06 Jun 2009 - 18:40:46
அன்பு கூரவேண்டும்
தேவன் பயங்கரமானவர் என்பதை வேதாகமம் தெளிவாக கூறுகிறது. அவர் வல்லமையுள்ள பயங்கரமான தேவனாக இருக்கின்றார். அவரது வல்லமைக்கு முன்னாக ஒன்றுமில்லை. அவரே பூமியை உருவாக்கி மனிதர்களை அதின் மேல் வைத்தவர். அவரது செயல்கள் பட்சபாதமுடையதல்ல. அவர் தமது மக்கள் மேல் கரிசனை உள்ளவராக காணப்படுகின்றார். அவர் திக்கற்ற பிள்ளைக்கு உதவுகின்றவர். விதவைக்கு நியாயம் செய்யாதவர்களை அவர் பூமியில் வைப்பதில்லை. ஏனெனில் தேவன் நியாயம் செய்யும் வண்ணமாகவே எங்களுக்கு கற்பிக்கின்றார். தேவனுடைய அன்பு அந்நியன் மேலாக காணப்படுகின்றது. அவ்வாறாக கிறிஸ்துவின் பிள்ளைகளான நாமும் எம்மத்தியில் உள்ள அந்நியர் மேல் அன்புவைக்க வேண்டிய கடப்பாட்டில் காணப்படுகின்றோம். அவர்களுக்கு உதவ வேண்டியது எமது கடமையாக இருக்கின்றது. எங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவன், கர்த்தாதி கர்த்தர், எல்லா தேவர்களைப் பார்க்கிலும் அவர் மிக உயர்ந்தவர். அவர் மாத்திரமே தேவனாக இருக்கின்றார். அவரது ஒரே போறான குமாரனை உலகிற்குள் அனுப்பும் எண்ணம் காணப்பட்டதும் அன்பினாலேயாகும். அவர் அந்நியனுக்கு உதவுவது போல நாமும் அந்நிய ஜனங்களுக்கு உதவ வேண்டியதை எதிர்பார்க்கின்றார்.
உபாகமம் 10:17-18 - உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார். அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்..
உபாகமம் 10:17-18 - உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார். அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்..
Syndication

No Comment for this post yet...