத்தப்பட முடியாது. அதற்கு முன்னரே ஆயத்தமாகியோரே அவரோடு கூடச் செல்லமுடியும். 

இறுதிய நேர ஆயத்தம் முடியவே முடியாது. இப்போதே ஆயத்தம் செய்ய வேண்டிய வேளை. இப்போதே இராஜாவின் முகத்தைக் காண உன் வழிகளை ஆயத்தப்படுத்து. உன் உள்ளத்தை இப்போதே சுத்தமாக்கி உன் இராஜாவிற்காய் ஒழுங்குபடுத்திக்கொள். அவர் வரும் போது உன் உள்ளத்தில் அசுத்தம் காணப்படுமாயின் அந்தோ நீ நித்திய ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவாய். 

இராஜா வரும் நேரத்தை அறிந்தவன் யார்? அவருடைய வருகையின் நாளை யார் அறிவிக்கக்கூடும்? அவர் தமது கோபத்தை வெளிப்படுத்தும் நாளில் அவருக்கு எதிராய் நிற்கத்தக்கவன் யார்? அவருடைய கோபத்திற்கு தப்பித்துக்கொள்ளக்கூடியவர் யாவர்? 

நிச்சயமாக இராஜாவின் வருகையின் நாள் சீக்கிரம் உண்டெனினும் தேவனுக்கு மாத்திரம் தெரிந்த அந்த நாள் உலகில் ஒரு மாந்தரும் நினையாத நாளில் நினையாத நேரத்தில் இடம்பெறுமென்றே வேதாகமம் கூறுகின்றது. கிறிஸ்துவின் வருகையோடு பழைய உலகத்திலிருந்து புதிய உலகிற்குள் உட்பிரவேசிக்கக்கூடிய உரிமை அவருக்காய் ஆயத்தப்பட்டவர்களுக்கே உண்டு. ஆயத்தமாய் உள்ளவர்கள் எவர்களோ அவர்கள் புதிய உலகிற்குள் பிரவேசிப்பார்கள். 

எவ்வாறு ஆயத்தமுள்ளவர்களாக மாறுவது? உங்களை நீங்கள் ஆயத்தமாக்கிக் கொள்ளாவிட்டால் நீங்களே உங்களை கெடுத்துக்கொண்டவர்களாவீர்கள். பரலோக வஸ்திரம் இலவசமாய் தரப்படுகின்றது. அது இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதால் இலவசமாய் தரப்படுகின்றது. இயேசுவின் மரணத்தை உயிர்த்தெழுதலை விசுவாசிப்பவர்களான நீங்கள் அந்த பரலோக வஸ்திரத்தை பெற்றுக்கொண்டவர்கள். அதற்கு முத்திரையாக உங்களில் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறார். அந்த வஸ்திரம் பழையதாகி போய்விடாமல் காத்துக்கொள்ளுங்கள். தினமும் தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தால் உங்கள் ஜெபத்தால் உங்கள் ஆடையை புதுப்பித்துக்கொள்ளுங்கள். அப்போது கிறிஸ்துவின் வருகையிலே நீங்கள் ஆயத்தமாய் அவருடன் பயணமாகலாம். 

ஆதலால் உங்கள் ஆடையை தரித்துக்கொள்ளுங்கள். ஆண்டவர் இயேசுவின் வருகைக்காய் ஆயத்தமாயிருங்கள். உங்கள் பரிசுத்தத்தை நிலைநாட்டுங்கள். தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருங்கள். கிறிஸ்து அப்போது உங்களை மிகவும் ஆவலுடன் ஏற்றுக்கொள்வார். நீங்கள் சதாகாலமும் இயேசுவோடு வாழ்வீர்கள். அவருடைய ஆட்சி சமாதானமும், நீண்டதுமாயிருக்கும். ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு உலகிற்கு வந்து மரித்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவானவர் மீண்டும் இராஜாதி இராஜனாக வருகிற அவருக்கே மகிமையுண்டாவதாக.

எபேசியர் 6
  1. பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.
  2. உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்
  3. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
  4. பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.
  5. வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்;கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து.
  6. மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.
  7. அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து,
  8. மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்.
  9. எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.
 10. கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
 11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
 12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
 13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
 14. சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்.
 15. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்.
 16. பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
 17. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
 18. எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
 19. சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக,
 20. நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.
 21. அன்றியும், எனக்கடுத்த காரியங்களும், என் சுகசெய்திகளும் உங்களுக்குத் தெரியவரும்படிக்கு, அவைகளையெல்லாம் நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாயிருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான்.
 22. நீங்கள் எங்கள் செய்திகளை அறியவும், அவன் உங்கள் இருதயங்களுக்கு ஆறதல் செய்யவும், அவனை உங்களிடத்தில் அனுப்பினேன்.
 23. பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரருக்குச் சமாதானமும் விசுவாசத்தோடுகூடிய அன்பும் உண்டாவதாக.
 24. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.

Uyiron · 29 views · 1 comment
விடுதலை
16 Jun 2010 

ஒருவராலும் தங்களை தாங்களே விடுவித்துக் கொள்ள முடியாது. எதிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாது என்றால் எல்லாவற்றிலுமிருந்தே தான். இல்லை நான் விடுதலையாக சுதந்திரமாக இருக்கின்றேன் என்று கூறலாம். ஆயினும் நீ சுதந்திரமாக இல்லை. நீ இன்னமும் விடுதலையாகவில்லை. 

அவ்வாறாயின் எதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என உன்னால் கேட்க முடியும். ஆம் பாவக்கட்டிலிருந்து விடுதலை அவசியம். 

மனிதன் பாவ உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். பாவமற்ற புதிய உலகினை சீக்கிரம் ஒருவர் கொண்டுவரப்போகின்றார். அந்த புதிய உலகிற்கு செல்ல முடியாமல் நீ உள்ளாய். அந்த விடுதலை உனக்கு இல்லை. அந்த புதிய உலகிற்கு பிரவேசிக்கத் தக்க சுதந்திரத்தை நீ இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை. 

புதிய உலகத்திற்கான அழைப்பு உனக்கு உண்டாகும் வரைக்கும் நீ விடுதலை பெறவில்லை. நீ சுதந்திரவாளி அல்ல. அப்படியாயின் எவ்வாறு இந்த சுதந்திரத்தை பெற்றுக்கொள்வது? அதற்கான விலை என்ன? எப்படி எங்கு இந்த அழைப்பினை பெற்றுக்கொள்வது? பாவமான இந்த உலகத்திலிருந்து விடுவித்துக் கொள்ள யார் உள்ளார்? இந்த பாவ உலகத்திலிருந்து என்னால் விடுதலையாக முடியுமா? 

உண்மையான விடுதலை இதுவே. இங்கேயே சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். ஆனாலும் இன்னுங் கொஞ்ச நாளுக்கு இந்த பாவ உலகத்தில் வாழவேண்டிய கட்டாயத்தில் நீ உள்ளாய். அதிலிருந்து புதிய உலகிற்கான விடுதலையைபெற்றுக்கொடுக்கவே தேவனுடைய மகனாகிய இயேசுக்கிறிஸ்து பூமியை நோக்கி மனிதனாக பிறந்தார். மரித்து உயிர்த்த இயேசு இப்போது அந்த டீதிய உலகினை ஆயத்தம் பண்ணிக்கொண்டு இருக்கின்றார்.

