Last Comment

No Comments

Calendar

April 2008
SunMonTueWedThuFriSat
 << < > >>
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

news



I.Lipni Hezron



Free chat widget @ ShoutMix


Sign up for PayPal and start accepting credit card payments instantly.

Market Forex LTD.
Easy. Safe. No risk.


Who's Online?

Member: 0
Visitor: 1

Tags

No tags in this Blog

rss Syndication

Choose a skin



Links

    சில பதிவ

    கிறிஸ்தியான் கதை பாகம் 1 பிரிவு 4

    சிலுவையைத் தரிசித்தல்

    பாட்டுப்பாடிக்கொண்டு, மகிழ்ச்சியோடு நடந்து சென்றான் கிறிஸ்தியான். அவன் சென்ற பாதையின் இருபுறத்திலும் இரட்சிப்பு என்ற சுவர்கள் இருப்பதை நான் என் கனவில் கண்டேன். உற்சாகமடைந்தவனாக முதுகுச் சுமையோடு ஓடத் துவங்கினான் கிறிஸ்தியான். ஓர் உயரமான இடத்தை அடைந்தான் அவன். அங்கே மரத்தாலான ஒரு சிலுவை நிறுத்தப்பட்டிருந்தது! அதனருகே காலியான ஒரு கல்லறை!

    கிறிஸ்தியான் சிலுவையின் அருகே வந்தவுடன் அவன் முதுகிலிருந்த சுமை படாரென அறுந்து கீழே விழுந்தது! உருண்டுபோய் திறந்திருந்த கல்லறைக்குள் சென்று மறைந்துவிட்டது அதன் பிறகு நான் அந்தச் சுமையையே பார்க்கவில்லை.

    அவரது பாடுகளினால் எனக்கு விடுதலை கிடைத்தது! அவரது மரணத்தினால் எனக்கு வாழ்வு கிடைத்தது! என்று கூறி மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்தான் கிறிஸ்தியான். வியப்போடு சிலுவையைப் பார்த்தவனாக அங்கையே நின்றுகொண்டிருந்தான் அவன். அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

    அப்போது பிரகாசமான ஆடையணிந்த மூவர் வந்து, உனக்கு சமாதானமுண்டாகட்டும் என்று கிறிஸ்தியானை வாழ்த்தினார்கள். முதலாமவர் உன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன என்றார். இரண்டாமவர் அவனது கந்தையாடைகளைக் களைந்து புதிய வெண்ணங்கியை அவனுக்கு அணிவித்தார். மூன்றாமவர் அவன் நெற்றியில் ஓர் அடையாளத்தைப் பதித்து, அவன் கையில் முத்திரையிடப்பட்ட சுருள் ஒன்றைக் கொடுத்தார். நீ செல்லும் பாதையில் இதைப் படித்துப்பார். நீ மோட்ச வாயிலை அடையும்போது இந்தச் சுருளைக் கண்டிப்பாகக் கொடுக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

    மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தபடி, எந்தவிதமான முதுகுச் சுமையும் இல்லாதவனாகத் தன் பயணத்தைத் தொடர்ந்தான் கிறிஸ்தியான். அந்த இடுக்கமான பாதையின் இடதுபக்கச் சுவற்றில் ஏறிக்குதித்து, கிறிஸ்தியானை நெருங்கும் இருவரை என் கனவில் கண்டேன். சம்பிரதாயன், வெளிவேசக்காரன் என்ற இருவருமே அவர்கள்.

    அவர்களைக் கண்டவுடன் கிறிஸ்தியான், ஐயா நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே போகிறீர்கள்? என்று கேட்டான். வீண்பெருமை என்ற ஊரிலிருந்து வருகிறோம். மோட்சத்துக்குச் சென்று பேரும் புகழும் பெற ஆசைப்படுகிறோம் என்றார்கள் அவர்கள்.

    ஐயாமார்களே, நீங்கள் மோட்சத்துக்குப் போக வேண்டுமென்று கூறுகிறீர்கள். ஆனால் இடுக்கமான வாசல் வழியே வராமல் குறுக்குப் பாதையில் வருகிறீர்கள். ஒழுங்கை மீறிய உங்களை ஆண்டவர் மோட்சத்துக்குள் நுழைய அனுமதிப்பாரா? என்று தாழ்மையுடன் சந்தேகம் கிளம்பினான் கிறிஸ்தியான்.

