கிறிஸ்தியான் கதை பாகம் 1 பிரிவு 1
கவலைப்படும் கிறிஸ்தியான்
ஒரு நாள் நான் அயர்ந்து தூங்கும்பொழுது ஒரு கனவு கண்டேன். அது ஒரு விசித்திரமான கனவு! அந்தக் கனவைப்பற்றி இப்பொழுது உங்களுக்குக் கூறப்போகிறேன்.
கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைக் கண்டேன். அவன் கையில் ஒரு பெரிய புத்தகம் இருந்தது. அவன் அந்தப் புத்தகத்தைத் திறந்து வாசிக்கத் துவங்கினான். அதைப் படிக்கும்போதே அவன் கண்கள் கலங்கின. உடல் நடுங்கியது.
ஐயோ! நான் என்ன செய்வேன் என்று கதறி அழுதான்.
அவன் தன் வீட்டினுள் நுழைந்தான். அவன் நிலையைக் கண்ட அவன் மனைவியும் பிள்ளைகளும் அருகே வந்தார்கள். அவனால் தனது கவலையை மறைக்கமுடியவில்லை.
அவர்களை அவன் அருகே அழைத்தான்.
என் அன்பான மனைவியே! என் அருமைப் பிள்ளைகளே, இதோ, என் முதுகிலுள்ள இந்தச் சுமை என்னை அதிகமாக அழுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் நாம் வசிக்கும் இந்த நகரம் வானத்திலிருந்து வரும் நெருப்பினால் அழிக்கப்படும் என்று இந்தப் புத்தகத்தில் படித்தேன். நாம் எப்படியாவது தப்பித்துக்கொள்ளவேண்டுமே. இல்லாவிட்டால் அழிந்துவிடுவோமே என்று அவன் புலம்பினான்.
அவனுடைய மனநிலை சரியில்லை என்று நினைத்துப் பயந்தார்கள் அவனுடைய மனைவியும் பிள்ளைகளும். அப்பொழுது இரவு நேரமாகிவிட்டமையால் அவனைப் படுத்து, உறங்கி ஓய்வெடுக்கும்படி கூறினார்கள். மறுநாள் காலையில் அவன் மனைவியும் பிள்ளைகளும் அவன் படுக்கையருகே வந்து அவன் எப்படியிருக்கிறான் என்று விசாரித்தார்கள். அவனோ இன்னும் மோசாமாகிவிட்டேனே என்று புலம்பினான். அவர்கள் வசிக்கும் நகரம் அழியப்போகிறது என்று கூறி மீண்டும் அவர்களை எச்சரித்தான். அவர்களோ அவன் பேச்சுக்கு செவிகொடுக்கவில்லை. அவனைக் கேலி செய்யவும், கிண்டல் பண்ணவும் துவங்கினார்கள்.
சிறுது நேரம் பொறுமையுடன் இருந்த அவன் மேலும் அந்த நிந்தனைகனைத் தாங்கமுடியாமல் தன்னுடைய அறைக்குள் சென்றான். தன் கவலையை நீக்குமாறு, தன் குடும்பத்தினர் உண்மை நிலையை அறிந்துகொள்ள உதவுமாறு ஆண்டவரை நோக்கி nஐபித்தான்.
அதன் பின்பு அவன் அடிக்கடி வயல்வெளிகுச் சென்று அந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருப்பான். சிலவேளைகளில் nஐபம் செய்வான். என்றாலும் அவன் கவலை நீங்கிவிடவில்லை.
நான் இரட்சிக்கப்படுவதற்கு அந்த அழிவிலிருந்து தப்புவதற்கு என்ன செய்யவேண்டும்? என்று அடிக்கடி புலம்பிக்கொண்டிருந்தான்!
நற்செய்தியாளரைச் சந்தித்தல்
ஒரு நாள் அவன் அழுது கொண்டிருந்தபோது நற்செய்தியாளர் என்ற ஒருவர் அவனருகே வந்தார். ஏனப்பா நீ அழுகிறாய் என்று அன்புடன் கேட்டார்.
ஐயா, நான் ஒருநாள் மரித்துப்போவேன் என்றும் அதன்பின் என் தவறுகளுக்காகத் தண்டிக்கப்படுவேன் என்றும் இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தத் தண்டனைக்குப் பயப்படுவதால் என்னால் சாவைப்பற்றி நினைக்க முடியவில்லை என்றான் கிறிஸ்தியான் என்ற பெயரையுடைய அவன்.
இந்த உலகத்தில்தான் இவ்வளவு துன்பங்களும் தொல்லைகளும் இருக்கின்றனவே? பிறகு ஏன் நீ சாவைப் பற்றிக் கவலைப்படவேண்டும்? என்று கேட்டார் நற்செய்தியாளர்.
ஜயோ, இதோ என் முதகில் இருக்கிறதே என் பாவச்சுமை. நான் இறந்தபிறகு இந்தச் சமை என்னை அழுத்தி நரகத்திற்கே கொண்டுபோய்விடும் என்று நினைக்கிறேன் என்றான் கிறிஸ்தியான் கவலையுடன்.