உனக்கான அந்த விடுதலையை தரக்கூடியவர் அந்த இயேசு மட்டுமே. புதிய உலகிற்கு பிரவேசிப்பதற்கான விலையை அவர் சிலுவையில் கொடுத்து பலியாகிவிட்டார். நீ முற்றிலும் இலவசமாய் புதிய உலகிற்குள் பிரவேசிக்க முடியும். அந்த புதிய உலகம் கிறிஸ்துவின் இரணடாவது மாபெரும் வருகையின் பின்னர் உனக்குக் கிடைக்க் கூடும். அதற்கு முன்னரே இந்த உலகத்தில் இப்போது நீ வாழ்ந்து கொண்டிருக்கும் போதே அவருடைய சிலுவை மரணத்தையும் அவருடைய உயிர்த்தெழுதலையும் விசுவாசிப்பாயானால் அதற்கான இலவச அனுமதி உனக்கும் உண்டு.

இலவச விடுதலையை இப்போதே நீ அனுபவிக்க இயேசு கிறிஸ்துவை நோக்கி மன்றாடு. தனிமையாக உன் உள்ளத்தில் அவரை நோக்கி விண்ணப்பம் செய். உண் வேண்டுதலை நீ எங்கும் செய்து அவரை உன் இரட்சகராக தனிப்பட்ட வாழ்வில் பெற்றுக்கொள். எப்போது நீ இயேசுவை இரட்சகராக உன் உள்ளத்தில் ஏற்றுக்கொள்கிறாயோ அன்றே உனக்கு விடுதலை. நீ இப்போது விடுதலை பெற்றாய். இயேசு;கிறிஸ்து உனக்கு சுதந்திரம் தந்தார். இனி நீ சுதந்தரவாளி. நீ பூரண விடுதலை பெற்றாய்.

உபாகமம் 32
 16. அந்நிய தேவர்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள். அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள். 
 17. அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை. தாங்கள் அறியாதவைகளும், தங்கள் பிதாக்கள் பயப்படாதவைகளும், நூதனமாய்த் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள்.
 18. உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய். உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய். 
 19. கர்த்தர் அதைக் கண்டு, தமது குமாரரும் தமது குமாரத்திகளும் தம்மைக் கோபப்படுத்தினதினிமித்தம் மனமடிவாகி, அவர்களைப் புறக்கணித்து: 
 20. என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன். அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன். அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி. உண்மையில்லாத பிள்ளைகள். 
 21. தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, தங்கள் மாயைகளினால் என்னைக் கோபப்படுத்தினார்கள். ஆகையால் மதிக்கப்படாத ஜனங்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட ஜாதியினால் அவர்களைக் கோபப்படுத்துவேன். 
 22. என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும். அது ப+மியையும் அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும்.
 23. தீங்குகளை அவர்கள்மேல் குவிப்பேன். என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பிரயோகிப்பேன். 
 24. அவர்கள் பசியினால் வாடி, எரிபந்தமான உஷ்ணத்தினாலும், கொடிய வாதையினாலும் மாண்டுபோவார்கள். துஷ்ட மிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன். 
 25. வெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும் கன்னியையும் குழந்தையையும் நரைத்த கிழவனையும் அழிக்கும்.
 26. எங்கள் கை உயர்ந்ததென்றும், கர்த்தர் இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைஞர் தப்பெண்ணங்கொண்டு சொல்லுவார்கள் என்று, 
 27. நான் சத்துருவின் குரோதத்திற்கு அஞ்சாதிருந்தேனானால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதற அடித்து, மனிதருக்குள் அவர்களுடைய பெயர் அற்றுப் போகப்பண்ணுவேன் என்று சொல்லியிருப்பேன்.
 28. அவர்கள் யோசனைகெட்ட ஜாதி, அவர்களுக்கு உணர்வு இல்லை. 
 29. அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார்.
 30. அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?
 31. தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய சத்துருக்களே தீர்மானிக்கிறார்கள்.
 32. அவர்களுடைய திராட்சச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சச்செடியிலும் தாழ்ந்த ஜாதியாயிருக்கிறது, அவைகளின் பழங்கள் பித்தும் அவைகளின் குலைகள் கசப்புமாய் இருக்கிறது.
 33. அவர்களுடைய திராட்சரசம் வலுசர்ப்பங்களின் விஷமும் விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது.
 34. இது என்னிடத்தில் வைத்துவைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டிருக்கிறதில்லையோ?
 35. பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது. ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும். அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது. அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும்.
 36. கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன் போயிற்றென்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார். 
 37. அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைத் தின்று, பானபலிகளின் திராட்சரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே?
 38. அவைகள் எழுந்து உங்களுக்குச் சகாயம்பண்ணி உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும். 
 39. நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள். நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன். நான் காயப்படுத்துகிறேன். நான் சொஸ்தப்படுத்துகிறேன். என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.
 40. நான் என் கரத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன். 
 41. மின்னும் என் பட்டயத்தை நான் கருக்காக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் சத்துருக்களிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பேன். 
 42. கொலையுண்டும் சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிக்கப்பண்ணுவேன். என் பட்டயம் தலைவர் முதற்கொண்டு சகல சத்துருக்களின் மாம்சத்தையும் பட்சிக்கும். 
 43. ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள். அவர் தமது ஊழியக்காரரின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, தம்முடைய சத்துருக்களுக்குப் பதிலளித்து, தமது தேசத்தின்மேலும் தமது ஜனங்களின்மேலும் கிருபையுள்ளவராவார்.

Uyiron · 19 views · 1 comment
கர்த்தருக்கு விரோதமான விக்கிரகங்கள்
15 Jun 2010 

மனிதனுடைய உள்ளமானது கர்த்தருக்கு விரோதமான காரியங்களை சிந்திக்கின்றது. அது பாவத்தை தன் உள்ளத்திலிருந்து வெளியே கொட்டி தன் அசுத்தத்தைக் காண்பிக்கின்றது. மனிதனுக்குள் செல்லுபவையல்ல, மனிதனிலிருந்து வெளிப்படுகின்ற அருவருப்புக்களே அவனை தீட்டுப்படுத்துகின்றன. 

மனிதனுடைய உள்ளம் தேவனுக்கு எதிரிடையாக போய்க்கொண்டிருக்கின்றது. பாவமும், பாவ எண்ணங்களுமே உன்னுடைய மனதிலுள்ள விக்கிரகங்கள். அதனை நீக்கிவிட வேண்டியது உன்னுடைய கடமையாகும். தேவனுடைய வார்த்தைக்கு எதிராக இந்த அருவருப்புக்கள் செயல்படுகின்றது. 

என்னுடைய உள்ளத்திலுள்ள அழுக்குகள் தேவனை எப்போதும் எதிர்க்கத் துணிகின்றன. அவைகள் மேலும் என்னை படுகுழிக்குள் தள்ளி விடுகின்றன. தேவனை பின்பற்ற முடியாமற் போகின்றேனே என எண்ணுகின்றீர்களா? எவ்வாறு உங்களுக்கு இவ்வித இரண்டு எண்ணங்கள்? ஒன்று தேவனுக்காக வாழவேண்டும். அல்லது அருவருப்புக்களை சுமந்தவண்ணம் அதனோடு அழிந்து போகவேண்டும். அருவருப்புக்களின் மேல் அருவருப்புக்களை செய்து ஏன் தேவனை விட்டு பிரிந்து போவானேன். 

