ஒரே நோக்கு
கிறிஸ்தவர்களாயினும், கத்தோலிக்கர்களாயினும், யூதர்களாயினும் அவர்களுடைய ஒரே நோக்கு மேசியாவை எதிர்கொள்ள காத்திருப்பதாகும். எல்லா சபைகளினதும் எதிர்பார்ப்பு கிறிஸ்துவின் மேலேயே காணப்படுகின்றது. கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்க்கும் இத்தகையோர் பரலோக இராஜ்ஜியத்தினைக் குறித்த தெளிவான சிந்தை கொண்டுள்ளனர். . “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்”. 2 தெசலோனிக்கேயர் 1:7-10 தேவனை அறியாதவர்களுக்கு நீதியுள்ள ஆக்கினை உண்டு. கிறிஸ்துவை விசுவாசியாதவர்களுக்கு நீதியுள்ள ஆக்கினை உண்டு. தேவனையும் கிறிஸ்துவையும் அறியாவிட்டால் ஆக்கினை உண்டு என வேதாகமம் தெளிவாக கூறுகின்றது. இயேசு தமது சீடரோடுங் கூட வானத்தில் தென்படும் போது அவ்வாறு நடைபெறும். கிறிஸ்து வரும் நாளானது பாவிகளுக்கு துக்கத்தை கொண்டு வரும் நாளாகும். அது விசுவாசிகளுக்கு சந்தோஷத்தை தரும். குpறிஸ்துவின் பிள்ளைகள் மகிழ்ந்து களிகூறும் நாள் அதுவாகும். அந்நாளில் பாவிகள் வருத்தமடைவர். அவர்களுடைய மகிமை அற்றுப் போகும். ஒருவரும் நீதியுள்ள நியாயத்தீர்ப்பினின்று தப்பித்துக்கொள்ள முடியாது. கிறிஸ்துவை அறிந்துகொண்டு அவர்மேல் விசுவாசம் வைப்போருக்கு கிருபையாய் தேவன் தம்முடைய நித்திய ஜீவனை இலவசமாய் அருளுகின்றார். அவர்கள் தேவனால் பெலப்படுத்தப்படுகின்றனர். அவர்களை பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகின்றார். கிறிஸ்துவின் வருகை மிகவும் ஆச்சரியமான கிறிஸ்துவின் மீட்பின் நாளாகும். பாவிகளும் விசுவாசிகளும் பிரிக்கப்பட்டு இயேசுவோடு கூட அவருடைய பிள்ளைகள் செல்லும் நாளாகும். இது மிகவும் சீக்கிரம் நடைபெறப் போகும் உலகலாவிய சம்பவமாகும். இந்நாளில் கிறிஸ்துவின் மேலாக கட்டப்பட்ட சபைகள் கர்த்தருடனே கூட பரலோக இராஜ்ஜியத்திற்குள்ளாக எடுத்துக் கொள்ளப்படும். இந்த பாக்கியமான சம்பவம் சீக்கிரமாகவும் அதே வேளை இரகசியமாகவும் நடைபெறும் என வேதாகமம் தெளிவாக கூறுகிறது. அந்நாளை நிச்சயமாக யாராலும் குறித்து கூற முடியாது. ஏனெனில் தேவனுடைய வருகை உலகளாவிய ரீதியில் நடைபெறும் இரகசிய சம்பவமாகும். அதற்கு ஆயத்தப்பட செய்ய வேண்டியது ஒன்றே. கிறிஸ்துவிடம் அவரது நித்திய ஜீவனுக்காக வேண்டுதல் செய்வதே.


Syndication
No Comment for this post yet...