ஏக இறைவனாகிய இஸ்ரயேலரின் தேவனையும், அவரது செய்கைகள் எழுதப்பட்ட வேதாகமத்தையும் விட்டு விட்டு, கல்லாலும், மரத்தாலும், மீள் வேதங்களாலும், புரட்டு கதைகளாலும் அவரை அறிந்து கொள்ள முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?

Last Comment

No Comments.

Calendar

March 2010
SunMonTueWedThuFriSat
 << < > >>
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   

news

Click to visit the home of unrestricted internet radio broadcasting






code: ChristianShirts.net Christian and family-friendly t-shirts

Who's Online?

Member: 0
Visitors: 9

Announce

rss Syndication

Choose a skin



Links

    சில பதிவ

    இயேசுக்கிறிஸ்து எவ்வாறு அறியப்படுகின்





    அன்றைய நாட்களில் தீர்க்கதரிசிகளாக கர்த்தருடைய வாயாக காணப்பட்ட
    தலைவர்கள் எவ்வாறு இயேசுக்கிறிஸ்துவை தம்முடைய வேதாகம நூல்களில் வெளிப்படுத்தினர் என்பதை
    அறிந்துகொள்ளுவதற்கு அவர்களுடைய நூல்கள் மிகவும் ஆதாரமாயிருக்கின்றது. பெரும் தலைவர்களாகவும்
    தீர்க்கதரிசிகளாகவும் விளங்கிய ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல், ஓசியா, யோவேல்,
    ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா ஆகியோர்
    தாங்கள் எழுதிய அல்லது தங்களால் எழுதப்பட்ட நூல்களில் இயேசுக்கிறிஸ்துவை எவ்வாறு வர்ணிக்கின்றனர்
    என்பதை மிகவும் சுருக்கமாக காணமுடியும்.



    இவ்வாறு எழுதப்பட்ட ஒவ்வொரு விடயமும் ஒவ்வொரு நூலிலும் ஒத்துப்போகும்
    தன்மை வாய்ந்துள்ளது பரிசுத்த ஆவியானவரின் கிரியையே ஆகும். ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு
    கால கட்டங்களில் வசித்துள்ளனர். ஆயினும் அவர்கள் இயேசுக்கிறிஸ்துவை பற்றி ஒரேவிதமாக
    சாட்சியளித்ததும் தீர்க்கதரிசனமாக கூறியதும் ஆச்சரியமளிக்கத்தக்க விடயமாகும்.



    மேசியா எனவும் தேவனுடைய மகன் எனவும் அழைக்கப்படுகின்றார். இயேசு
    இரட்சகர் என்பதே ஓசியா நூலிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இயேசுக்கிறிஸ்து
    நம் பாவத்திற்கு தம்மையே ஒப்புக்கொடுத்தவர் எனவும் ஓசியா நூலானது சுட்டிக்காட்டுகின்றது.
    நம்மை மரணத்தினின்று மீட்கின்ற ஒருவராக ஓசியா நூலில் இயேசுக்கிறிஸ்து அறிமுகப்படுத்தப்படுகின்றார்.
    எங்களை மனதுருக்கத்துடன் நேசிப்பவர், எங்கள் வியாதிகளைக் குணமாக்குபவர், எங்களுடைய
    காயங்களைக் கட்டுபவர். (ஓசியா 11:1, 13:4, 13:14, 11:4, 6:1)



    இறுதி நாட்களில் தம்முடைய பரிசுத்த ஆவியை தம்முடைய ஜனத்தின் மத்தியில்
    ஊற்றுபவர், உலகிலே தம்முடைய நாட்டை நியாயந்தீர்ப்பவராக காட்டப்படுகின்றார். அவர் எங்களுக்கு
    அடைக்கலமானவராகவும் அரணான கோட்டையாகவும் காணப்படுகின்றார் ஆகவே (யோவேல் 2:28,
    3:2,12, 3:16)