கர்த்தருக்கு முன்பாக உன்னுடைய அக்கிரமங்கள் அதிகரிப்பதை தேவன் ஒருபோதும் விரும்புவதில்லை. பாவத்தினால் நீ அழிந்து போவதை தேவன் ஒருபோதும் விரும்பிடவில்லை. ஆதலினால் உன் வாழ்க்கையை தேவனுக்கு ஒப்புவித்து பூரணமாக கிறிஸ்துவின் சித்தத்தை செய்யவேண்டியது உன் கடமையாக உள்ளது.

உன் மனதில் எழும்புகின்ற பாவங்கள் எனும் விக்கிரகங்களை தூக்கியெறிய வேண்டியது உன்னுடைய கடமை. அதிலிருந்து நீ பெரும் விடுதலையை அடைவதற்காய் அன்றோ கிறிஸ்து உன்னிமித்தம் துன்பப்பட்டு மரித்தார். அதிசயத்தை காண உன் கண்களை திருப்பாதே. பாவ மன்னிப்பை தரும் கிறிஸ்துவே உன் இரட்சகர் என்பதை அறிந்துகொள். 

எசே 14:3
மனுபுத்திரனே,  இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிறார்களே. இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா?
எசே 14:4
ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன்.
எசே 14:5
அவர்கள் எல்லாரும் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, என்னைவிட்டுப் பேதலித்துப்போனார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசே 14:6
ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள். உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர்  உரைக்கிறார்.
எசே 14:7
இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் பேதலித்து, தன் நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கெதிராக வைத்துக்கொண்டிருக்கிற  எவனாகிலும் தீர்க்கதரிசியின் மூலமாய் என்னிடத்தில் விசாரிக்க வந்தால், அவனுக்குக் கர்த்தராகிய நானே உத்தரவுகொடுத்து,
எசே 14:8
அந்த மனுஷனுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்பி, அவனை அடையாளமாகவும் பழமொழியாகவும் வைத்து, அவனை என் ஜனத்தின் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்துப்போடுவேன். அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
எசே 14:9
ஒரு தீர்க்கதரிசி எத்தப்பட்டு ஒரு விசேஷத்தைச் சொன்னானாகில், அப்படிக் கொத்த தீர்க்கதரிசியைக் கர்த்தராகிய நானே எத்தப்படப்பண்ணினேன். நான் அவனுக்கு விரோதமாக என் கையை நீட்டி, அவனை இஸ்ரவேல் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அழிப்பேன்.
எசே 14:10
அப்படியே அவரவர் தங்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள். தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும்.

Uyiron · 61 views · 1 comment
கிறிஸ்தவ குடும்பங்களில் தேவனுடைய ஆசீர்&#
14 Jun 2010 


அநேக வாலிப கிறிஸ்தவ பராயத்தினர் தங்கள் குடும்பத்தின்மூலமாய் கிறிஸ்து தருகின்ற ஆசீர்வாதங்களை எண்ணாமற் போகின்றார்கள். அதாவது அவர்களதுகிறிஸ்தவ குடும்பமானது ஆசீர்வாதமுள்ளது என்பதை அறியமுடியாதுள்ளனர். இவர்களில் அநேகமானோர்உலகில் உள்ளவைகளைக் குறித்து அதை எண்ணிப்பார்த்து பொறாமையடைகின்றனர். வசதிகள் நிறைந்தஏனையோரின் வாழ்க்கை குறித்த பொறாமை அவர்கள் உள்ளங்களில் குடிகொள்கின்றது. ஏனைய உலகத்துவாலிபரின் போலியான சுதந்திரத்தைக் குறித்து பொறாமைப்படுகின்றார்கள். ஒன்றுமில்லாததையும்மாயமானதுமான தற்காலிக ஆசைகளில் பிரியப்படுகின்ற வாலிபர் குறித்து வேதாகமம் எல்லாம்மாயை என்கின்றது. இளவயதும் வாலிபமும் மாயையே என்கின்றார் மிகப்பெரும் ஆலயம் கட்டியமாபெரும் மன்னரான சாலமோன் அரசர். இவ்வித உலக ஆசாபாசங்களில் சிக்கித் தங்களை கெடுத்துக்கொள்ளுகின்றஇளம் பராயத்தினரை கிறிஸ்துவிற்குள் அழைப்போம். அவர்களுக்கு நாம் நித்திய தேவனுடைய இராஜ்யத்தைபிரசித்தம் பண்ணுவோம். பரம தேசத்து வாஞ்சையை நாம் இளம் வாலிப பிராயத்தினருக்கு எடுத்துரைக்கநம்மை நாமே அர்ப்பணிப்போம்.

 

வெளிப்பிரகாரமான தொழில்கள் ஒருபோதும் அதிகளவிலான ஆசீர்வாதத்தைகொண்டுவராததை நான் கண்டிருக்கின்றேன். இன்றைய நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் புதியசந்ததியினரே உங்களில் அநேகர் உலகியல் ஆசாபாசங்களுக்காக அவைகளை நாடிக்கொண்டிருக்கிறீர்கள்.இந்த உலகத்தின் மாய்மால ஆசைகளுக்காக அநேகர் தங்கள் வாழ்நாட்களை இழந்து கொண்டிருக்கின்றனர்.அவர்களது நாட்கள் மாயைக்காக தேடி அலைந்தே முடிவாகின்றது. கெட்டகுமாரன் போல் இறுதியானநேரத்தில் வந்தவன் கூட தன்னால் ஒன்றும் இயலாது என்ற போது புதுப்பிக்கப்பட்ட சூழ்நிலைஉருவாகியது. இவன் போலவும் வரமுடியாதவர்கள் நிலையோ கேடு. ஐயோ கேடு,

உனக்கான ஆசீர்வாதத்தை தரக்கூடியவர் இயேசு மாத்திரமே,அவருடைய வழிகள் நித்திய பாதைக்கு நம்மைக் கொண்டு செல்லும். ஆகையினால் உன் உலக மாயைகளிலிருந்துவிடுபட்டு கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொண்டு உன் ஜீவியத்தை புதுப்பித்துக்கொள். ஏனெனில்காலம் சீக்கிரம் கடந்து போகின்றது. உன் நாட்களும் கரைகின்றது. வாலவயது அற்றுப்போகுமுன்னே கர்த்தருக்காய் உன் வாழ்க்யை அர்ப்பணித்துப் பாரு.. ஆசீர்வாதத்தை அடைவாய் பாரு..

           

சங் 89:20-30

என் தாசனாகிய தாவீதைக்கண்டு பிடித்தேன். என் பரிசுத்ததைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.

என் கை அவனோடே உறுதியாயிருக்கும். என் புயம் அவனைப்பலப்படுத்தும்.

சத்துரு அவனை நெருக்குவதில்லை. நியாயக்கேட்டின்மகன்அவனை ஒடுக்குவதில்லை.

அவன் சத்துருக்களை அவனுக்கு முன்பாக மடங்கடித்து, அவனைப்பகைக்கிறவர்களை வெட்டுவேன்.

என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும். என் நாமத்தினால்அவன் கொம்பு உயரும்.

அவன் கையைச் சமுத்திரத்தின் மேலும், அவன் வலதுகரத்தைஆறுகள் மேலும் ஆளும்படி வைப்பேன்.

அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின்கன்மலையென்று சொல்லுவான்.

நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்.

என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்.என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.

அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன்ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வேன்.

சங் 89:33-37

ஆனாலும் என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என்உண்மையில் பிசகாமலும் இருப்பேன்.

என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதைமாற்றாமலும்இருப்பேன்.

ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்குநான் பொய்சொல்லேன்.

அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும். அவன் சிங்காசனம்சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.

சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச்சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.)

