கிறிஸ்தியான் கதை பாகம் 1 பிரிவு 7
முகத்துதியைச் சந்தித்தல்
கிறிஸ்தியானும், நம்பிக்கையும் மகிழ்ச்சியோடு நடந்து சென்றார்கள். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது. எந்தப் பாதையில் செல்வது என்று தயங்கி நின்ற போது அங்கியால் முகத்தை மூடியிருந்த ஒருவன் அருகே வந்து ஏன் நிற்கிறீர்கள்? என்று கேட்டான்.
பயணிகள் இருவரும் பாதை தெரியவில்லை என்றார்கள். என்னைப் பின்பற்றி வாருங்கள், நானும் மோட்சத்திற்குத்தான் போகிறேன் என்றான் அவன். இருவரும் அவனுக்குப் பின்னே சென்றார்கள். அந்தப் பாதை வளைந்து வளைந்து சென்றபடியால் எந்தத் திசையில் செல்கிறோம் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை!
அப்போது இருவரும் ஒரு பெரிய வலையில் சிக்கிக்கொண்டார்கள்! அவர்களால் நகரக்கூட முடியவில்லை! அவர்களை அழைத்துவந்தவர்களின் முகத்திரை விலகியது! அவன்தான் முகத்துதி என்பதைக் கண்டு கலக்கமடைந்ததார்கள்! அவன் அவர்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றான்.
முகத்துதியிடம் எச்சரிக்கையாயிருங்கள் என்று மேய்ப்பன் கூறினாரே! நாம் கவனக் குறைவால் இப்படி மாட்டிக்கொண்டோமே! பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான் (நீதி.29:5 ) என்ற வார்த்தை எவ்வளவு உண்மையாகி விட்டது! என்று அங்கலாய்த்தான் கிறிஸ்தியான். சிறிது நேரம் கழித்து பிரகாசமான ஆடையணிந்து ஒருவர் அவர்களருகே வந்தார். அவர் கையில் ஒரு சாட்டை இருந்தது. வலையைக் கிழித்து அவர்களை விடுவித்தார்.
சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேசத்தை தரித்துக் கொள்வானே (2 கொரி 11:14) என்ற ஆண்டவருடைய வார்த்தைகளை மறந்துவிட்டீர்களே! மேய்ப்பன் கொடுத்த வரைபடத்தை எடுத்துப்பார்த்துச் சரியான பாதையை அறிந்திருக்கலாமே! என்று கடிந்து கொண்ட அவர் சாட்டையை எடுத்து அவர்களை அடித்தார்.
தண்டனையை அளித்த பின்பு வாருங்கள் சரியான பாதையை உங்களுக்கு காட்டுகிறேன் என்று அவர்களை அழைத்துச் சென்று சரியான பாதையில் செல்ல வைத்தார். இருவரும் மயக்க நிலத்தை வந்தடைந்தார்கள். காற்றே இல்லாததுபோல காணப்பட்டது! நடப்பதற்கே கடினமாக இருந்தது! நம்பிக்கை சற்று அமர்ந்து ஒய்வெடுக்கலாம் என்று கூறினான்.
மேய்ப்பன் கூறியதை மறந்துவிட்டாயா? இது மயக்க நிலம் நாம் முழுக் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்தான் கிறிஸ்தியான்.
உறங்கிவிடாதிருக்க ஆண்டவர் செய்த அற்புதங்களைப்பற்றிப் பேசிக்கொண்டே நடந்து, அந்த நிலத்தைக் கடந்துவிட்டார்கள்.
பேரின்பபுரத்தில் பயணிகள்
இருவரும் பேரின்பபுரத்தை அடைந்தார்கள். இங்கு நறுமணம் கொண்ட தென்றல் வீசியது! தihயெங்கும் வண்ண வண்ண மலர்கள்! எங்கும் பறவைகளின் இன்னிசை கீதங்கள்! இங்கு சூரியன் இரவுபகலாகப் பிரகாசித்தது!
அங்கிருந்தபடியே மோட்சத்தைக் கண்டு மெய்மறந்து நின்றார்கள்! முத்துக்களாலும், நவரத்தினங்களாலும் கட்டப்பட்டிருந்த அந்தப் பட்டணம் பிரகாசமாக ஒளி வீசியது. தரையெங்கும் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டு தகதகவென்று மின்னியது! சூரிய ஒளி அதன்மீது பட்டுப் பிரதிபலிப்பதைக் காண முடியாமல் கண்களைப் பொத்திக் கொண்டார்கள் இருவரும்! மோட்சப் பட்டணம் அவ்வளவு பிரகாசமாக இருந்தது!