    தாவீதின் வம்சத்தில் வருகின்ற கிறிஸ்துவானவர் விழுந்துபோன தாவீதின்
    கூடாரத்தை கட்டுபராக காட்டப்படுகின்றார். சிதறுண்டு போன தமது ஜனங்களை தேசத்தில் திரும்ப
    நாட்டுபவர் கிறிஸ்து என்று கூறப்படுகின்றது (ஆமோஸ் 9:1, 9:11-15)       



    தேசத்தின் நியாயாதிபதிபதியானவராக இயேசுக்கிறிஸ்து காட்டப்படுகின்றார்.
    அவர் தேசத்தை நியாயம் தீர்க்கின்றவராக இருக்கின்றார். அவர் இஸ்ரவேலின் மீட்பர். அவர்
    தமது இராஜ்ஜியத்தை ஆள்பவர். அவர் தம்முடைய மக்களுக்காக மீட்பராக வெளிப்படுகின்றவராக
    இருந்தபோதிலும் அவர் தம்முடைய இராஜ்ஜியத்தை நிலைநிறுத்துவார். (ஓபதியா 15-16,
    17-20, 21)



    யோனாவின் நூலின் ஊடாக கிறிஸ்துவானவரின் உயிர்த்தெழுதல் காட்டப்படுகின்றது.
    எவ்வாறு யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்தானோ அவ்விதமாக கிறிஸ்துவும் பூமியின்
    வயிற்றில் இருப்பார் என வெளிப்படுத்தப்படுகின்றது (யோனா)



    யாக்கோபின் தேவன் என்பது அவருடைய நாமமாயிருக்கின்றது. அவர் தேசத்தின்
    நியாயாதிபதயாகவும் ஆளப்போகிறவராகவும் இராஜாவாக வரப்போகிறவர். (மீகா4:2, 4:3, 5:2)



    எதிரிகளை பழிவாங்குகின்ற ஓர் வைராக்கியமுள்ள தேவனாக இயேசுக்கிறிஸ்து
    காணப்படுகின்றார்.  தமக்கு எதிராக கிரியை செய்கின்ற
    ஒவ்வொருவரையும் அவர் தம்முடைய நாளில் அவர்கள் மேலாக பழிவாங்குங்கும் வைராக்கியத்தை
    காண்பிப்பார் எனலாம். அவருடைய பிள்ளைகள் மேல் கைவைக்கின்ற ஒவ்வொருவர் மேலும் அவருடைய
    வைராக்கிய கரமானது கிரியை செய்யும் அதேவேளை அவர்களை பழிவாங்கும்.  (நாகூம்1:2-13)



    இரட்சகராகவும் பரிசுத்தராகவும்,  மகிமையால் பூமியை நிரப்புகிறவராகவும் இயேசு காணப்படுகின்றார்.
    (ஆபகூக் 3:13, 1:12, 2:14)



    நீதிபரராக இருக்கின்றார். இஸ்ரவேலின் இராஜாவாக செயற்படுகின்றார்.
    (செப்பனியா 3:5, 3:15)



    தம்முடைய ஆலயத்தினது மகிமையை முந்திய நிலைக்கு கொண்டு வருபவராக இயேசுவின்
    செயற்பாடானது காணப்படுகின்றது. எவ்வாறு அவருடைய ஆலயமானது பூமியில் மகிமையால் நிறைந்து
    காணப்பட்டதோ அவ்விதமாக தமது ஆலயத்தை மீண்டும் உலகில் நிலைநிறுத்துவார். உலகிலுள்ள பூமியின்
    இராஜ்ஜியங்களை முடிவிற்கு கொண்டுவருபவராக இருப்பவர் இயேசுக்கிறிஸ்துவே என அறிவிக்கப்படுகின்றது.
    (ஆகாய்)