சங் 89:38-48

ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத்தள்ளிவிட்டீர். நீர்அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானீர்.

உமது அடியானுடன் நீர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு,அவன் கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.

அவன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவன் அரணானஸ்தலங்களைப் பாழாக்கினீர்.

வழிநடக்கிற யாவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள். தன்அயலாருக்கு நிந்தையானான்.

அவன் சத்துருக்களின் வலது கையை நீர் உயர்த்தி, அவன்விரோதிகள் யாவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர்.

அவன் பட்டயத்தின் கருக்கை மழுக்கிப்போட்டு, அவனை யுத்தத்தில்நிற்காதபடி செய்தீர்.

அவன் மகிமையை அற்றுப்போகப்பண்ணி, அவன் சிங்காசனத்தைத்தரையிலே தள்ளினீர்.

அவன் வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர்.(சேலா.)

எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ?உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ?

என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்.மனுபுத்திரர்யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்க வேண்டியதென்ன?

மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப்பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.)

Uyiron · 68 views · 3 comments
TSUNAMI alert
12 Jun 2010 
http://www.montrealgazette.com/news/world/Lanka+issues+tsunami+alert+after+Indian+Ocean+quake/3147456/story.html
Uyiron · 58 views · 2 comments
join request
12 Jun 2010 
http://www.facebook.com/group.php?gid=364117526974

Lipni · 73 views · 4 comments
தேவனுடைய வாசஸ்தலம்
01 May 2010 
தேவன் மக்களை தமது வாக்குத்தத்த தேசத்திற்குள் வழிநடத்தி செல்கின்றார். தேவனுடைய பிள்ளைகளுக்காக தேவன் ஆயத்தம் பண்ணுகின்ற தேசமானது இவ்வுலகத்தினின்றும் மாறுபட்டதாகும். கிட்டத்தட்ட அது இவ்வுலகை போன்றதாகும். ஆயினும் முழுiயாய் தேவனுடைய மகிமையால் நிறைந்திருக்கும். அங்கே துக்கமிராது, கண்ணீர் இராது, கவலை இராது.

மகிமையின் இராவாகிய தேவன் அங்கே அரசாளுவார். அவரின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறவராக இயேசுவை நீங்கள் காணமுடியும். இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக பூமியில் கொடுக்கப்பட்டதே எருசலேமாகும். ஆயினும் பரிசுத்த எருசலேமானது இறங்கிவரவுள்ளது. அதற்கு ஆயத்தப்படுவோர் தேவனுடைய நகரத்தில் வாழக்கூடியதாக ஆண்டவர் மாற்றுகின்றார்.

தேவனுடைய வாசஸ்தலத்தில் வாசம் செய்ய விரும்புவோர் அவருடைய குமாரன் மேல் விசுவாசம் கொள்ளும் போது அதனை இலவசமாய் பெற்றுக்கொள்வர். ஏனெனில் இயேசுவே எம்மையும் தேவனையும் இணைக்கும் வழியாக இருக்கின்றார். அவருடைய கிருபையினால் நித்திய ஜீவன் எமக்குள் ஊற்றப்படுகின்றது.

ஆயினும் ஓர் எச்சரிக்கை! வேதாகமத்தில் பத்து கன்னிகைகள் இராஜாவின் வருகைக்காக காத்திருக்கின்றனர். ஐந்து பேர் தங்களுக்கு தேவையான எண்ணையை ஆயத்தமாக கொண்டு வந்ததோடு தங்கள் விளக்குகள் அணைந்துவிடாமல் பாதுகாத்துக்கொண்டனர். மற்றைய ஐந்து பேரும் அவ்வாறல்ல. அவர்கள் விளக்குகளுக்கேற்ற எண்ணையை கொண்டுவராமலும் அதைக் குறித்த கவலையற்றவர்களாகவும் காணப்பட்டனர். இவ்வாறாக ஒரு இடத்தில் கூடியிருந்தார்கள். இப்போது நேரம் ஓடிக்கொண்டிருக்கின்றது. அவர்கள் எதிர்பார்த்திருந்த இராஜா வருவதற்கு தாமதமாகியது. அந்தோ எண்ணை கொண்டுவராத கன்னிகைகளின் விளக்குகள் மந்தமாகி அணையப்போகின்றன. உடனே அவர்கள் எண்ணை வைத்திருந்தவர்களிடம் தங்களுக்கு தரும்படி கேட்கின்றனர். அவர்களோ தங்களுடைய விளக்குகளுக்காய் அவற்றை ஊற்றிக்கொண்டனர். ஐந்து கன்னிகைகளுடைய விளக்குகள் அணைந்து போகும் நேரத்தில் தங்களுக்காக எண்ணை எடுத்துவர வெளியே ஓடிச்சென்றனர். அந்தோ! அவர்கள் போன அந்த நேரத்திலே இராஜா வந்து விட்டார். அங்கிருந்த ஐந்து பேருக்கு மாத்திரமே சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களுக்கு மாத்திரமே பரலோக இராஜ்ஜியத்தில் நுழைந்து ஆடிப்பாட முடிந்தது. மற்ற ஐந்து கன்னிகைகளுக்கும் நடந்தது என்ன? அவர்கள் திரும்பி வந்தபோது வாசல் மூடப்பட்டு தாளிடப்பட்டிருந்தது. அவர்களால் நுழைய முடியவில்லை. அந்தோ பரிதாபம் அவர்கள் கைவிடப்பட்டதினால் கதறினார்கள், அழுதார்கள், துக்கமடைந்தார்கள். ஆயினும் அவர்களை யாரும் கவனிக்கவில்லை. தேவனால் தரப்பட்ட நித்திய ஜீவனை அல்லது பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்ட நீங்கள் தொடர்ந்து இயேசுவின் வருகைக்காக ஆயத்தமாயிருங்கள்! ஆயத்தமாயிருங்கள்! உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து அவருடனே கூட வாழும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். நீங்கள் அவரை இழந்து போகும் நேரத்தில் இராஜா வந்துவிட்டால் உங்களுக்கு ஐயோ! ஆயத்தப்படுங்கள். நித்திய வாழ்வை தரும் இயேசுவை அழைக்க உன் வீடே போதுமானது. தனியாக மனதிற்குள்ளாக இயேசுவை பேர் சொல்லி அழையுங்கள்! ஆண்டவரே பாவியாகிய என்னை மன்னியும். உமது ஆவியால் என்னை நடத்தும். உமது பரலோக வாழ்வை சுதந்தரித்துக்கொள்ள உமது நித்திய ஜீவனை தந்தரும். இயேசு இந்த பூமியிலே எனக்காக வந்து தமது சரீரத்தை சிலுவையில் எனது பாவத்திற்காக ஒப்புக்கொடுத்து மரித்தார் என்பதை விசுவாசிக்கின்றேன். மரித்த இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தது போல என்னையும் மரணத்திலிருந்து உயிர்ப்பிக்க வல்லவர் அவர் என்பதை விசுவாசிக்கிறேன். ஆமேன்! நல்லது! இன்றே உங்கள் வாழ்க்கை இயேசுவின் கரத்தில் உள்ளது. இனி நீங்கள் கலங்குவது என்ன? இயேசுவின் மேல் உங்கள் பாரத்தை போட்டுவிட்டீர்கள். அவர் தான் இனி உங்கள் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை தொடருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