பயணிகள் இருவரும் அங்கிருந்து தோட்டத்தின் பழங்களைப் பறித்து உண்டார்கள். மர நிழலில் படுத்து ஒய்வெடுத்தார்கள்.
அவர்கள் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தபோது தங்கம்போல ஒளிவீசும் ஆடையணிந்த இருவரைச் சந்தித்தார்கள். அவர்கள் முகம் பிரகாசமாக இருந்தது! பயணிகளைக் கண்டு நலம் விசாரித்தார்கள் அவர்கள்.
இன்னும் இரண்டு சோதனைகளைத்தான் நீங்கள் சகிக்க வேண்டியிருக்கிறது. அதன்பிறகு மோட்சத்தை அடையலாம் என்று அவர்கள் கூறியவுடன் பயணிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!
மேலும் சிறிது தூரம் சென்றவுடன் மோட்சத்தின் வாசலைக் கண்டார்கள். ஆனாலும் அவர்களுக்கும் வாசலுக்குமிடையே ஒரு பெரிய ஆறு ஓடியது! ஆதன் ஆழமோ அதிகம்! அதைக் கடக்கப் பாலமும் இல்லை! பயணிகள் இருவரும் தயங்கி நின்றார்கள்!
ஆதுவரை அவர்களுடன் வந்த ஒளிவீசும் ஆடையனிந்தவர்கள் நீங்கள் அந்த வாசலை அடையவேண்டுமானால் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்லவேண்டும் என்று கூறிவிட்டார்கள். பயந்து நடுங்கியபடியே ஆற்றினுள் இறங்கினார்கள் இருவரும்! சுpறிது நேரம் போவதற்குள்ளாக நீர்மட்டம் அவர்கள் தலைக்குமேல் வந்துவிட்டது! கிறிஸ்தியான் மூழ்கத்துவங்கினான்!
ஐயோ, அமிழ்ந்து போகிறேனே! என்று புலம்பினான். கவலைப்படதே கிறிஸ்தியான். ஆழம் அதிகமில்லை! என் கால்களுக்குக் கீழாக கடினமான தரை தட்டுப்படுகிறது என்று தேற்றினான் நம்பிக்கை.
ஆனால் கிறிஸ்தியானோ, நான் சாகும் வேளை நெருங்கிவிட்டது. என்னால் பாலும் தேனும் ஓடும் மோட்ச பூமியைப் பார்க்க முடியாது என்ற அங்கலாய்ப்போடு நம்பிக்கையின்மீது சாய்ந்துவிழுந்தான். கிறிஸ்தியான் மூழ்கிவிடக்கூடாதே என்று மிகவும் கடினத்துடன் அவனைத் தாங்கிப் பிடித்தபடியே நீந்தினான் நம்பிக்கை.
அப்போது நம்பிக்கை விசுவாசத்தோடு, இயேசுவானவரே, எங்களைக் காப்பாற்றும் என்று வேண்டினான். இந்த வார்த்தைகள் கிறிஸ்தியானுக்கு உற்சாகத்தைக் கொடுத்தன. அவனும் புத்துணர்வோடு நீந்தத் துவங்கினான். இவ்வாறு முதல் சோதனையில் வெற்றிபெற்றார்கள்!
மோட்சத்தை அடைந்தனர்
இருவரும் மறுகரையை அடைந்தார்கள். அங்கே ஒளிவீசும் ஆடை தரித்த இருவரும் வர்களுக்காகக் காத்திருந்தார்கள். பயணிகளை அன்போடு வரவேற்றார்கள்.
மோட்சம் ஒரு மேன்மையான குன்றின்மீது இருப்பதை நான் என் கனவில் கண்டேன். பயணிகள் ஒளிவீசும் ஆடை தரித்தவர்களுடன் சேர்ந்து மோட்சத்தை நோக்கி நடந்தார்கள். வாசலை நெருங்கியவுடன் மோட்சத்தின் தூதர்கள் அவர்களை எதிர்கொண்டு வந்தார்கள்.
இவர்கள் இருவரும் பூமியில் வாழும்போது ஆண்டவரை நேசித்தவர்கள். எல்லாவற்றையும் அவருடைய நாமத்திற்கென்று விட்டுவிட்டவர்கள் என்று கிறிஸ்தியானும் நம்பிக்கையும் அறிமுகம் செய்யப்பட்டார்கள்.
