சுதந்தரவாளி
தேவன் தம்முடைய செய்தியை மக்களுக்கு அறிவிக்கும்படியாக தீர்க்கர்களை
தெரிந்தெடுத்தார். அவர்கள் அவருடைய செய்தியை அறிவித்து வந்தார்கள். இவ்வாறு முந்திய
நாட்களில் இறைவனது செய்தியை மக்கள் இவ்வாறான தீர்க்கதரிசிகளினூடாக பெற்றுக்கொண்டு இறைவனது
சித்தத்தை அறிந்து கொண்டார்கள். இவ்வாறு தேவனுடைய வார்த்தையானது மக்களுக்கு தேவனுடைய
தீர்க்கர்களால் அறிவிக்கப்பட்டு வந்தது. அவர்கள் மக்களுக்கு எச்சரிப்புக்களை கொடுத்தனர்.
தேவனுடைய வார்த்தைகளை அதிகாரத்தோடு அறிவித்தனர். தேவனுடைய நியாயத்தீர்ப்புக்களை வெளிப்படுத்தினர்.
மனந்திரும்பும் படியான செய்திகள் கொடுக்கப்பட்டது. தேவனுடைய கரத்தின் செயற்பாடுகள்
அவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. மக்களுக்கு தேவனுடைய செய்தி கிடைக்கும் போதெல்லாம்
மக்கள் பாவத்தில் கிடந்தார்கள். அவர்கள் தங்கள் தேவனை மறந்திருக்கும் போதெல்லாம் தேவன்
அவர்களை எச்சரித்தார். அவர்கள் தங்கள் குற்றங்களை பாவங்களை விட்டுவிட வேண்டும் என தேவன்
தமது தீர்க்கதரிசிகளினூடாக எச்சரிக்கை விடுத்தார். சிலவேளைகளில் மக்கள் தங்கள் பாவங்கை
அறிக்கையிட்டு மன்நதிரும்பிய போதும் பலவேளைகளில் தேவனுடைய வார்த்தைகளை மக்கள் ஏற்றுக்கொள்ள
தயக்கம் காட்டினார்கள். இன்னும் பலர் புறக்கணித்தார்கள். ஆயினும் மக்கள் மேலான தேவனுடைய
அன்பு அவர்களை தேவன் பக்கமாக சார்ந்து கொள்ளச் செய்ய இன்னுமதிகமதிகமான தீர்க்கர்கள்
பயன்படுத்தப்பட்டனர். முற்றிலுமாக தேவனுடைய வார்த்தைகளை புறக்கணித்த மக்கள் மீது அழிவுகள்
ஏற்பட்டது. முற்றும் தேவனை மறந்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள். அவர்களுடைய ஆஸ்திகள்
அழிக்கப்பட்டன. அவர்களுடைய சந்ததி ஏனைய தேசங்களுக்கு சிதறடிக்கப்பட்டது. இயற்கை அழிவுகள்
மூலமாகவும் தேவன் அவர்களை உலகினின்று நீக்கினார். இவ்வாறாக தேவனுடைய செய்தியின் எச்சரிப்புக்கள்
அவர்கள் மேலாக கிரியை செய்தது. இவ்வாறு தேவனுடைய செய்தியை பெற்றுக்கொண்டும் அவருக்கு
விரோதமாக கிரியை செய்த மக்களுக்கு மேலும் தண்டனைகள் இறைவனால் வழங்கப்பட்டன. மக்கள்
தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயந் தீர்க்கப்பட்டனர். அவர்களுக்கு எச்சரிப்புக்களை
கொடுத்துக்கொண்டிருந்த தீர்க்கதரிசிகள் சிலவேளைகளில் மக்களால் துரத்தப்பட்டார்கள்.