செப்பனியா 3
1. இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ!
2. அது சத்தத்துக்குச்செவிகொடுக்கவில்லை. அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அது கர்த்தரை நம்பவில்லை. அது தன் தேவனிடத்தில் சேரவில்லை.
3. அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள். அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
4. அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள். அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள். 5. அதற்குள் இருக்கிற கர்த்தர் நீதியுள்ளவர். அவர் அநியாயஞ்செய்வதில்லை. அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார். அநியாயக்காரனோ வெட்கம் அறியான். 6. ஜாதிகளைச் சங்கரித்தேன். அவர்கள் துருகங்கள் பாழாயின. அவர்களுடைய வீதிகளை ஒருவரும் கடந்து போகாதபடிக்குப் பாழாக்கினேன். அவர்களுடைய பட்டணங்கள் மனுஷர் இல்லாதபடிக்கும் குடியில்லாதபடிக்கும் அவாந்தரையாயின. 7. உன் வாசஸ்தலம் நிர்மூலமாகாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன். நான் அவர்களை எப்படித் தண்டித்தாலும், அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள். 8. ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். என் சினமாகிய உக்கிர கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன். பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும். 9. அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன். 10. எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலிருந்து என்னிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறவர்களாகிய சிதறடிக்கப்பட்டவர்களின் குமாரத்தியானவள் எனக்குக் காணிக்கை கொண்டுவருவாள். 11. எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளினிமித்தமும் அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய். அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன். நீ இனி என் பரிசுத்தபர்வதத்தில் அகங்காரங்கொள்ளமாட்டாய். 12. உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன். அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள். 13. இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயஞ்செய்வதில்லை. அவர்கள் பொய் பேசுவதுமில்லை. வஞ்சகநாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை. அவர்கள் தங்களைப் பயப்படுத்துவாரில்லாமல் புசித்துப் படுத்துக்கொள்வார்கள். 14. சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு. இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள். எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. 15. கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார். இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார். இனித் தீங்கைக் காணாதிருப்பாய். 16. அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும். 17. உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார். அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார். அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார். அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார். 18. உன் சபையின் மனுஷராயிருந்து, பண்டிகை ஆசரிப்பில்லாமையால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை நான் ஏகமாய்க் கூட்டிக்கொள்ளுவேன். 19. இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின யாவரையும் தண்டிப்பேன். நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக் கொள்ளுவேன். அவர்கள் வெட்கம் அநுபவித்த சகலதேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச் செய்வேன். 20. அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன். அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன். உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Uyiron · 69 views · 1 comment
அற்புதர்
24 Apr 2010 

எப்போதும் தன்னை நோக்கி பார்ப்பவர்களை கண்ணோக்க இறைவனுக்கு கடினமானதாக ஒன்றும் இல்லை. மக்களுடைய வாழ்வின் தேவைகளை சந்திப்பதற்கு இறைவன் தவிர வேறொருவரும் இல்லை. அன்றைய இயேசுவின் கால மக்கள் அவர் செய்த அற்புதங்களை கண்டு பிரமித்தனர். ஏறத்தாழ முப்பத்தி மூன்று ஆண்டுகளோடு அவர் பணி உலகில் நிறைவுபெற்றதாக அக்கால மத தலைவர்கள் அவரே தங்கள் இரட்சகர் என்பதை அறியாமல் அச்சம்பவங்களையே புதைத்து விட்டனர். அன்றோடு கிறிஸ்துவை மறந்துவிட்டதாக உலகம் புரியாமல் அறிவித்தது.


ஆனால் கிறிஸ்துவின் நற்செய்தி மனிதர்களால் அல்ல, கிறிஸ்துவே தம்மை வெளிப்படுத்தியவர்களால் நற்செய்தி உலகத்தில் பரவியது. இதற்கு உதாரணமான பவுல் வாழ்வில் ஒருபோதும் மனிதருடைய வார்த்தைகளை நம்பி இயேசுவை எற்றுக்கொள்ளவில்லை. மாறாக இயேசுவை குறித்து நற்செய்தி அறிவிப்பவர்களை தேடித்தேடி அழித்தது தான் பவுலின் வாழ்வில் பிரதான பணியாக இருந்தது. அவ்வித முரடர்கள் எப்போதும் நற்செய்திக்கு எதிராளிகளாகவே இருந்தனர். ஆனால் உலக மக்களுக்காக மரித்த இயேசு எப்போது பவுலுக்கு தரிசனமாய் தன்னை காண்பித்தாரோ அன்றைய தினம் நடந்த அற்புதம் பவுலை முற்றுமாய் மாற்றியது.


முரடனாயிருந்த பவுல் வாழ்வில் இயேசுவை கண்ணாரக்கண்ட காட்சியால் அவனே பிரதான நற்செய்தியாளனாய் கடைசிவரை இயேசுவிற்காய் குரல்கொடுத்தான். இயேசு தமது மரணத்திற்கு பின்னரும் ஒரு கொடுமையாளனை நற்செய்தி பணியாளராக மாற்றினார். அதைத்தான் வேதாகமம் “தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை” என்கின்றது. அற்புதங்களைக் கண்ணார கண்டவர்கள் தங்களது வாழ்வின் சுமைகளால் அவைகளை மறந்து விட்டனர். ஆயினும் இறுதிவரை இயேசுவின் காட்சி பவுலிற்கு நினைவுபடுத்திய காரியத்தினால் நற்செய்தியை கைவிட பவுலுக்கு மனதில்லை.


இயேசு இப்போது உயிரோடு இருக்கின்றார் என்பதுவே இன்றைய நற்செய்தி! இயேசுவால் செய்ய முடியாத காரியம் இன்றைய உலகில் உண்டோ? சுனாமி, பூகம்பம், எரிமலை எனும் அழிவுகளை இறைவன் தடுப்பதை விட அவற்றிலிருந்து உன்னை காப்பாற்றுகின்றார் என்பதுவே உன்னைக் குறித்து அவர் கொண்டுள்ள அக்கறை! உன்னை கைவிடாதிருப்பதே இறைவனுடைய பெரிய கிருபை! அவர் அற்புதத்தை மாத்திரம் உன் வாழ்வில் செய்துவிட்டு ஓய்ந்து விடுபவரல்ல! உன் நித்தியத்திற்காக தினமும் அவருடைய வழியில் நடப்பதுவே தேவன் எதிர்பார்க்கும் காரியமாக உள்ளது!

 

சங்கீதம் 46

1. தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். 2. ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், 3. அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். () 4. ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும். 5. தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது. அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார். 6. ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது. அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று. 7. சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார். யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். () 8. பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். 9. அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார். வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார். இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார். 10. நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள். ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன். 11. சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். () 

Uyiron · 89 views · 2 comments
அருட்கொடை
17 Apr 2010 
அருட்கொடைகள் பலவுள்ளன. சமாதானம் என்பது இறைவனால் அருளப்படுவது. அதனை இவ்வாறு வேதாகமம் காட்டுகின்றது. “தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்@ தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள். துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன். பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை” இவ்விதமான அருட்கொடை தற்காலிக இவ்வுலகை பற்றிப் பேசுகின்றது. இவ்வுலகத்தில் வாழும் மனிதன் வெறும் அற்பநாட்களிலேயே வேரறுந்து போய்விடுகின்றான். ஆனாலும் இறைவனின் திட்டம் மானிடன் தன்னோடு நீடிய நாட்களாய் ஆயுளுள்ளவனாய் வாழவேண்டும் என்பதே.