    எங்களுடைய வழி குறுக்குவழிதான். இவ்வாறு வருவதுதான் எங்கள் ஊர் மனிதர்களின் பழக்கம். நீயோ இடுக்கமான வாசல் வழியே வந்தாய்! நாங்களோ சுவர் ஏறி வந்தோம்! ஆனால் இருவரும் ஓரே பாதையில்தானே செல்கிறோம் என்று கூறினார்கள் அந்த இருவரும்.

    நானோ ஆண்டவரின் கட்டளைப்படி நடக்கிறேன். நீங்களோ உங்கள் சுய விருப்பத்தின்படி நடக்கிறீர்கள். ஆண்டவர் ஏற்கனவே உங்களைக் கள்வர்கள் என்று தீர்ப்பளித்திருப்பார் என்று உறுதியாகக் கூறினான் கிறிஸ்தியான். நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். நீ உன் வழியைப் பார்த்து நட என்று கூறிவிட்டார்கள் அந்த இருவரும்.

    மூவருமாக அந்தப் பாதையில் தொடர்ந்து நடந்து சென்றார்கள். அவர்கள் இருவரும் மீண்டும் கிறிஸ்தியானோடு விவாதத்திற்கு வந்தார்கள். நாங்களும் விதிகளைக் கடைப்பிடித்து நடப்பவர்கள்தான். எங்களுக்கும் உனக்கும் ஓரே வித்தியாசம் தான். நீ வெண்ணங்கி அணிந்திருக்கிறாய். எங்களுக்கு இல்லை அவ்வளவுதான் என்றார்கள்.

    ஆண்டவர் அளித்த அங்கி இது! நான் மோட்ச வாசலை அடையும்போது இந்த அங்கியின் மூலம் அவர் என்னை அடையாளம் கண்டுகொள்வார். என் நெற்றியில் ஓர் அடையாளம் போடப்பட்டுள்ளது. இதோ இந்த முத்திரையிடப்பட்டுள்ள சுருளை நான் வாசலண்டை வராதபடியால் உங்களுக்கு இவைகள் கொடுக்கப்படவில்லை என்றான் கிறிஸ்தியான். ஒன்றுமே பதில் கூறாத அவர்கள் கிறிஸ்தியானைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தார்கள்.

    கடினமலையை அடைதல்

    மூவரும் கடினமலை என்ற மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். அங்கே ஓரு நீரோடை காணப்பட்டது. அவர்கள் சென்ற பாதையின் இடதுபுறமும், வலதுபுறமும் இரண்டு பாதைகள் பிரிந்துசென்றன.

    ஆனால் இடுக்கமான பாதையோ அவற்றின் நடுவே மலையுச்சியை நோக்கிச் சென்றது!

    கிறிஸ்தியான் அந்த நீரோடைக்குச் சென்று தெளிந்த நீரைப் பருகினான். களைப்பு நீங்கியவனாக இடுக்கமான பாதையின் வழியாக மலையேறத் துவங்கினான்.

    இடுக்கமான பாதை மலையேறும் கடினமான பாதையாக இருப்பதைக்கண்ட சம்பிரதாயன், வெளி வேசக்காரன் இருவரும் மற்ற இரண்டு பாதைகளிலும் தனித்தனியே பிரிந்து சென்றார்கள். இடதுபுறம் அபாயப் பாதையில் சென்றவன் அடர்ந்த காட்டினுள் வழிதப்பி அலைந்தான்! வலதுபுறம் அழிவின் பாதையில் சென்றவன் செங்குத்தான பாறையிலிருந்து விழுந்து உயிர் துறந்தான்!

    இடுக்கமான பாதை வழியே மிகக் கடினத்துடன் பாதையேறத் துவங்கினான் கிறிஸ்தியான். போகப்போக பாதை செங்குத்தானபடியால் தவழ்ந்தபடி ஏற நேரிட்டது!