பிறகு ஏன் இங்கே சுற்றிக்கொண்டு இருக்கிறாய்? என்று கேட்டார் நற்செய்தியாளர்.
எனக்கு எங்கே போவது என்றே தெரியவில்லை! என்று அங்கலாய்த்தான் கிறிஸ்தியான்.
நற்செய்தியாளர் அவனிடம் ஒரு காகிதச் சுருளைக் கொடுத்தார். அவன் அதைத் திறந்து பார்த்தான்.
அதில் வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள ஓடிப்போ! என்று எழுதப்பட்டிருந்தது.
அவன் நற்செய்தியாளரைப் பார்த்து நான் எங்கே ஓடிப்போக வேண்டும்? என்று கேட்டான்.
நற்ச்செய்தியாளர் தன் கையை நீட்டி வெகு தூரத்தில் சுட்டிக்காட்டி, அதோ வெகு தூரத்தில் ஓரு இடுக்கமான வாசல் தெரிகிறதா? என்று கேட்டார்.
தெரியவில்லையே ஜயா! என்றான் கிறிஸ்தியான் கவலையுடன்.
அப்படியானால் ஒரு பிரகாசமான ஒளியாவது தெரிகிறதா? என்று கேட்டார் நற்செய்தியாளர்.
ஆம் ஜயா, வெகு தூரத்தில் ஓர் ஒளி தெரிகிறது! என்றான் கிறிஸ்தியான்.
நீ அந்த ஒளியை நோக்கி நேராக நடந்துபோ. அருகே நெருங்கும்போது அந்த இடுக்கமான வாசல் தெரியும். அந்த வாசல் கதவைத் தட்டு. அடுத்து நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே சொல்லப்படும் என்று கூறி வழியனுப்பினார் நற்செய்தியாளர்.
பயணம் துவங்குதல்
எனது கனவில் அவன் அந்த ஒளியை நோக்கி வேகமாக ஓடுவதைக் கண்டேன். அவன் மனைவியும், பிள்ளைகளும் அவன் பின்னால் ஓடி அவனை வீடு திரும்பும்படி கெஞ்சினார்கள், கதறினார்கள்! ஆனால் அவனோ தன் காதுகளைப் பொத்திக்கொண்டு நித்திய வாழ்வு, நித்திய வாழ்வு என்று கத்தயபடி அந்த ஒளியை நோக்கி ஓடினான். திரும்பியே பார்க்கவில்லை.
அந்த நகரத்தில் உள்ளவர்கள் அவன் ஓடுவதை வியப்போடு பார்த்தார்கள்.சிலர் அவனைக் கேலி செய்தார்ர்கள்.சிலர் அவனைத் திரும்பி வரும்படி கூப்பிட்டார்கள்.அவர்களில் கடின நெஞ்சன், இளகிய நெஞ்சன் என்ற இருவர் மட்டும் அவனை எப்படியாவது கூட்டி வருவோம் என்று சபதம் செய்துவிட்டு அவன் பின்னே ஓடினார்கள்.
அவர்கள் இருவரும் கிறிஸ்தியானுக்கு முன்பாக ஓடிச் சென்று அவனை வழிமறித்தார்கள். ஏன் என்னை வழிமறிக்கிறீர்கள்? என்று கேட்டான் கிறிஸ்தியான்.
நீ கண்டிப்பாக எங்களுடன் நகரத்திற்குத் திரும்பி வரவேண்டும் என்று வற்புறுத்தினார்கள் இருவரும்.
அது ஒருக்காலும் முடியாது. இந்த நகரம் கண்டிப்பாக ஒரு நாள் நெருப்பினால் அழிக்கப்பட்டு விடும். நீங்கள் அதில் இருந்தால் அதோடு அழிந்து போவீர்கள் நீங்களும் என்னுடன் வந்து அழிவிற்குத் தப்பிக்கொள்ளுங்கள் என்றான் கிறிஸ்தியான். எங்கள் நண்பர்களையும் எல்லா வசதிகளையும் விட்டுவிட்டு எவ்வாறு வரமுடியும்? என்று கேட்டான் கடின நெஞ்சன்.
ஆமாம், கண்டிப்பாக நண்பர்களையும், வசதிகளையும் விட்டுவிட்டுத்தான் வர வேண்டும். ஏனென்றால் நான் போகிற இடத்திலே இதைவிட மேலான நிரந்திர மகிழ்ச்சி கிடைக்கும். நீங்களும் என்னுடன் வந்தால் அதை அனுபவிக்கலாம் என்றான் கிறிஸ்தியான். இந்த உலகத்தை விட்டுவிட்டு நீ வேறு எதைத்தேடி ஓடுகிறாய்? என்று எரிச்சலுடன் கேட்டான் கடின நெஞ்சன்.