ஆயினும் தேவனுடைய செய்தியை அவர்கலே மக்களுக்கு அறிவிக்கவேண்டிய
கடப்பாடுடையவர்களாய் இருந்தனர். தீர்க்கதரிசிகளின் காலம் முடிவில் இறைவனே மனிதனாய்
குமாரனாக வந்து தம்முடைய செய்தியை மக்களுக்கு அறிவித்தார். மக்கள் அச்செய்தியைக் கேட்டபோதும்
தங்கள் மனக்கவலைகளினிமித்தம் அச்செய்தியை உதறித்தள்ளினார்கள். அவர்களுக்கு அச்செய்தியின்
எச்சரிப்புக்கள் கடுமையாக காணப்பட்டதற்கு அவர்களுடைய பாவங்கள் காரணமாய் அமைந்துள்ளது.
ஏனெனில் உலகத்தின் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை உலகத்தின் தற்காலிக அதிபதியான பிசாசு
மறுதலிக்க வைக்கும் செயல்களில் ஈடுபடுகின்றான். பிசாசு எனும் சாத்தானின் தந்திரமானது
கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை என்பதும் அவர் உயிரோடு எழுப்பப்படவில்லை எனவும்
நம்ப வைப்பதாகும். ஆயினும் கிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ளவர்களாகிய எமக்கு சாத்தானின்
தந்திரங்களை எதிர்த்து நிற்பதற்கு பரிசுத்த ஆவியானவர் எமக்கு தோளோடு தோள் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்.
அதெப்படியெனில் கிறிஸ்துவானவர் இந்த உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களோடு இருப்பேன்
என்று எப்போது வாக்குக் கொடுத்தாரோ அன்றிலிருந்து அவர் எங்களோடு இருக்கின்றார். அவர்
தம்முடைய ஆவியாகிய பரிசுத்த ஆவியானவராய் எம் அருகில் இருக்கின்றார்.
ஏனெனில் பிசாசானவனின் தந்திரங்களிலிருநு;து எம்மை விடுவிக்கத்தக்க
செயலை மேற்கொண்ட இயேசுக்கிறிஸ்துவின் மேலான விசுவாசமே எங்களை தேவனோடு இணைக்கின்றது.
நாம் தேவனோடு இணைவதற்கான ஒரே வழி இயேசு கிறிஸ்துவாய் இருக்கின்றது. இயேசுக்கிறிஸ் எம்மை
தேவனோடு இணைக்கின்ற பாலமாய் இருக்கின்றார். எவ்வாறெனில் இயேசுக் கிறிஸ்துவைக் கண்டவன்
பிதாவைக் காண்கின்றான் என்பதும் பிதாவின் செயல்களையே இயேசு செய்கின்றார் என்பது வேதாகமம்
தெளிவாக கூறுகின்றது. தேவனுடைய செய்தியை கொடுக்கின்றவராக கிறிஸ்து வருவதே உலகத்திற்கு
தேவனால் கிடைத்த இறுதியான வெளிப்பாடாக இருக்கின்றது. அதென்னவென்றால் தேவனுடைய செய்தியை
உலகமானது கிறிஸ்துவின் ஊடாகவே கேட்கின்றது. அவரே உலகத்திற்கு வந்த தேவனுடைய இறுதியான
ஊடகமாக காணப்படுகின்றார். அவராலேயல்லாமல் இரட்சிப்பு இல்லை. அவரே நித்திய எதிர்காலத்தை
வாக்களிக்கின்ற மேசியா. அவர் அன்று அருளிய நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வதே இன்றைய மக்களுக்கு
நாம் கொடுக்கத்தக்க பிரதான செய்தியாகும். தேவன் எவ்வாறு தம்முடைய செய்தியை மக்களுக்கு
அறிவிக்க இயேசுவை தெரிந்து கொண்டாரோ அவ்வாறு இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருடைய செய்திகளுக்கு
தலைசாய்க்கும் போது தேவனுக்கு ஏற்ற செய்தியை கடைபிடிக்கின்ற மக்களாக நாம் மாற்றப்படுகின்றோம்
என்றால் அதில் எந்த சந்தேகமுமில்லை.
எபிரெயர் 1:1-2
பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள்
மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,
இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்.
இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.


Syndication
No Comment for this post yet...