    பாதி வழியில் பயணிகளுக்காக ஆண்டவர் அமைத்த இளைப்பாறும் ஸ்தலம் இருந்தது. கிறிஸ்தியான் களைப்போடு அங்கு சென்று அமர்ந்தான். சுருளை எடுத்துப் படிக்கத் துவங்கினான். அவன் கண்களைத் தூக்கம் தழுவியது. சுருள் கையிலிருந்த நழுவியதுகூடத் தெரியாமல் ஆழ்ந்து உறங்கிவிட்டான்! அப்போது ஒருவர் வந்து, சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதன் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள் (நீதி.6:6) என்று கூறி அவனை எழுப்பி விட்டார்!

    திடுக்கிட்டு விழித்த கிறிஸ்தியான், மலையுச்சியை அடையும்வரை விரைந்து பயணம் செய்தான்! அங்கே இருவர் அவனை நோக்கி எதிர்த் திசையில் வருவதைக் கண்டு வியப்படைந்தான். கோழை, அவநம்பிக்கை என்ற அந்த இருவரையும் பார்த்து,

    ஏன் ஜயா? என்ன ஆயிற்று? என்று கேட்டான்.

    போகும் வழியில் சிங்கத்தைப் பார்த்தோம். இன்னும் போகப்போக அபாயம்தான் என்று எண்ணித் திரும்பிவிட்டோம் நடுங்கும் குரலில் கூறினார்கள் அந்த இருவரும்.

    நீங்கள் எனக்கும் பயமூட்டிவிட்டீர்கள். நான் இப்போது என்ன செய்வது? திருப்பிப் போவதென்றால் நிச்சயமாக மரணதண்டனைதான் கிடைக்கும். நேரே சென்றாலும் மரணத்துக்கேதுவான அபாயங்கள் என்று ஒரு கணம் தயங்கிய கிறிஸ்தியான்,

    இல்லை...................இல்லை................. நான் நேராகத்தான் செல்வேன். பாதையின் முடிவில் எனக்கு நித்திய வாழ்வு கிடைக்குமே! என்று கூறியபடி உற்சாகத்தோடு முன்னே செல்லத் துவங்கினான். கோழையும் அவநம்பிக்கையும் மலையிலிருந்து கீழிறங்கி ஓடிவிட்டார்கள்.

    சுருளைக் காணோம்

    நடந்து சென்ற கிறிஸ்தியான் சுருளில் கூறப்பட்டிருக்கும் ஆறுதலான வார்த்தைகளைப் படிக்கலாம் என்ற எண்ணத்துடன் பையினுள் கையைவிட்டான்! திடுக்கிட்டு நின்றான்! சுருளைக் காணாது கலவரமடைந்தான்! தான் உறங்கும்போதுதான் அதைக் கீழே விட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். முழங்காற்படியிட்டு ஆண்டவரிடம் தனது கவனக் குறைவுக்காக மன்னிப்புக் கேட்டான்.

    கண்ணீர்விட்டபடியே சுருளைத் தேடி ஓடினான் கிறிஸ்தியான். ஆண்டவர் அந்த இளைப்பாறும் தலத்தைக் கட்டியிருந்தது சற்று அமர்ந்திருக்கத்தானே! ஆனால் கடமையை மறந்து உறங்கிவிட்டது என்னுடை தவறுதானே என்று எண்ணி வருந்தினான்.

    இளைப்பாறும் தலத்தை அடைந்தவுடன் சுற்றிலும் தேடினான். சுருளைக் கண்டவுடன் அதை எடுத்துப் பத்திரமாக பையினுள் வைத்துக்கொண்டான். அப்போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

    வேகவேகமாக மீண்டும் மலைமீது ஏறினான் கிறிஸ்தியான். அனால் அவன் மலையுச்சியை அடைவதற்குள் இருட்டிவிட்டது! கோழையும், அவநம்பிக்கையும் சிங்கங்களைப் பற்றிக் கூறியிருந்தது அவன் நினைவில் எழுந்தது.