எக்காளம் வாசிப்பவர்கள் எக்காள தொனியோடு அவர்களை வரவேற்றார்கள். பயணிகள் இருவரும் வாசலை அடைந்தார்கள். அங்கேதான் இரணடாவது சோதனை இருந்தது!
அடையாளச் சுருள் எங்கே! என்ற கேள்வி கேட்கப்பட்டது.
உடனே அவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்த சுருளை எடுத்துக் கொடுத்தார்கள். அவை இராஜாதிராஜாவிடம் கொண்டுபோகப்பட்டன.
அவற்றைச் சோதித்த அவர் இந்தச் சுருள்களைக் கொண்டு வந்தவர்கள் எங்கே? என்று கேட்டார்.
அவர்களை உள்ளே அழைத்து வாருங்கள் அவர்கள் உள்ளே நுழையத் தகுதியுள்ளவர்களே என்று தீர்ப்பளித்தார் இராஜாதிராஜா.
கதவு திறக்கப்பட்டது. கிறிஸ்தியான், நம்பிக்கை இருவரும் மோட்சத்தினுள் நுழைவதை நான் என் கனவில் கண்டேன்.
இதோ அவர்கள் நுழைந்தவுடன் அவர்கள் உருவம் மாறியது! அவர்கள் முகம் பிரகாசித்தது! அவர்கள் பொன்போல ஒளிவீசும் ஆடையணிந்தவர்களாகக் காணப்பட்டார்கள்! அவர்கள் தலையில் பொன்முடி சூடப்பட்டது! ஆண்டவரைத் துதித்துபாட கின்னரம் கொடுக்கப்பட்டது!
மோட்சத்திலுள்ள மணிகள் எல்லாம் ஒலியெழுப்பின! எங்கும் பாடல் தொனி! ஆண்டவருடைய மகிழ்ச்சிக்குள் பிரவேசியுங்கள் என்ற குரல் எழும்பியது!
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக (வெளி.5:13) என்ற பாடலைப் பாடி அனைவருமாக ஆண்டவரைத் துதித்தனர்!
கிறிஸ்தியானும், நம்பிக்கையும் மகிழ்ச்சியோடு நடந்து சென்றார்கள். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது. எந்தப் பாதையில் செல்வது என்று தயங்கி நின்ற போது அங்கியால் முகத்தை மூடியிருந்த ஒருவன் அருகே வந்து ஏன் நிற்கிறீர்கள்? என்று கேட்டான்.
பயணிகள் இருவரும் பாதை தெரியவில்லை என்றார்கள். என்னைப் பின்பற்றி வாருங்கள், நானும் மோட்சத்திற்குத்தான் போகிறேன் என்றான் அவன். இருவரும் அவனுக்குப் பின்னே சென்றார்கள். அந்தப் பாதை வளைந்து வளைந்து சென்றபடியால் எந்தத் திசையில் செல்கிறோம் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை!
அப்போது இருவரும் ஒரு பெரிய வலையில் சிக்கிக்கொண்டார்கள்! அவர்களால் நகரக்கூட முடியவில்லை! அவர்களை அழைத்துவந்தவர்களின் முகத்திரை விலகியது! அவன்தான் முகத்துதி என்பதைக் கண்டு கலக்கமடைந்ததார்கள்! அவன் அவர்களை அப்படியே விட்டுவிட்டுச் சென்றான்.
முகத்துதியிடம் எச்சரிக்கையாயிருங்கள் என்று மேய்ப்பன் கூறினாரே! நாம் கவனக் குறைவால் இப்படி மாட்டிக்கொண்டோமே! பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான் (நீதி.29:5 ) என்ற வார்த்தை எவ்வளவு உண்மையாகி விட்டது! என்று அங்கலாய்த்தான் கிறிஸ்தியான். சிறிது நேரம் கழித்து பிரகாசமான ஆடையணிந்து ஒருவர் அவர்களருகே வந்தார். அவர் கையில் ஒரு சாட்டை இருந்தது. வலையைக் கிழித்து அவர்களை விடுவித்தார்.
சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேசத்தை தரித்துக் கொள்வானே (2 கொரி 11:14) என்ற ஆண்டவருடைய வார்த்தைகளை மறந்துவிட்டீர்களே! மேய்ப்பன் கொடுத்த வரைபடத்தை எடுத்துப்பார்த்துச் சரியான பாதையை அறிந்திருக்கலாமே! என்று கடிந்து கொண்ட அவர் சாட்டையை எடுத்து அவர்களை அடித்தார்.
தண்டனையை அளித்த பின்பு வாருங்கள் சரியான பாதையை உங்களுக்கு காட்டுகிறேன் என்று அவர்களை அழைத்துச் சென்று சரியான பாதையில் செல்ல வைத்தார். இருவரும் மயக்க நிலத்தை வந்தடைந்தார்கள். காற்றே இல்லாததுபோல காணப்பட்டது! நடப்பதற்கே கடினமாக இருந்தது! நம்பிக்கை சற்று அமர்ந்து ஒய்வெடுக்கலாம் என்று கூறினான்.
மேய்ப்பன் கூறியதை மறந்துவிட்டாயா? இது மயக்க நிலம் நாம் முழுக் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்தான் கிறிஸ்தியான்.
உறங்கிவிடாதிருக்க ஆண்டவர் செய்த அற்புதங்களைப்பற்றிப் பேசிக்கொண்டே நடந்து, அந்த நிலத்தைக் கடந்துவிட்டார்கள்.
பேரின்பபுரத்தில் பயணிகள்
இருவரும் பேரின்பபுரத்தை அடைந்தார்கள். இங்கு நறுமணம் கொண்ட தென்றல் வீசியது! தihயெங்கும் வண்ண வண்ண மலர்கள்! எங்கும் பறவைகளின் இன்னிசை கீதங்கள்! இங்கு சூரியன் இரவுபகலாகப் பிரகாசித்தது!
அங்கிருந்தபடியே மோட்சத்தைக் கண்டு மெய்மறந்து நின்றார்கள்! முத்துக்களாலும், நவரத்தினங்களாலும் கட்டப்பட்டிருந்த அந்தப் பட்டணம் பிரகாசமாக ஒளி வீசியது. தரையெங்கும் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டு தகதகவென்று மின்னியது! சூரிய ஒளி அதன்மீது பட்டுப் பிரதிபலிப்பதைக் காண முடியாமல் கண்களைப் பொத்திக் கொண்டார்கள் இருவரும்! மோட்சப் பட்டணம் அவ்வளவு பிரகாசமாக இருந்தது!
பயணிகள் இருவரும் அங்கிருந்து தோட்டத்தின் பழங்களைப் பறித்து உண்டார்கள். மர நிழலில் படுத்து ஒய்வெடுத்தார்கள்.
அவர்கள் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தபோது தங்கம்போல ஒளிவீசும் ஆடையணிந்த இருவரைச் சந்தித்தார்கள். அவர்கள் முகம் பிரகாசமாக இருந்தது! பயணிகளைக் கண்டு நலம் விசாரித்தார்கள் அவர்கள்.
இன்னும் இரண்டு சோதனைகளைத்தான் நீங்கள் சகிக்க வேண்டியிருக்கிறது. அதன்பிறகு மோட்சத்தை அடையலாம் என்று அவர்கள் கூறியவுடன் பயணிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!
மேலும் சிறிது தூரம் சென்றவுடன் மோட்சத்தின் வாசலைக் கண்டார்கள். ஆனாலும் அவர்களுக்கும் வாசலுக்குமிடையே ஒரு பெரிய ஆறு ஓடியது! ஆதன் ஆழமோ அதிகம்! அதைக் கடக்கப் பாலமும் இல்லை! பயணிகள் இருவரும் தயங்கி நின்றார்கள்!
ஆதுவரை அவர்களுடன் வந்த ஒளிவீசும் ஆடையனிந்தவர்கள் நீங்கள் அந்த வாசலை அடையவேண்டுமானால் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்லவேண்டும் என்று கூறிவிட்டார்கள். பயந்து நடுங்கியபடியே ஆற்றினுள் இறங்கினார்கள் இருவரும்! சுpறிது நேரம் போவதற்குள்ளாக நீர்மட்டம் அவர்கள் தலைக்குமேல் வந்துவிட்டது! கிறிஸ்தியான் மூழ்கத்துவங்கினான்!
ஐயோ, அமிழ்ந்து போகிறேனே! என்று புலம்பினான். கவலைப்படதே கிறிஸ்தியான். ஆழம் அதிகமில்லை! என் கால்களுக்குக் கீழாக கடினமான தரை தட்டுப்படுகிறது என்று தேற்றினான் நம்பிக்கை.