    கிறிஸ்துவின் முதலாம் வருகையானது தீர்க்கதரிசனமாக அறிவிக்கப்படுவது
    போல அவரது இரண்டாம் வருகையும் காண்பிக்கப்படுகின்றது. இயேசு ஊழியக்காரன் எனவும் இராஜா
    என்றும் தேவ மனிதன் என்றும் தேவனுடைய தூதன் எனவும் குறிப்பிடப்படுகின்றார். அவர் நீதியின்
    கிளையாக காண்பிக்கப்படுகின்றார்.; அவர் சிலுவையில் அறையப்பட்டவர் என தீர்க்கதரிசனமாக
    கூறப்படுகின்ற அதே நேரத்தில் இரட்சிக்க வரப்போகும் தாழ்மையுள்ள இராஜா எனவும் தம்முடைய
    ஜனங்களை மேய்கின்ற மேய்ப்பர் ஆகவும் வரப்போகும் இராஜாவாகவும் காண்பிக்கப்படுகின்றார்.
    (சகரியா 3:1, 3:8, 3:9, 12:10, 9:9-10, 13:7,14)



    நியாயந்தீர்ப்பவராகவும் சாட்சியானவராகவும் உடன்படிக்கையின் தூதனாகவும்
    காட்டப்படுகின்றார். (மல்கியா 3:5, 3:1)



    வரப்போகும் மேசியா என காட்டுகின்றமையும் அவரது வருகையையும் குறித்து
    காணலாம். மேசிய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுதலும் காண்பிக்கப்படுகின்றது. இயேசு இஸ்ரவேலை
    மீட்பவராக காண்பிக்கப்படுகின்றார். (ஏசாயா 7:1-12:6, 24:1-27:13, 32:1-20,
    49:1-57:21)



    நித்திய ஜீவ ஊற்று என கிறிஸ்து காண்பிக்கப்படுவதோடு அவர் நீதியின்
    கர்த்தர் எனவும் புது உடன்படிக்கையை கொண்டுவருபவர் எனவும் நாம் அறிய முடிகின்றது.
    (எரேமியா 2:13, 23:5, 31:31-34)



    ஆட்சி செய்ய அதிகாரம் பெற்ற இராஜாவாகவும் உண்மையான மேய்ப்பன் எனவும்
    காண்பிக்கப்படுவதைக் காணலாம். (எசேக்கியேல் 17:23-24, 21:26-27, 34:11-31)



    வரப்போகும் மேசியா எனவும் அவரது  இரண்டாம் வருகை குறித்தும் கூறப்படுகின்றது (தானியேல்)



    இவ்வாறாக தீர்க்கதிரிசிகள் தமது நூல்களின் ஊடாக கிறிஸ்துவானவரை அறிவிக்கும்
    முன்கூட்டிய பணியை செய்து தம்முடைய மக்களுக்கான எதிர்காலத்தை கிறிஸ்துவை நோக்கியவாறு
    செல்லும் திட்டத்தை காண்பிக்கின்றனர். இது கிறிஸ்து உலகிற்கு வரவேண்டிய அவசியத்தையும்
    அவரது உலகப் பணிகளையும் ஆயத்தமாக எடுத்து காண்பிக்க அன்றைய நாட்களில் வாழ்ந்த யூதர்களுக்கு
    மிகவும் அவசியமாக அமைந்தனவாக காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


    Admin · 62 views · Leave a comment
    Categories: கட்டுரைகள்
    30 Jun 2009. 16:47:37

    Permanent link to full entry

    http://uyir.2k00.com/297030072994-b7/295129913015297030092965302129653007299330073000302129803009-2958299730212997300629933009-29492993300729912986302129862975300929653007298530212-b7-p50.htm

    Comments

    No Comment for this post yet...


    Leave a comment

    New feedback status: Awaiting moderation





    Your URL will be displayed.

     
    Please enter the code written in the picture.


    Comment text

    Options
       (Set cookies for name, email and url)