அதற்கும் இறைவனிடம் ஓர் திட்டம் உண்டு. அது தாம் யார் யாரெல்லாம் அவரை விசுவசிக்கின்றனரோ அவர்களெல்லாரும் கெட்டுப்போகாமல் நித்தியவாழ்வை பெற்றுக்கொள்ளும்படிக்கு அவரது ஒரே குமாரனை தந்தருளி இவ்வளவாய் இவ்வுலகில் அன்புகூர்ந்தார். இறைவனால் இறைவனின் குமாரன் உலக மாந்தரை மீட்கும்படியாக உலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனை இவ்வாறும் கூறலாம் இறைவன் தான் படைத்த மக்கள் அழிந்து போய் விடாதிருக்க அவர்களை மீட்பதற்காய் தம்முடைய அதிகாரத்தை துறந்து தாமே மானிட ரூபம் கொண்டார் என்பதாகும்.


நீண்ட ஆயுளை பெற்றுக்கொள்வதற்கு சிலுவையில் மரித்த தேவனை விசுவசிப்பதே ஒரே வழி. இதற்கு இன்னமும் மாற்றுவழி கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டுபிடிக்கப்போவதுமில்லை. நீண்ட ஆயுளை பெற்றுக்கொள்பவர் வாழுகின்ற இடமே தேவனுடைய இராஜ்ஜியம். தேவனுடைய இராஜ்யமும் மனிதருக்குக் கிடைத்த ஒரு மாபெரும் அருட்கொடையே. அதென்னவெனில் தேவன் அவரை விசுவாசிப்போருக்கு அருளிய நித்திய வாழ்வே மனிதருக்கு உலகில் கிடைக்கத்தக்க அரியதும் மிக விலையுயர்ந்ததுமாகும்.


வெறும் மானிட வாழ்வில் மனிதன் எத்தனை பெருங்காரியங்களை சாதிப்பவனாயினும் அவன் மரித்தபின் கொண்டுசெல்லப் போவது ஒன்றுமில்லை. அதாவது மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தலாம். ஆயினும் பலன் ஒன்றும் அவனுக்கு இல்லை. அவனது ஜீவன் நிரந்தரமாய் தேவனை விட்டுத்தானே இருந்தது. ஆகவே அவனுக்கு பங்கொன்றுமில்லை. ஆயினும் தன் ஜீவனை ஆதாயப்படுத்திக்கொள்ள இயேசுவின் மீதான பற்றே அவனுக்கு தேவை. இயேசுவை பற்றாத விசுவசமில்லா வாழ்வினால் தேவனிடத்தில் ஒன்றுமில்லை.


தேவனுடைய அருட்கொடை இயேசு கிறிஸ்து. அவரை அடைபவர்கள் நித்திய வாழ்வை அடைபவராவர். நித்திய வாழ்வை பெற்றோர் மரணத்தினால் உலகை விட்டு நீங்கி தேவனண்டையில் சேர்ந்து கொள்வர். நித்திய வாழ்வை பெறாதோர் முடிவு மரணத்துடன் முடிகிறது. அவர்கள் மீளவும் இறைவனை காண சந்தர்ப்பம் ஒருபோதும் இல்லை. ஆதலால் நித்திய வாழ்வு இறைவனது பெரும் கொடை. அது நித்திய செல்வம். அதை அடைந்து கொள்வோர் பெரும் பாக்கியம் பெற்றோர்.


ஆயினும் நித்திய வாழ்விற்கு எதிரிகள் இவைகள் தாம். உலகப் பற்று முதல் எதிரி, பலவித ஆசைகள், பெருமை போன்றனவெல்லாம் இறைவனை மனிதன் காணா வண்ணம் கண்களை மறைக்கும் தடுப்புச்சுவர்களாகும். இதன் அடிப்படையான பாவம் மனிதனை தேவனிடமிருந்து மிகவும் தூரத்தில் வைத்துவிடுகின்றது. பாவமானது சாத்தானின் தந்திரத்தின் முதற்படி. அதில் சிக்கியோர் விடுதலை பெறவும் தேவன் வழியேற்படுத்தியுள்ளார். அதுவே தேவனது சிலுவை மரணத்தின் மூலமாய் சாத்தானுக்கு ஏற்படுத்திய தோல்வி. சாத்தானை இயேசு சிலுவையில் தோற்கடித்தார் என்பதை விசுவசிக்கும் அனைவராலும் பாவத்தை நீக்கிவிட முடியும். ஆகவேதான் இயேசு சிலுவையில் மரித்தார் என்பது சாத்தானால் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை. இயேசுவின் சிலுவை மரணம் இயேசுவிற்கு ஏற்பட்ட தோல்வியல்ல. மனிதனுக்கு விடுதலை பெற்றுத் தர வந்த இறைவனுடைய வெற்றியே சிலுவை மரணம். அதனால் தான் மரணம் வெறும் மூன்று நாட்களுக்குள்ளாய் உடைக்கப்பட்டது. ஆம் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த இறைவனுக்கு முன்னால் இந்த உலகின் ஆதிக்கம் என்ன செய்யப்போகின்றது. அவ்விதம் மரணத்தை உடைத்த இயேசுவை தேவனுடைய குமாரன் என்று விசுவசிப்பவர்களுக்கு இவ்வுலகத்தின் மேலான ஒன்றான நித்திய வாழ்வு இலவசமாய் இறைவனால் அருளப்படுகின்றது.

உன் வாழ்வின் இலட்சியம் எதுவாகவிருந்தாலும் அதன் இறுதி முடிவை நீ எவ்விதம் மாற்றிக்கொள்ள பிரயாசப்படுகின்றாய். பலவித உலக காரியங்களில் பெற்ற வெற்றி ஒருபோதும் இறைவனை ஏற்றுக்கொள்ள வைக்கப்போவதில்லை. இந்த உலகத்தினின்று உன்னால் எதை எடுத்துக்கொண்டு போக முடியும் என்று யோசித்துப்பார். நீ ஒன்றையும் கொண்டுபோகப்போவதில்லை. ஆயினும் நீ இயேசுவின் மேல் உன் நம்பிக்கையை வைத்திருப்பாயானால் பரலோகத்திற்கான விசா அதுவே. இன்று இயேசு தம்மை நோக்கி கூப்பிடும் அனைவரiயும் நோக்கிக் கொண்டிருக்கும் உயிருள்ள கிறிஸ்து. அவர் உலகத்தின் இராஜா. உலகத்தை படைத்தவரும் அவரே. ஆயினும் அவரை மனிதன் மறந்து போவதாலும், இயேசுவை மனிதன் வெறுப்பதாலும் அவரது பொறுமை நீள்கிறது. மரணத்தின் நாளிலே அவர் முன் தண்டனை பெற்றுக்கொள்வதோ நித்திய அரசிற்குள் நுழைவதோ இன்று உன் கையில் உள்ளது.


களையாக இருந்து அழிவடைய ஆயத்தமா? கோதுமையாக இருந்து நித்தியத்தை அடைய ஆயத்தமா?




மத்தேயு 13:25-30.
மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.
Uyiron · 233 views · Leave a comment
Categories: கட்டுரைகள்
இயேசுவின் பணி
16 Apr 2010 
வேதத்தை கற்றிருந்த யூத மத தலைவர்களுக்கு இயேசுவின் செயல்கள் எல்லாம் தவறானதாக தெரிந்தது. அவரது செயல்களை அவர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓய்வு நாளில் தேவன் கொடுத்த கட்டளையை இயேசு மீறுகிறார் என்று பலமுறை அவரை குற்றஞ்சாட்டினார்கள். தேவனால் மட்டுமே பாவங்களை மன்னிக்கத் தக்கதாய் இருக்க இவரோ பாவிகளை மன்னிக்கிறவராகவும், சுகப்படுத்துகிறவராகவும் இருந்தது அந்த யூத தலைவர்கள் மத்தியில் பலவித பயங்களை தோற்றுவித்திருந்தது.