அழியாததும், மாசற்றதும், வாடாததுமான (1 பேதுரு 1:4 ) சுதந்திரத்தைத் தேடிச் செல்கிறேன். மோட்சத்தில் இந்த விடுதலை நமக்குக் கிடைக்கும். அதைத் தேடுகிற யாவரும் அதைக் கண்டடைவார்கள். இதோ இந்த புத்தகத்தைப் படித்துப் பார். உனக்கு எல்லாம் புரியும் என்று புத்தகத்தை நீட்டினான் கிறிஸ்தியான்.
உன்னுடைய புத்தகம் யாருக்கு வேண்டும்? நீ எங்களுடன் திரும்பி வரப்போகிறாயா இல்லையா? அதைச் சொல் முதலில் என்று அலட்சியமாகக் கேட்டான் கடின நெஞ்சன். வரமாட்டேன். நான் கலப்பையின்மீது கை வைத்து விட்டேன். இனிமேல் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்று மறுத்துவிட்டான் கிறிஸ்தியான். இளகிய நெஞ்சனே, வா, போவோம். இவனிடம் பேசி ஒரு பயனுமில்லை. இவன் தான்தான் புத்திசாலி என்று நினைத்துப் பேசிக் கொண்டிருக்கிறான் என்று இளகிய நெஞ்சனை அழைத்தான் கடின நெஞ்சன்.
அப்படிச் சொல்லாதே. கிறிஸ்தியான் ஒரு நல்ல மனிதன் என்பதை நான் அறிவேன். அவன் சொல்வது உண்மையென்றால் நானும் அவனுடன் போக விரும்புகிறேன் என்றான் இளகிய நெஞ்சன். என்னது? முட்டாள்தனமாகப் பேசாதே. அவன் உன்னை எங்கே கூட்டிக்கொண்டு போவான் என்று உனக்குத் தெரியாதே. பேசாமல் என்னுடன் வந்துவிடு என்று அதட்டினான் கடின நெஞ்சன்.
ஐயா, தயவுசெய்து திரும்பிப் போகாதீர்கள். இரண்டு பேரும் என்னுடன் வாருங்கள். நான் சொல்லும் நித்திய மகிழ்ச்சி உண்மையானதே. நீங்கள் என்னை நம்பாவிட்டால் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமானதே. இந்த நூலை எழுதியவர் நமக்காகத் தன்னுடைய இரத்தத்தையே சிந்தியிருக்கிறார் என்று கூறிய கிறிஸ்தியானின் கண்கள் கலங்கின. இளகிய நெஞ்சன் கடின நெஞ்சனை நோக்கி, நான் இந்த நல்ல மனிதரோடு போவதே நல்லது என்று நினைக்கிறேன் என்று முடிவாககக் கூறினான்.
புpறகு அவன் கிறிஸ்தியானைப் பார்த்து, நீ போகும் இடத்திற்கு வழி தெரியுமா? என்று கேட்டான். அதோ அந்தப் பிரகாசமாக ஒளி தெரிகிறதே! அதற்கு அருகே இடுக்கமான வாசல் ஒன்று இருக்கிறது என்று நற்சேய்தியாளர் கூறியுள்ளார். அங்கு நாம் போகும்போது அடுத்த நாம் செய்ய வேண்டியது என்னவென்று அங்கே கூறப்படுமாம் என்றான் கிறிஸ்தியான். நல்லது. அப்படியென்றால் நானும் உன் கூடவே வருகிறேன் என்று கூறிய இளகிய நெஞ்சன் கிறிஸ்தியானுடன் சேர்ந்து நடக்கத் துவங்கினான். இதைக் கண்ட கடின நெஞ்சன் முட்டாள்களே, நான் உங்களுடன் வரப்போவதில்லை என்று கூறியபடியே நகரத்தை நோக்கித் திரும்பிவிட்டான்.
கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும்
கிறிஸ்தியானும் இளகிய நெஞ்சனும் பேசியவாறே அந்கச் சமவெளியில் நடந்து செல்வதை என் கனவில் கண்டேன்.
இளகிய நெஞ்சனே நல்லதுதான் நீ என்னுடனே வந்தாய். நாம் போகும் இடத்தை அடைய முடியாவிட்டால் நமக்குக் கிடைக்கப் போகும் நரக தண்டனையைப் பற்றி அறிந்திருந்தால் கடின நெஞ்சன் இப்வாறு திரும்பிப் போயிருக்கமாட்டான். பாவம்! என்றான் கிறிஸ்தியான்.
அது இருக்கட்டும். நாம் போகிற இடத்திலுள்ள நித்திய மகிழ்ச்சியைப்பற்றி எனக்குக்கொஞ்சம் சொல்லமாட்டாயா? என்று ஆவலுடன் கேட்டான் இளகியநெஞ்சன். நான் சொல்லுவதைவிட அந்த மகிழ்ச்சியை அனுபவித்து உணர்வதே மேலானாதாக இருக்கும். என்றாலும் இந்தப் புத்தகம் அதைப் பற்றிக் கூறும் சில வசனங்களை வாசிக்கட்டுமா? என்றான் கிறிஸ்தியான்.