    இந்த இருட்டு வேளையில் அந்தச் சிங்கங்கள் என் மீது பாய்ந்து என்னைக் கொன்றுபோடுமே! என்று பயந்தான் கிறிஸ்தியான். உடன்தானே தனது தவறை உணர்ந்தான் அவன். தனது அவநம்பிக்கைக்காக ஆண்டவரை நோக்கி மன்னிப்புக் கேட்டான்.

    அலங்கார மாளிகை

    விசுவாசத்தோடு முன்னேறிச் சென்ற கிறிஸ்தியான் அலங்கார மாளிகை என்ற அழகான அரண்மனையைக் கண்டான். இரவு அங்கே தங்கச் செல்லலாம் என்ற நம்பிக்கையோடு மாளிகையை அடைந்தான்.

    அருகே செல்லச்செல்ல பாதை மிகவும் குறுகலாகியது! வாசலின் அருகே இரண்டு சிங்கங்கள் படுத்திருப்பதைக்கண்டு தயங்கினான்!

    கோழையும் அவநம்பிக்கையும் இந்தச் சிங்கங்களைக் கண்டுதான் பயந்து ஓடினார்கள்போலும்! என்று நினைத்தான் கிறிஸ்தியான்.

    கிறிஸ்தியான் தயங்கி நிற்பதைக் கண்டு விழித்திருப்போன் என்ற பெயருடைய அரண்மனைக் காவல்காரன், ஏன் கோழைபோல அங்கேயே நின்றுவிட்டாய்? சிங்கங்களைப்பற்றிப் பயப்படாதே! அவை சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றன! உன்னுடைய விசுவாசத்தைச் சோதிக்கவே அவை இங்கே இருக்கின்றன. நீ பாதையின் நடுவே நடந்து வந்தால் அவை உன்னை ஒன்றும் செய்யாது என்று அவனை நோக்கிக் கூறினான்;.

    நடுக்கத்துடனே கிறிஸ்தியான் மெதுவாக முன்னேறிச் செல்வதை நான் என் கனவில் கண்டேன். சிங்கங்கள் கெர்ஜித்தன! ஆனால் கிறிஸ்தியானை ஒன்றுமே செய்யவில்லை!

    காவல்காரனிடம் சென்று கிறிஸ்தியான் ஜயா, நான் இன்றிரவு இங்கே தங்கலாமா? என்று கேட்டான்.

    பயணிகள் பாதுகாப்பாகத் தங்குவதற்காகத்தான் இந்த மலையின் எஐமானர் இந்த மாளிகையைக் கட்டியுள்ளார். நீ எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டான் காவல்காரன்.

    அழிநகரத்திலிருந்து வருகிறேன். நித்திய நகரமான மோட்சத்தை நோக்கிச் செல்கிறேன் என்றான் கிறிஸ்தியான்.

    உன் பெயர் என்ன? ஏன் இவ்வளவு இருட்டிய பிறகு வருகிறாய்? என்று கேட்டான் காவல்க்காரன்.

    முன்பு என் பெயர் கிருபையற்றோன், ஜயா. இப்பபோதோ என் பெயர் கிறிஸ்தியான் என்று கூறி அவன் தான் இளைப்பாறும் தலத்தில் சுருளைத் தொலைத்து விட்டதுபற்றியும், அதைத் தேடி வருவதற்காக இவ்வளவு தாமதமாகிவிட்டது என்பதையும் எடுத்துரைத்தான்.

    இதைக் கேட்டவுடன் விழித்திருப்போன் ஒரு மணியை அடித்தான். மணியோசை கேட்டவுடன் விவேகம் என்ற பெயருடைய ஒரு அழகிய பெண்மணி கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

    காவல்காரன் கிறிஸ்தியானை அவளுக்கு அறிமுகம் செய்துவிட்டு, இவன் இங்கே இரவு தங்க அனுமதி கிடைக்குமா? என்று கேட்டான்.

    விவேகம் கிறிஸ்தியானைப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டாள். கிறிஸ்தியான் தான் பயணம் புறப்பட்டதின் காரணத்தையும், வழியில் தான் அனுபவித்த சோதனைகளும் எடுத்துக் கூறினான்.