யூதர்கள் எப்போதுமே மேசியாவை எதிர்ப்பார்த்த வண்ணம் உள்ளனர். இது மோசேயின் காலத்திலிருந்தே நிச்சயமாய் நம்பப்பட்டது. ஏனெனில் மேசேயோ பின்வருமாறு அன்றைய இஸ்ராயேலருக்கு அறிவித்து விட்டதின் காரணமாகவே – “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார். அவருக்குச் செவிகொடுப்பீர்களாக” (உபா 15:18)

ஆதலால் அன்றிலிருந்தே யூதர்கள் மத்தியில் மேசியாவின் வருகை குறித்த எதிர்பார்ப்பு ஆரம்பித்திருந்தது. இஸ்ராயேலரை கானான் தேசத்திற்கு அழைத்து வந்த மோசே இத்தீர்க்கதரிசனத்தை இயேசுவின் பிறப்புக்கு சிலபல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே அறிவித்து விட்டான்.

ஏன் இயேசு எனும் மேசியா அவர் உலகத்தின் இரட்சகர் என இயேசுவின் காலத்தில் அவரது வயதிற்கொத்த யோவான் ஸ்நானகன் கடைசியாக கூறும் வரை மேசியாவின் வருகை இஸ்ராயேலருக்கு தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டு வந்தது. ஆயினும் ஏற்றுக்கொள்ள மனதில்லாத யூத தலைவர்கள் எப்போதும் கல்லுகளை தூக்கிக்கொள்ளுவதை பழக்கமாக்கிக் கொண்டார்கள். இயேசுவின் வார்த்தைகள் கசப்பாக தோன்றின. இயேசுவை அவர்கள் எவ்வளவு எதிர்க்க துணிந்தார்களோ அதை அவர்கள் நம்புகின்ற தேவனுக்கு செய்யும் காரியம் என்பதை யூதர்களால் சிந்திக்க முடியவில்லை. ஏனெனில் தேவகுமாரனாய் வந்தவர் தேவனிடத்திலிருந்து வந்த தேவனாயிருக்கிறார்.

இயேசுவை எதிர்த்த யூதர்கள் கேள்விகளை கேட்பதிலும் கில்லாடிகளாய் விளங்கினார்கள். ஆயினும் இறுதியில் தங்கள் கேள்விகளே அவர்களுக்கு அவமானத்தை கொண்டுதந்தது. எவ்விதத்திலும் தேவனை பரீட்சை பாராதிருப்பாயாக என்பதை மறந்து விட்டனர் இந்த யூதர்கள். கடைசிவரை யூதர்கள் அவரை மேசியா என ஒத்துக்கொள்ள விரும்பவில்லை, காரணம் அவர்கள் தேவனிடத்திலிருந்து வரும் இயேசு கிறிஸ்து என தன்னை வீணாக எண்ணிக்கொள்கின்றான் என்றே கணக்கிட்டனர். “அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.. அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.”

இவ்வாறு தனது சொந்த ஜனங்களாலேயே அலைக்கழிக்கப்பட்ட வாழ்வை இயேசு முன்னரே அறிந்திருந்தார்.


ஏசாயா 53
1. எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? 2. இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார். அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை. அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. 3. அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார். அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம். அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார். அவரை எண்ணாமற்போனோம். 4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். 5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம். கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். 7. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். 8. இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார். அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும். ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார். என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். 9. துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள். ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார். அவர் கொடுமை செய்யவில்லை. அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. 10. கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார். அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார். கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். 11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார். என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார். அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். 12. அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன். பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
Uyiron · 110 views · 1 comment
தனியாளா?
10 Mar 2010 

தனியாள்

தனியாள்

தனியாள்

தனியாள்

Admin · 222 views · 6 comments
துதியுங்கள்
10 Mar 2010 
கர்த்தர் தம்முடைய ஊழியரை வழிநடத்தி மிகப்பெரிய காரியங்களை செய்கின்றவர். அவருடைய ஊழியர்களால் மிகப்பெரிய காரியங்களை செய்யமுடியும். எப்போதும் தேவனுடைய ஊழியர்கள் உலகிற்கு மிகவும் சவாலாய் அமைகின்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். தேவனுடைய ஊழியக்காரன் ஒருபோதும் சோர்ந்து போவதை தேவன் ஒரு போதும் விரும்புவதில்லை. அவருடைய ராஜரீக மக்களை வழிநடத்துகின்ற ஊழியர்கள் தேவனுடைய பார்வையில் அருமையானவர்கள். தேவனுடைய மந்தையை வழிநடத்தும் மேய்ப்பர்கள் தங்களிலும் மேலாக நல்மேய்ப்பர் கிறிஸ்துவின் போர்வீரர்கள். மக்கள் எனும் மந்தையை வழிநடத்தி சாத்தான் என்னும் வஞ்சகனுக்கு எதிர்த்து போர்செய்வதே ஊழியர்களின் இவ்வுலக கடமை. எழும்பி பிரகாசிப்பதுவே தேவன் எதிர்பார்க்கும் காரியம். அவருக்கு மகிமையை செலுத்துங்கள். 
1.       அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள். கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.

 
அதிசயமானது அவருடைய நாமம். அவருடைய நாமத்தினால் அற்புதங்களை செய்யும் வல்லமை அவருடைய ஊழியர்களுக்கு உண்டு. அவருடைய ஊழியர்கள் தாங்கள் கேட்பவற்றை பெற்றுக்கொண்டதாக விசுவாசிப்பதால் தேவனுடைய உடனடி கிரியை செயல்படுவதற்கு ஏதுவாகின்றது. தேவனால் ஆகாத காரியம் ஒன்றுண்டோ? அவர் சொல்ல ஆகின்றது. அவர் கட்டளையிட நிற்கின்றது. ஆகவே அவருடைய நாமம் எத்தனை எத்தனையாய் ஜனங்களுக்கு சாட்சியை அறிவிக்கின்றது.
2.       இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.
 

உலகத்தின் ஜெயங்கள் எல்லாம் வீணாணவைகளிலேயே தங்கியுள்ளது. அதினால் பிரயோஜனம் என்ன? தேவனுடைய வார்த்தை எப்போதும் எங்களை உயிர்ப்பிக்கின்றதாயிருக்கின்றது. தேவனால் உருவாக்கப்பட்ட சூரியனும் உலகமும் அதிலுள்ள அனைத்தும் தினந்தோறும் தேவனுடைய கிரியைகளை உலகிற்கு அறிவித்து வருகின்றதல்லவோ. ஆகையினால் பூமியின் குடிகள் கர்த்தரை துதிப்பதை ஆர்வமுடன் செய்வார்களா?
3.       சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.

உலகின் அனைத்தையும் கர்த்தரே படைத்தார். அவரால் முழு உலகின் சம்பத்துக்களும் படைக்கப்பட்டன. அவரின் கைகள் மனிதரை உருவாக்கிற்று. ஒவ்வொரு மனிதர்களும் இறைவனின் சாயலிலானவர்கள் என வேதாகமம் எடுத்துரைக்கின்றது. மனிதர்களை இறைவன் தன் சாயலாக படைத்துள்ளார். இதற்கு மாறாக மனிதன் ஒரு போதும் இறைவனாக முடியாது. ஆகவே மனிதரை படைத்த இறைவன் மனிதரை விட மேலானவர். அவர் மகிமையால் பூமி நிறைகின்றதாயிருக்கின்றது. பூமியை மகிமையால் நிறைக்கின்ற அவரே உயர்ந்த தேவன்.
4.       கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர். அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.