அது சரி இந்தப் புத்தகத்தில் உள்ள வசனங்கள் எல்லாம் உண்மையானவை என்று உனக்குத் தெரியுமா? என்று சந்தேகத்தோடு கேட்டான் இளகிய நெஞ்சன். நிச்சயமாக! ஏனென்றால் பொய்யே கூறாத ஒருவரால் எழுதப்பட்டு புத்தகம் இது என்றான் கிறிஸ்தியான். அப்படியா? அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? நாம் நித்திய காலமாக சாகாமல் வாழக்கூடிய நித்திய ராஐ;யம் ஒன்று இருக்கிறது என்று இந்தப் புத்தகம் கூறுகிறது. அந்த இடம்தான் மோட்சம். மோட்சத்தை நோக்கிதான் இப்போது பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்றான் கிறிஸ்தியான். ரொம்பவும் மகிழ்ச்சி! மோட்சம் எப்படி இருக்கும்? என்று ஆவலாகக் கேட்டான் இளகியநெஞ்சன்.
அங்கே நாம் அணிந்துகொள்ள மகிமையின் கிரீடம் கொடுக்கப்படும். நமது உடைகள் சூரியனைப்போல் பிரகாசமாக இருக்கும். அங்கே அழுகையும,; கவலையும் கிடையவே கிடையாது. ஆண்டவரே நமது கண்ணீர் யாவையும் துடைப்பார் (வெளி 21:4) என்றான் கிறிஸ்தியான். நம்முடனே வேறு யார் அங்கே இருப்பார்கள்? என்று கேட்டான் இளகிய நெஞ்சன்.
ஒளிவீசும் தேவ தூதர்கள் அங்கே இருப்பார்கள். நமக்கு முன்பாக அங்கே போயிருக்கிற ஆயிரக்கணக்கான மனிதர்கள் அங்கே இருப்பார்கள். அவர்களில்அநேகர் ஆண்டவர்மீதுள்ள அன்பினாலும், அவருக்குக் கீழ்ப்படிந்ததின் நிமித்தமாகவும் அநேக துன்பத்தை அடைந்திருக்கிறார்கள். சிலர் வாளால் வெட்டுப்பட்டிருக்கிறார்கள். சிலர்நெருப்பில் சுட்டெரிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் காட்டு மிருகங்களுக்கு இரையாகப்போடப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களோ இன்று நித்திய வாழ்வு பெற்று மோட்சத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றான் கிறிஸ்தியான். நாமும் அந்த மகிழ்ச்சியைப் பெறுவது எப்படி என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டான் இளகிய நெஞ்சன்.
இந்தப் புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று சொல்லட்டுமா? நாம் ஆண்டவரை நோக்கி விருப்பத்தோடு கேட்டால் அவர் இவற்றை நமக்கு இலவசமாகத் தருவாராம் என்றான் கிறிஸ்தியான். அப்படியா? ரொம்பவும் மகிழ்ச்சி. வா, சீக்கிரமாகவே நாம் அங்கே போகலாம் என்று துரிதப்படுத்தினான். பொறு, பொறு. என் முதுகில் இருக்கிறதே பெரிய சுமை! என்னால் வேகமாக நடக்க முடியவில்லை என்று பரிதாபத்துடன் கூறிய கிறிஸ்தியான் அவன் பின்னே தள்ளாடியபடியே நடந்தான்.
குட்டையில் விழுந்தார்கள்
அவர்கள் இவ்வாறு சென்றுகொண்டிருக்கும் பொழுது பேச்சு சுவாரசியத்தில் வழியின் குறுக்கே இருந்த அவநம்பிக்கை என்ற குட்டையைக் கவனிக்கவில்லை! கால் தவறி இருவரும் அதில் விழுந்துவிட்டார்கள்! குட்டையைவிட்டு வெளியேற அங்குமிங்கும் புரண்ட போது அவர்கள் உடலெங்கும் சேறு அப்பிக்கொண்டது! கிறிஸ்தியானின் முதுகிலுள்ள சுமையினால் அவன் மெல்ல மெல்ல சகதியினுள் மூழ்கத் துவங்கினான்!
என்ன இது? நாம் ஏன் இவ்வாற சிக்கிக்கொண்டோம்? ஏன்று கோபத்தோடு கேட்டான் இளகிய நெஞ்சன். எனக்குத் தெரியவில்லையே! என்றான் கிறிஸ்தியான் பரிதாபமான குரலில். இது தான் நீ கூறிய மகிழ்ச்சியா? ஆரம்பமே இப்படியிருந்தால் மோட்சத்தை அடைவதற்குள் இன்னும் எவ்வளவு ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டியிருக்குமோ! என்னால் முடியாதப்பா! நீயே போய் எனக்குள்ள மகிழ்ச்சியையும் சேர்த்து அனுபவித்துக் கொள். நான் எப்படியாவது இங்கிருந்து தப்பித்துச் செல்வேன் என்று கோபத்துடன் கத்திய இளகிய நெஞ்சன் குட்டையிலிருந்து வெளியேறக் கடுமையாக முயன்றான். இறுதியில் தான் விழுந்த பக்க
ஒரு நாள் நான் அயர்ந்து தூங்கும்பொழுது ஒரு கனவு கண்டேன். அது ஒரு விசித்திரமான கனவு! அந்தக் கனவைப்பற்றி இப்பொழுது உங்களுக்குக் கூறப்போகிறேன்.
கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைக் கண்டேன். அவன் கையில் ஒரு பெரிய புத்தகம் இருந்தது. அவன் அந்தப் புத்தகத்தைத் திறந்து வாசிக்கத் துவங்கினான். அதைப் படிக்கும்போதே அவன் கண்கள் கலங்கின. உடல் நடுங்கியது.
ஐயோ! நான் என்ன செய்வேன் என்று கதறி அழுதான்.
அவன் தன் வீட்டினுள் நுழைந்தான். அவன் நிலையைக் கண்ட அவன் மனைவியும் பிள்ளைகளும் அருகே வந்தார்கள். அவனால் தனது கவலையை மறைக்கமுடியவில்லை.
அவர்களை அவன் அருகே அழைத்தான்.
என் அன்பான மனைவியே! என் அருமைப் பிள்ளைகளே, இதோ, என் முதுகிலுள்ள இந்தச் சுமை என்னை அதிகமாக அழுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் நாம் வசிக்கும் இந்த நகரம் வானத்திலிருந்து வரும் நெருப்பினால் அழிக்கப்படும் என்று இந்தப் புத்தகத்தில் படித்தேன். நாம் எப்படியாவது தப்பித்துக்கொள்ளவேண்டுமே. இல்லாவிட்டால் அழிந்துவிடுவோமே என்று அவன் புலம்பினான்.
அவனுடைய மனநிலை சரியில்லை என்று நினைத்துப் பயந்தார்கள் அவனுடைய மனைவியும் பிள்ளைகளும். அப்பொழுது இரவு நேரமாகிவிட்டமையால் அவனைப் படுத்து, உறங்கி ஓய்வெடுக்கும்படி கூறினார்கள். மறுநாள் காலையில் அவன் மனைவியும் பிள்ளைகளும் அவன் படுக்கையருகே வந்து அவன் எப்படியிருக்கிறான் என்று விசாரித்தார்கள். அவனோ இன்னும் மோசாமாகிவிட்டேனே என்று புலம்பினான். அவர்கள் வசிக்கும் நகரம் அழியப்போகிறது என்று கூறி மீண்டும் அவர்களை எச்சரித்தான். அவர்களோ அவன் பேச்சுக்கு செவிகொடுக்கவில்லை. அவனைக் கேலி செய்யவும், கிண்டல் பண்ணவும் துவங்கினார்கள்.
சிறுது நேரம் பொறுமையுடன் இருந்த அவன் மேலும் அந்த நிந்தனைகனைத் தாங்கமுடியாமல் தன்னுடைய அறைக்குள் சென்றான். தன் கவலையை நீக்குமாறு, தன் குடும்பத்தினர் உண்மை நிலையை அறிந்துகொள்ள உதவுமாறு ஆண்டவரை நோக்கி nஐபித்தான்.
அதன் பின்பு அவன் அடிக்கடி வயல்வெளிகுச் சென்று அந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருப்பான். சிலவேளைகளில் nஐபம் செய்வான். என்றாலும் அவன் கவலை நீங்கிவிடவில்லை.
நான் இரட்சிக்கப்படுவதற்கு அந்த அழிவிலிருந்து தப்புவதற்கு என்ன செய்யவேண்டும்? என்று அடிக்கடி புலம்பிக்கொண்டிருந்தான்!
நற்செய்தியாளரைச் சந்தித்தல்
ஒரு நாள் அவன் அழுது கொண்டிருந்தபோது நற்செய்தியாளர் என்ற ஒருவர் அவனருகே வந்தார். ஏனப்பா நீ அழுகிறாய் என்று அன்புடன் கேட்டார்.
ஐயா, நான் ஒருநாள் மரித்துப்போவேன் என்றும் அதன்பின் என் தவறுகளுக்காகத் தண்டிக்கப்படுவேன் என்றும் இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தத் தண்டனைக்குப் பயப்படுவதால் என்னால் சாவைப்பற்றி நினைக்க முடியவில்லை என்றான் கிறிஸ்தியான் என்ற பெயரையுடைய அவன்.
இந்த உலகத்தில்தான் இவ்வளவு துன்பங்களும் தொல்லைகளும் இருக்கின்றனவே? பிறகு ஏன் நீ சாவைப் பற்றிக் கவலைப்படவேண்டும்? என்று கேட்டார் நற்செய்தியாளர்.
ஜயோ, இதோ என் முதகில் இருக்கிறதே என் பாவச்சுமை. நான் இறந்தபிறகு இந்தச் சமை என்னை அழுத்தி நரகத்திற்கே கொண்டுபோய்விடும் என்று நினைக்கிறேன் என்றான் கிறிஸ்தியான் கவலையுடன்.
