சபிப்பதா? ஆசீர்வதிப்பதா?
கிறிஸ்துவின் கட்டளை நாம் சகலரையும் ஆசீர்வதிக்க வேண்டுமாக இருக்கின்றது. எம்மை நேசிக்கின்றவர்களை மாத்திரமல்ல. எம்மை சபிப்பவர்களையும் நாம் ஆசீர்வதிக்க தயாராக இருக்க வேண்டும். எங்களை எதிர்க்கிறவர்களுக்கு நாங்கள் நன்மை செய்ய வேண்டும் என இயேசு கூறுகின்றார். எங்களை துன்பப்படுத்துகின்றவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டுமாக இருக்கின்றது.
மொத்தமாக எங்களை தள்ளிவிட்ட, எதிர்த்த, அன்பு செலுத்தாத, துன்பப்படுத்தின ஒவ்வொருவரையும் நாம் நினைக்கும் போது ஜெபிப்பதும் ஆசீர்வதிப்பதும் இயேசுவின் கட்டளையாக உள்ளது. இயேசு சிலுவையில் இருந்தபோதும் கூட தம்மை கொலை செய்ய சதி செய்தவர்களுக்காக மன்னித்து ஜெபிக்கின்றார். அதைப்போலான அன்பை எம்மிடம் எதிர்பார்க்கின்றார். கிறிஸ்து எவ்வாறு எதிரிகளை நேசித்தாரோ அவ்வாறு நாமும் எம் எதிரிகளை நேசிக்க கற்றுக் கொள்ள Nவுண்டியது அவசியமாக இருக்கின்றது.
பிறரை மன்னிப்பதே நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதற்கான ஒரே அத்தாட்சியாக இருக்கின்றது. ஏனெனில் உலகத்தின் ஆசீர்வாதங்கள் தீயோருக்கும் நல்லோருக்கும் ஒன்றாகவே காணப்படும். எனினும் உலகத்தின் பின்னரான வாழ்க்கை தீயோருக்கு கசப்பானதாகவும் நல்லோருக்கு மகிழ்வானதாகவும் அமையும். இவ்வுலகத்திலுள்ள தீயோருக்கு அன்பு செலுத்துவதின் மூலமாக எதிர்கால பரலோகத்தின் வாரிசுகளாக நாம் மாற்றப்படுவதோடு கூட பிதாவின் பிள்ளைகளாக மாற்றப்படுகின்றோம்.
“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்@ உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்@ உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்@ உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்@ அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்”. மத்தேயு 5:44-45
மொத்தமாக எங்களை தள்ளிவிட்ட, எதிர்த்த, அன்பு செலுத்தாத, துன்பப்படுத்தின ஒவ்வொருவரையும் நாம் நினைக்கும் போது ஜெபிப்பதும் ஆசீர்வதிப்பதும் இயேசுவின் கட்டளையாக உள்ளது. இயேசு சிலுவையில் இருந்தபோதும் கூட தம்மை கொலை செய்ய சதி செய்தவர்களுக்காக மன்னித்து ஜெபிக்கின்றார். அதைப்போலான அன்பை எம்மிடம் எதிர்பார்க்கின்றார். கிறிஸ்து எவ்வாறு எதிரிகளை நேசித்தாரோ அவ்வாறு நாமும் எம் எதிரிகளை நேசிக்க கற்றுக் கொள்ள Nவுண்டியது அவசியமாக இருக்கின்றது.
பிறரை மன்னிப்பதே நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதற்கான ஒரே அத்தாட்சியாக இருக்கின்றது. ஏனெனில் உலகத்தின் ஆசீர்வாதங்கள் தீயோருக்கும் நல்லோருக்கும் ஒன்றாகவே காணப்படும். எனினும் உலகத்தின் பின்னரான வாழ்க்கை தீயோருக்கு கசப்பானதாகவும் நல்லோருக்கு மகிழ்வானதாகவும் அமையும். இவ்வுலகத்திலுள்ள தீயோருக்கு அன்பு செலுத்துவதின் மூலமாக எதிர்கால பரலோகத்தின் வாரிசுகளாக நாம் மாற்றப்படுவதோடு கூட பிதாவின் பிள்ளைகளாக மாற்றப்படுகின்றோம்.
“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்@ உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்@ உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்@ உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்@ அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்”. மத்தேயு 5:44-45


Syndication
No Comment for this post yet...