உலகத்தின் செல்வங்களின் மிகுதியால் மனிதன் தான் செய்வது இன்னதென்று அறியாதிருக்கின்றார். காலையில் உதிர்த்து மாலையில் மறையும் மலருக்கு சமானமாய் வாழும் மனிதன் இந்த உலகில் என்னத்தை கட்டுகின்றார். மதிகேடனாக உலகத்தில் ஆசைவைத்து சொத்துக்களை சேர்த்து வைத்தாலும் அனுபவிக்கும் உரிமையை இறைவன் மட்டுமே வழங்க முடியும. இறைவனே அனுபவிக்கும் உரிமையை மனிதருக்கு அளிக்க மனிதன் இறைவனுக்கு சமமாகலாமோ?
  5. உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?

இறைவன் தம்முடைய ஓரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பி அவரை பாவத்திற்கு பலியாக மாற்றினார். அந்த மனித குமாரனான கிறிஸ்துவிற்கோ உலகில் தலை சாய்க்க இடமில்லை. அந்தளவில் மனிதர்மேல் அன்பு வைத்த இறைவன் எவ்வளவாய்த் தம்மைத் தாழ்த்தினார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவர் மிகவும் தாழ்மையுள்ளவராய் அடிக்கப்படும் ஆட்டுக்குட்டிக்கு சமானமாய் தன்னைத்தானே தாழ்த்தி பலியாக ஒப்புக்கொடுத்தார்.  
6. அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.

இந்த உலகத்தின் அதிபதிகளை நியமிப்பவர் தேவனே. சகலமும் அவரது கரங்களில் இருக்கின்றது. அவரே அனைத்திற்கு இராஜா. அவருடைய இராஜ்யமே பூமியில் நிலைநிறுத்தப்படும் என்று வேதாகமம் தீர்;க்கமாய் என்றோ அறிவித்துவிட்டது. ஆகையினால் வரப்போகும் இராஜ்யத்திற்கு அதிபதியாய் இறைவனுடன் அரசாட்சி செய்ய இப்போதே உன்னை தாழ்மைப்படுத்து. நீ எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் அவர் உன்னைக் காண்கின்றார். எவ்விதமான அசுத்தத்தையும் அவர் நீக்கிப்போட வல்லவர்.
7. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார். எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.

கர்த்தர் தமக்கு பிரியமானவனுக்கு தாம் பிரியமானபடி செய்கின்றார். அவர் செய்ய விரும்புவதே உலகத்தில் நடைபெறுகின்றது. அவரால் உலகத்தின் அனைத்து காரியங்களும் நடைபெறுகின்றது. அதனை யாரால் மாற்ற முடியும். அவர் சிறியோரை பெரிய இடத்திற்கு கொண்டுவருபவர். ஏழ்மைப்பட்டவனை பிரபுக்களோடு உட்காரப்பண்ணுகின்றவர். அவர் தம் ஜனத்தின் வேதனையை அறிந்தவர். அவரால் உன் வாழ்க்கை உயர்த்தப்படும் என்பது நிச்சயம் நீ அறிந்து கொள்ள வேண்டியது.
  8. அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.

எதிர்காலத்தை குறித்து கலங்கிக் கொண்டிருக்காதே. எதிர்காலத்தை மாற்றியமைக்கக் கூடியவர் தேவனே. அவரே சகலத்தையும் அதினதின் காலத்திற்கு தக்கதாய் செய்கின்றவர். ஆகையினால் உன் துக்கம் சந்தோஷமாய் மாறும். உன் கவலைகள் எல்லாம் மறைந்து விடும். அப்படியானால் பின்னும் இன்னே நீ ஏன் கலங்குகின்றாய். தேவனிடம் உன்னை ஒப்புக்கொடு. உன் வாழ்க்கையை தேவன் மிளிரப்பண்ணுவார்.
  9. மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.


சங்கீதம் 113லிருந்து
Uyiron · 84 views · 0 comments
மகிமை
10 Mar 2010 
 கர்த்தருக்கு பயப்படுகின்ற பயமே உலகில் மனிதருக்கு தேவையான ஒன்றாகும் எனலாம். மனிதன் தேவபயத்தை விட்டதினால் இன்று உலகத்தில் பல்வேறு வகையான அழிவுகளை உலகம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழவேண்டியவனாக மனிதன் எப்போது தன்னை மாற்றிக்கொள்ளுகின்றானோ அப்போதே தேவனுடைய சமாதானத்தை அவனால் அடைந்து கொள்ள முடியும். ஆனாலும் தேவன் எல்லாவற்றிற்கும் முன்னதாகவே அவருடைய மகிமையால் உங்களை நடத்தி வந்திருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தேவனுடைய கிருபையால் நீங்கள் அவருடைய மகிமையை அனுபவித்திருக்கின்றீர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆகையினால் கர்த்தருக்கு பயப்படும் பயமானது எப்போதும்உங்கள் வாழ்க்கையில் செயல்படவேண்டும். அதே நேரத்தில் முழுமையான உள்ளத்தால் தேவனை சேவிக்க கடமைப்பட்டுள்ளோம். தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கு அவரை சேவிப்பதையன்றி வேறு என்னத்தை இறைவன் விரும்புகின்றார். தேவன் செய்த மகிமையான கிரியைகள் எத்தனை அதிகம் என்பதை சிந்தித்து பார்ப்பீர்களாயின் தேவன் உங்களை அபரிதமாக ஆசீர்வதித்தார் என்பதை நிச்சயம் கண்டுணர்வீர்கள்.

நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள். அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். 1சாமுவேல் 12:24
Uyiron · 190 views · Leave a comment

1, 2, 3 ... 9 ... 17  Next page

Calendar

September 2010
SunMonTueWedThuFriSat
 << < > >>
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Christian News

Click to visit the home of unrestricted internet radio broadcasting


send gift items to Sri Lanka

Bangla, Devanagari, Gujarati, Gurmukhi, Kannada, Malayalam, Oriya, Roman(eng), Hindi, Telugu
Tamil Christian News in Sri Lanka. www.Tamilchristian.tk

ChristianShirts.net Christian and family-friendly t-shirts

தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது? UYIR UNICODE CHANGER


# Advertisements To Advertise on www.tamilchristian.tk sms +94775076775 or Email:tamilchristiantk@yahoo.co.in


# Advertisements To Advertise on www.tamilchristian.tk sms +94775076775 or Email:tamilchristiantk@yahoo.co.in


# Advertisements To Advertise on www.tamilchristian.tk sms +94775076775 or Email:tamilchristiantk@yahoo.co.in


# Advertisements To Advertise on www.tamilchristian.tk sms +94775076775 or Email:tamilchristiantk@yahoo.co.in
தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது? UYIR UNICODE CHANGER


# Advertisements To Advertise on www.tamilchristian.tk sms +94775076775 or Email:tamilchristiantk@yahoo.co.in

ChristianShirts.net Christian and family-friendly t-shirts

The Jerusalem Gift Shop Vertical 120x600

Who's Online?

Member: 0
Visitors: 2

Announce

Categories

Sri Lankan Christian News
தமிழ் நட
ஜெப விண்
Helping Hands
கிறிஸ்த&
சில பதிவ
பொழுது
தகவல் தெ
படமும் த

Choose a skin



rss Syndication