பிறகு ஏன் இங்கே சுற்றிக்கொண்டு இருக்கிறாய்? என்று கேட்டார் நற்செய்தியாளர்.
எனக்கு எங்கே போவது என்றே தெரியவில்லை! என்று அங்கலாய்த்தான் கிறிஸ்தியான்.
நற்செய்தியாளர் அவனிடம் ஒரு காகிதச் சுருளைக் கொடுத்தார். அவன் அதைத் திறந்து பார்த்தான்.
அதில் வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள ஓடிப்போ! என்று எழுதப்பட்டிருந்தது.
அவன் நற்செய்தியாளரைப் பார்த்து நான் எங்கே ஓடிப்போக வேண்டும்? என்று கேட்டான்.
நற்ச்செய்தியாளர் தன் கையை நீட்டி வெகு தூரத்தில் சுட்டிக்காட்டி, அதோ வெகு தூரத்தில் ஓரு இடுக்கமான வாசல் தெரிகிறதா? என்று கேட்டார்.
தெரியவில்லையே ஜயா! என்றான் கிறிஸ்தியான் கவலையுடன்.
அப்படியானால் ஒரு பிரகாசமான ஒளியாவது தெரிகிறதா? என்று கேட்டார் நற்செய்தியாளர்.
ஆம் ஜயா, வெகு தூரத்தில் ஓர் ஒளி தெரிகிறது! என்றான் கிறிஸ்தியான்.
நீ அந்த ஒளியை நோக்கி நேராக நடந்துபோ. அருகே நெருங்கும்போது அந்த இடுக்கமான வாசல் தெரியும். அந்த வாசல் கதவைத் தட்டு. அடுத்து நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே சொல்லப்படும் என்று கூறி வழியனுப்பினார் நற்செய்தியாளர்.
பயணம் துவங்குதல்
எனது கனவில் அவன் அந்த ஒளியை நோக்கி வேகமாக ஓடுவதைக் கண்டேன். அவன் மனைவியும், பிள்ளைகளும் அவன் பின்னால் ஓடி அவனை வீடு திரும்பும்படி கெஞ்சினார்கள், கதறினார்கள்! ஆனால் அவனோ தன் காதுகளைப் பொத்திக்கொண்டு நித்திய வாழ்வு, நித்திய வாழ்வு என்று கத்தயபடி அந்த ஒளியை நோக்கி ஓடினான். திரும்பியே பார்க்கவில்லை.
அந்த நகரத்தில் உள்ளவர்கள் அவன் ஓடுவதை வியப்போடு பார்த்தார்கள்.சிலர் அவனைக் கேலி செய்தார்ர்கள்.சிலர் அவனைத் திரும்பி வரும்படி கூப்பிட்டார்கள்.அவர்களில் கடின நெஞ்சன், இளகிய நெஞ்சன் என்ற இருவர் மட்டும் அவனை எப்படியாவது கூட்டி வருவோம் என்று சபதம் செய்துவிட்டு அவன் பின்னே ஓடினார்கள்.
அவர்கள் இருவரும் கிறிஸ்தியானுக்கு முன்பாக ஓடிச் சென்று அவனை வழிமறித்தார்கள். ஏன் என்னை வழிமறிக்கிறீர்கள்? என்று கேட்டான் கிறிஸ்தியான்.
நீ கண்டிப்பாக எங்களுடன் நகரத்திற்குத் திரும்பி வரவேண்டும் என்று வற்புறுத்தினார்கள் இருவரும்.
அது ஒருக்காலும் முடியாது. இந்த நகரம் கண்டிப்பாக ஒரு நாள் நெருப்பினால் அழிக்கப்பட்டு விடும். நீங்கள் அதில் இருந்தால் அதோடு அழிந்து போவீர்கள் நீங்களும் என்னுடன் வந்து அழிவிற்குத் தப்பிக்கொள்ளுங்கள் என்றான் கிறிஸ்தியான். எங்கள் நண்பர்களையும் எல்லா வசதிகளையும் விட்டுவிட்டு எவ்வாறு வரமுடியும்? என்று கேட்டான் கடின நெஞ்சன்.
ஆமாம், கண்டிப்பாக நண்பர்களையும், வசதிகளையும் விட்டுவிட்டுத்தான் வர வேண்டும். ஏனென்றால் நான் போகிற இடத்திலே இதைவிட மேலான நிரந்திர மகிழ்ச்சி கிடைக்கும். நீங்களும் என்னுடன் வந்தால் அதை அனுபவிக்கலாம் என்றான் கிறிஸ்தியான். இந்த உலகத்தை விட்டுவிட்டு நீ வேறு எதைத்தேடி ஓடுகிறாய்? என்று எரிச்சலுடன் கேட்டான் கடின நெஞ்சன்.