ஆனால் கிறிஸ்தியானோ, நான் சாகும் வேளை நெருங்கிவிட்டது. என்னால் பாலும் தேனும் ஓடும் மோட்ச பூமியைப் பார்க்க முடியாது என்ற அங்கலாய்ப்போடு நம்பிக்கையின்மீது சாய்ந்துவிழுந்தான். கிறிஸ்தியான் மூழ்கிவிடக்கூடாதே என்று மிகவும் கடினத்துடன் அவனைத் தாங்கிப் பிடித்தபடியே நீந்தினான் நம்பிக்கை.
அப்போது நம்பிக்கை விசுவாசத்தோடு, இயேசுவானவரே, எங்களைக் காப்பாற்றும் என்று வேண்டினான். இந்த வார்த்தைகள் கிறிஸ்தியானுக்கு உற்சாகத்தைக் கொடுத்தன. அவனும் புத்துணர்வோடு நீந்தத் துவங்கினான். இவ்வாறு முதல் சோதனையில் வெற்றிபெற்றார்கள்!
மோட்சத்தை அடைந்தனர்
இருவரும் மறுகரையை அடைந்தார்கள். அங்கே ஒளிவீசும் ஆடை தரித்த இருவரும் வர்களுக்காகக் காத்திருந்தார்கள். பயணிகளை அன்போடு வரவேற்றார்கள்.
மோட்சம் ஒரு மேன்மையான குன்றின்மீது இருப்பதை நான் என் கனவில் கண்டேன். பயணிகள் ஒளிவீசும் ஆடை தரித்தவர்களுடன் சேர்ந்து மோட்சத்தை நோக்கி நடந்தார்கள். வாசலை நெருங்கியவுடன் மோட்சத்தின் தூதர்கள் அவர்களை எதிர்கொண்டு வந்தார்கள்.
இவர்கள் இருவரும் பூமியில் வாழும்போது ஆண்டவரை நேசித்தவர்கள். எல்லாவற்றையும் அவருடைய நாமத்திற்கென்று விட்டுவிட்டவர்கள் என்று கிறிஸ்தியானும் நம்பிக்கையும் அறிமுகம் செய்யப்பட்டார்கள்.
எக்காளம் வாசிப்பவர்கள் எக்காள தொனியோடு அவர்களை வரவேற்றார்கள். பயணிகள் இருவரும் வாசலை அடைந்தார்கள். அங்கேதான் இரணடாவது சோதனை இருந்தது!
அடையாளச் சுருள் எங்கே! என்ற கேள்வி கேட்கப்பட்டது.
உடனே அவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்த சுருளை எடுத்துக் கொடுத்தார்கள். அவை இராஜாதிராஜாவிடம் கொண்டுபோகப்பட்டன.
அவற்றைச் சோதித்த அவர் இந்தச் சுருள்களைக் கொண்டு வந்தவர்கள் எங்கே? என்று கேட்டார்.
அவர்களை உள்ளே அழைத்து வாருங்கள் அவர்கள் உள்ளே நுழையத் தகுதியுள்ளவர்களே என்று தீர்ப்பளித்தார் இராஜாதிராஜா.
கதவு திறக்கப்பட்டது. கிறிஸ்தியான், நம்பிக்கை இருவரும் மோட்சத்தினுள் நுழைவதை நான் என் கனவில் கண்டேன்.
இதோ அவர்கள் நுழைந்தவுடன் அவர்கள் உருவம் மாறியது! அவர்கள் முகம் பிரகாசித்தது! அவர்கள் பொன்போல ஒளிவீசும் ஆடையணிந்தவர்களாகக் காணப்பட்டார்கள்! அவர்கள் தலையில் பொன்முடி சூடப்பட்டது! ஆண்டவரைத் துதித்துபாட கின்னரம் கொடுக்கப்பட்டது!
மோட்சத்திலுள்ள மணிகள் எல்லாம் ஒலியெழுப்பின! எங்கும் பாடல் தொனி! ஆண்டவருடைய மகிழ்ச்சிக்குள் பிரவேசியுங்கள் என்ற குரல் எழும்பியது!
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக (வெளி.5:13) என்ற பாடலைப் பாடி அனைவருமாக ஆண்டவரைத் துதித்தனர்!
Syndication
No Comment for this post yet...