    இதைக் கேட்ட விவேகம் கண்ணீர்விட்டாள். இங்கே வருவதற்குள் எவ்வளவு துன்பங்களைச் சகித்திருக்கிறீர்! வாரும், வீட்டிலுள்ள மற்றவர்களை அறிமுகம் செய்துவைக்கிறேன் என்று கூறி விவேகம் கிறிஸ்தியானை உள்ளே அழைத்துச் செனறாள்.

    முன்யோசனை, பக்தி, கருணை என்ற தன்னுடைய சகோதரிகளையும் மற்றவர்களையும் அவள் கிறிஸ்தியானுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவர்கள் அனைவரும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, வாரும்! என்று வாழ்த்துக்கூறி அவனை வரவேற்றார்கள்!

    விவேகமும் அவளுடைய சகோதரிகளும் நீண்ட நேரம் கிறிஸ்தியானோடு ஆண்டவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். உணவருந்திய பின்பு அவரவர் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றார்கள். சமாதானம் என்ற மேலறை கிறிஸ்தியானுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. விடியும்வரை மன அமைதியுடன் உறங்கினான் கிறிஸ்தியான்.

    மறுநாள் அந்தச் சகோதரிகள் மீண்டும் அவனுக்கு ஆண்டவரைப்பற்றி எடுத்துக் கூறினார்கள். அவர் தேவனுடைய ஓரே பேறான குமாரன் என்றும், அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்களை அவர் மன்னிக்கச் சித்தமாயிருக்கிறார் என்றும், அவரைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறின என்றும் விளக்கமாகச் சொன்னார்கள். கிறிஸ்தியான் அனைத்தையும் ஆவலோடு கேட்டு மனதில் பதிய வைத்துக்கொண்டான்.

    அதன்பின்பு அந்த மாளிகையின் ஆயுதசாலைக்கு அவனை அழைத்துச் சென்றார்கள். கச்சைகள், மார்க்கவசம், கேடகம், தலைச்சீரா, பட்டயம் (எபே.6:11-18) இவையனைத்தையும் கண்டு மகிழ்ச்சியடைந்தான் கிறிஸ்தியான்.

    நீர் போகும் வழியில் பல விரோதிகளையும், ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டியிருகக்கும். எனவே நீர் இந்த ஆயுதங்களை எடுத்துக் கொள்ளும் என்று சகோதரிகள் கேட்டுக் கொண்டார்கள்.

    உற்சாகத்தோடு கச்சை, மார்க்கவசம், தலைச்சீரா, காலில் போடும் பாதரட்சை இவற்றை அணிந்துகொண்டான் கிறிஸ்தியான். பட்டயத்தையும், கேடகத்தையும் கையில் பிடித்துக்கொண்டான்!

    இவ்வாறு கவசம் அணிந்தவனாக அவர்களுடன் புறப்பட்டு, மீண்டும் வாசலண்டை வந்தான்.

    ஜயா, யாராவது இந்த வழியே சென்றார்களா ? என்று காவல்க்காரனிடம் கேட்டான்.

    ஆமாம் உண்மையானவன் என்பவர் இந்த வழியே சென்றார். இதற்குள் மலையின் மறுபுறம் இறங்கி விட்டிருப்பார் என்றான் காவல்க்காரன்.

    ஊண்மையானவனா? என்னுடைய வீட்டிற்கு அருகில் வசித்தவன் தான் அவன். நான் துரிதமாகச் சென்றால் அவனைப் பிடித்துவிடலாம் என்று கூறிய கிறிஸ்தியான் உடனே புறப்பட்டான்.

    சகோதரிகள் நால்வரும் மலையடிவாரம் வரை அவனோடு வருவதாகக் கூறி உடன் வந்தார்கள்
    Admin · 8 views · Leave a comment
    Categories: இணைய நூல்
    11 May 2008. 05:45:06 pm

    Permanent link to full entry

    http://uyir.2k00.com/297030072994-b7/296530072993300730003021298030072991300629853021-296529803016-29863006296529903021-1-298630072992300729973009-4-b7-p12.htm

    Comments

    No Comment for this post yet...


    Leave a comment

    New feedback status: Awaiting moderation





    Your URL will be displayed.

     
    Please enter the code written in the picture.


    Comment text

    Options
       (Set cookies for name, email and url)