அழியாததும், மாசற்றதும், வாடாததுமான (1 பேதுரு 1:4 ) சுதந்திரத்தைத் தேடிச் செல்கிறேன். மோட்சத்தில் இந்த விடுதலை நமக்குக் கிடைக்கும். அதைத் தேடுகிற யாவரும் அதைக் கண்டடைவார்கள். இதோ இந்த புத்தகத்தைப் படித்துப் பார். உனக்கு எல்லாம் புரியும் என்று புத்தகத்தை நீட்டினான் கிறிஸ்தியான்.
உன்னுடைய புத்தகம் யாருக்கு வேண்டும்? நீ எங்களுடன் திரும்பி வரப்போகிறாயா இல்லையா? அதைச் சொல் முதலில் என்று அலட்சியமாகக் கேட்டான் கடின நெஞ்சன். வரமாட்டேன். நான் கலப்பையின்மீது கை வைத்து விட்டேன். இனிமேல் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்று மறுத்துவிட்டான் கிறிஸ்தியான். இளகிய நெஞ்சனே, வா, போவோம். இவனிடம் பேசி ஒரு பயனுமில்லை. இவன் தான்தான் புத்திசாலி என்று நினைத்துப் பேசிக் கொண்டிருக்கிறான் என்று இளகிய நெஞ்சனை அழைத்தான் கடின நெஞ்சன்.
அப்படிச் சொல்லாதே. கிறிஸ்தியான் ஒரு நல்ல மனிதன் என்பதை நான் அறிவேன். அவன் சொல்வது உண்மையென்றால் நானும் அவனுடன் போக விரும்புகிறேன் என்றான் இளகிய நெஞ்சன். என்னது? முட்டாள்தனமாகப் பேசாதே. அவன் உன்னை எங்கே கூட்டிக்கொண்டு போவான் என்று உனக்குத் தெரியாதே. பேசாமல் என்னுடன் வந்துவிடு என்று அதட்டினான் கடின நெஞ்சன்.
ஐயா, தயவுசெய்து திரும்பிப் போகாதீர்கள். இரண்டு பேரும் என்னுடன் வாருங்கள். நான் சொல்லும் நித்திய மகிழ்ச்சி உண்மையானதே. நீங்கள் என்னை நம்பாவிட்டால் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமானதே. இந்த நூலை எழுதியவர் நமக்காகத் தன்னுடைய இரத்தத்தையே சிந்தியிருக்கிறார் என்று கூறிய கிறிஸ்தியானின் கண்கள் கலங்கின. இளகிய நெஞ்சன் கடின நெஞ்சனை நோக்கி, நான் இந்த நல்ல மனிதரோடு போவதே நல்லது என்று நினைக்கிறேன் என்று முடிவாககக் கூறினான்.
புpறகு அவன் கிறிஸ்தியானைப் பார்த்து, நீ போகும் இடத்திற்கு வழி தெரியுமா? என்று கேட்டான். அதோ அந்தப் பிரகாசமாக ஒளி தெரிகிறதே! அதற்கு அருகே இடுக்கமான வாசல் ஒன்று இருக்கிறது என்று நற்சேய்தியாளர் கூறியுள்ளார். அங்கு நாம் போகும்போது அடுத்த நாம் செய்ய வேண்டியது என்னவென்று அங்கே கூறப்படுமாம் என்றான் கிறிஸ்தியான். நல்லது. அப்படியென்றால் நானும் உன் கூடவே வருகிறேன் என்று கூறிய இளகிய நெஞ்சன் கிறிஸ்தியானுடன் சேர்ந்து நடக்கத் துவங்கினான். இதைக் கண்ட கடின நெஞ்சன் முட்டாள்களே, நான் உங்களுடன் வரப்போவதில்லை என்று கூறியபடியே நகரத்தை நோக்கித் திரும்பிவிட்டான்.
கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும்
கிறிஸ்தியானும் இளகிய நெஞ்சனும் பேசியவாறே அந்கச் சமவெளியில் நடந்து செல்வதை என் கனவில் கண்டேன்.
இளகிய நெஞ்சனே நல்லதுதான் நீ என்னுடனே வந்தாய். நாம் போகும் இடத்தை அடைய முடியாவிட்டால் நமக்குக் கிடைக்கப் போகும் நரக தண்டனையைப் பற்றி அறிந்திருந்தால் கடின நெஞ்சன் இப்வாறு திரும்பிப் போயிருக்கமாட்டான். பாவம்! என்றான் கிறிஸ்தியான்.
அது இருக்கட்டும். நாம் போகிற இடத்திலுள்ள நித்திய மகிழ்ச்சியைப்பற்றி எனக்குக்கொஞ்சம் சொல்லமாட்டாயா? என்று ஆவலுடன் கேட்டான் இளகியநெஞ்சன். நான் சொல்லுவதைவிட அந்த மகிழ்ச்சியை அனுபவித்து உணர்வதே மேலானாதாக இருக்கும். என்றாலும் இந்தப் புத்தகம் அதைப் பற்றிக் கூறும் சில வசனங்களை வாசிக்கட்டுமா? என்றான் கிறிஸ்தியான்.
அது சரி இந்தப் புத்தகத்தில் உள்ள வசனங்கள் எல்லாம் உண்மையானவை என்று உனக்குத் தெரியுமா? என்று சந்தேகத்தோடு கேட்டான் இளகிய நெஞ்சன். நிச்சயமாக! ஏனென்றால் பொய்யே கூறாத ஒருவரால் எழுதப்பட்டு புத்தகம் இது என்றான் கிறிஸ்தியான். அப்படியா? அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? நாம் நித்திய காலமாக சாகாமல் வாழக்கூடிய நித்திய ராஐ;யம் ஒன்று இருக்கிறது என்று இந்தப் புத்தகம் கூறுகிறது. அந்த இடம்தான் மோட்சம். மோட்சத்தை நோக்கிதான் இப்போது பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்றான் கிறிஸ்தியான். ரொம்பவும் மகிழ்ச்சி! மோட்சம் எப்படி இருக்கும்? என்று ஆவலாகக் கேட்டான் இளகியநெஞ்சன்.
அங்கே நாம் அணிந்துகொள்ள மகிமையின் கிரீடம் கொடுக்கப்படும். நமது உடைகள் சூரியனைப்போல் பிரகாசமாக இருக்கும். அங்கே அழுகையும,; கவலையும் கிடையவே கிடையாது. ஆண்டவரே நமது கண்ணீர் யாவையும் துடைப்பார் (வெளி 21:4) என்றான் கிறிஸ்தியான். நம்முடனே வேறு யார் அங்கே இருப்பார்கள்? என்று கேட்டான் இளகிய நெஞ்சன்.
ஒளிவீசும் தேவ தூதர்கள் அங்கே இருப்பார்கள். நமக்கு முன்பாக அங்கே போயிருக்கிற ஆயிரக்கணக்கான மனிதர்கள் அங்கே இருப்பார்கள். அவர்களில்அநேகர் ஆண்டவர்மீதுள்ள அன்பினாலும், அவருக்குக் கீழ்ப்படிந்ததின் நிமித்தமாகவும் அநேக துன்பத்தை அடைந்திருக்கிறார்கள். சிலர் வாளால் வெட்டுப்பட்டிருக்கிறார்கள். சிலர்நெருப்பில் சுட்டெரிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் காட்டு மிருகங்களுக்கு இரையாகப்போடப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களோ இன்று நித்திய வாழ்வு பெற்று மோட்சத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றான் கிறிஸ்தியான். நாமும் அந்த மகிழ்ச்சியைப் பெறுவது எப்படி என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டான் இளகிய நெஞ்சன்.
இந்தப் புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று சொல்லட்டுமா? நாம் ஆண்டவரை நோக்கி விருப்பத்தோடு கேட்டால் அவர் இவற்றை நமக்கு இலவசமாகத் தருவாராம் என்றான் கிறிஸ்தியான். அப்படியா? ரொம்பவும் மகிழ்ச்சி. வா, சீக்கிரமாகவே நாம் அங்கே போகலாம் என்று துரிதப்படுத்தினான். பொறு, பொறு. என் முதுகில் இருக்கிறதே பெரிய சுமை! என்னால் வேகமாக நடக்க முடியவில்லை என்று பரிதாபத்துடன் கூறிய கிறிஸ்தியான் அவன் பின்னே தள்ளாடியபடியே நடந்தான்.
குட்டையில் விழுந்தார்கள்
அவர்கள் இவ்வாறு சென்றுகொண்டிருக்கும் பொழுது பேச்சு சுவாரசியத்தில் வழியின் குறுக்கே இருந்த அவநம்பிக்கை என்ற குட்டையைக் கவனிக்கவில்லை! கால் தவறி இருவரும் அதில் விழுந்துவிட்டார்கள்! குட்டையைவிட்டு வெளியேற அங்குமிங்கும் புரண்ட போது அவர்கள் உடலெங்கும் சேறு அப்பிக்கொண்டது! கிறிஸ்தியானின் முதுகிலுள்ள சுமையினால் அவன் மெல்ல மெல்ல சகதியினுள் மூழ்கத் துவங்கினான்!
என்ன இது? நாம் ஏன் இவ்வாற சிக்கிக்கொண்டோம்? ஏன்று கோபத்தோடு கேட்டான் இளகிய நெஞ்சன். எனக்குத் தெரியவில்லையே! என்றான் கிறிஸ்தியான் பரிதாபமான குரலில். இது தான் நீ கூறிய மகிழ்ச்சியா? ஆரம்பமே இப்படியிருந்தால் மோட்சத்தை அடைவதற்குள் இன்னும் எவ்வளவு ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டியிருக்குமோ! என்னால் முடியாதப்பா! நீயே போய் எனக்குள்ள மகிழ்ச்சியையும் சேர்த்து அனுபவித்துக் கொள். நான் எப்படியாவது இங்கிருந்து தப்பித்துச் செல்வேன் என்று கோபத்துடன் கத்திய இளகிய நெஞ்சன் குட்டையிலிருந்து வெளியேறக் கடுமையாக முயன்றான். இறுதியில் தான் விழுந்த பக்க

Syndication
No Comment for this post yet...