தூய ஆவியானவரின் கிரியைகள்
கிறிஸ்துவிற்கு பின்னரான இன்றைய நாட்களில் கிரியை செய்கின்றவராக பரிசுத்த ஆவியானவர் காணப்படுகின்றார். கிறிஸ்து உயிர்த்தெழுந்தவராக பரலோகிற்கு செல்லுமுன் தமது ஆவியானவரை அனுப்புவதாக கட்டளையிட்டதை இப்போது நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றோம். இன்றைய சபைகளில் தூயஆவியானவரே பிரதானமானவராக காணப்படுகின்றார். எவ்வாறு கிறிஸ்து கண்களுக்கு காணப்பட்டாரோ அவ்விதமாகவன்றி பரிசுத்த ஆவியானவர் எம் மாம்ச கண்களால் காணமுடியாதவராக காணப்படுகின்றார். ஆனாலும் அவரது செயல்கள் நிறைவேற்றப்படுகின்றன.
தூய ஆவியானவர் கிறிஸ்துவைக் குறித்து சாட்சிக் கொடுக்கின்றவராக இருக்கின்றார்.
“இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை”. எபேசியர் 3:6. கிறிஸ்துவின் இரகசியங்களை வெளிப்படுத்துகின்றவராக பரிசுத்த ஆவியானவரே காணப்படுகின்றார். ஏனெனில் இந்த இரகசியத்தை முற்காலத்தில் அல்லது கிறிஸ்துவிற்கு முன்னிருந்தவர்கள் அறிந்து கொள்ளவில்லை. கிறிஸ்தவர்களது மாபெரும் துணையாளராக தூயஆவியானவர் காணப்படுகின்றார். ஏனெனில் கிறிஸ்தவன் தான் மற்றோருடன் இருக்கின்ற பொழுது அவனுடைய செயல்கள் ஆவியானவரால் எண்ணப்படுவது போல ஒவ்வொருவரதும் செயல்களை அவதானித்துக் கொண்டிருக்கின்றார். கிறிஸ்தவனுக்கு கூறப்படும் காரியங்களை அவரும் அருகிலிருந்த படியே பார்க்கின்றார். சபையில், வெளியில், வீட்டினில், எங்கும் அவர் இருக்கின்றார். மனிதனுக்கு அருகில் அவர் நபராக காணப்படுகின்றார். கிறிஸ்தவன் தனது ஆவியில் அவரோடு பேச முடியும். ஒரு பிள்ளை தகப்பனோடு உறவாடுவது போல தூய ஆவியானவரோடு உரையாட முடியும். ஏனெனில் அவர் ஆவியாயிருக்கிற போதிலும் எங்களை கண்காணித்துக் கொண்டு இருக்கின்றார். கிறிஸ்துவிற்கு முன்னராக காலத்தில் தேவன் மகிமையில் வெளிப்பட்டார். இராஜாக்களுக்கும் மக்களுக்கும் அவர் செய்தியை தமது தீர்க்கதரிசிகளினூடாக கொடுத்துக் கொண்டிருந்தார். கிறிஸ்து மூலமாக தேவன் நேரடியாக மனிதக் கண்களுக்கு தென்பட்டதோடு தமது செய்தியை அவர்களுக்கு அறிவித்தார். இன்றைய நாட்களில் தேவன் தமது ஆவியில் எங்களோடு இணைந்திருக்கின்றார். நாம் எமது ஆவியின் ஊடாகவே அவரோடு தொடர்பு கொள்ள முடிகின்றது. ஆகவே தான் கிறிஸ்துவிற்காக மரிக்கவும் அநேகர் தயாராக இருந்திருக்கின்றார்கள். ஏனெனில் மரணம் மாம்சத்திற்குரியது. ஆதன் பின்னரான நித்திய வாழ்க்கை தேவனுடன் தொடரப் போகின்றது. மரணத்தின் போது ஆவியானது மாம்சத்திலிருந்து ஒரு நொடியில் பிரிந்து விடுகின்றது. அதன் பின் சரீரம் மண்ணோடு மண்ணாகிப் போகும். ஆவியோ நாம் உலகில் செய்த பலன்களுக்கு தேவனிடமிருந்து பலனை எதிர்கொள்ளும். ஆகவே தான் இன்றும் பரிசுத்த ஆவியானவர் தம் மக்களோடு பேசுவதை விரும்புகின்றார். அவர் தொடர்ந்து தம் மக்களான கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களோடு இணைந்து செயலாற்ற விரும்புகின்றார். கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாக பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வழிநடத்தலை பெற்றுக்கொள்ள இன்றே சந்தர்ப்பம். பயன்படுத்திக்கொள்ளுங்கள். பாக்கியவான்களாகுங்கள்.
தூய ஆவியானவர் கிறிஸ்துவைக் குறித்து சாட்சிக் கொடுக்கின்றவராக இருக்கின்றார்.
“இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை”. எபேசியர் 3:6. கிறிஸ்துவின் இரகசியங்களை வெளிப்படுத்துகின்றவராக பரிசுத்த ஆவியானவரே காணப்படுகின்றார். ஏனெனில் இந்த இரகசியத்தை முற்காலத்தில் அல்லது கிறிஸ்துவிற்கு முன்னிருந்தவர்கள் அறிந்து கொள்ளவில்லை. கிறிஸ்தவர்களது மாபெரும் துணையாளராக தூயஆவியானவர் காணப்படுகின்றார். ஏனெனில் கிறிஸ்தவன் தான் மற்றோருடன் இருக்கின்ற பொழுது அவனுடைய செயல்கள் ஆவியானவரால் எண்ணப்படுவது போல ஒவ்வொருவரதும் செயல்களை அவதானித்துக் கொண்டிருக்கின்றார். கிறிஸ்தவனுக்கு கூறப்படும் காரியங்களை அவரும் அருகிலிருந்த படியே பார்க்கின்றார். சபையில், வெளியில், வீட்டினில், எங்கும் அவர் இருக்கின்றார். மனிதனுக்கு அருகில் அவர் நபராக காணப்படுகின்றார். கிறிஸ்தவன் தனது ஆவியில் அவரோடு பேச முடியும். ஒரு பிள்ளை தகப்பனோடு உறவாடுவது போல தூய ஆவியானவரோடு உரையாட முடியும். ஏனெனில் அவர் ஆவியாயிருக்கிற போதிலும் எங்களை கண்காணித்துக் கொண்டு இருக்கின்றார். கிறிஸ்துவிற்கு முன்னராக காலத்தில் தேவன் மகிமையில் வெளிப்பட்டார். இராஜாக்களுக்கும் மக்களுக்கும் அவர் செய்தியை தமது தீர்க்கதரிசிகளினூடாக கொடுத்துக் கொண்டிருந்தார். கிறிஸ்து மூலமாக தேவன் நேரடியாக மனிதக் கண்களுக்கு தென்பட்டதோடு தமது செய்தியை அவர்களுக்கு அறிவித்தார். இன்றைய நாட்களில் தேவன் தமது ஆவியில் எங்களோடு இணைந்திருக்கின்றார். நாம் எமது ஆவியின் ஊடாகவே அவரோடு தொடர்பு கொள்ள முடிகின்றது. ஆகவே தான் கிறிஸ்துவிற்காக மரிக்கவும் அநேகர் தயாராக இருந்திருக்கின்றார்கள். ஏனெனில் மரணம் மாம்சத்திற்குரியது. ஆதன் பின்னரான நித்திய வாழ்க்கை தேவனுடன் தொடரப் போகின்றது. மரணத்தின் போது ஆவியானது மாம்சத்திலிருந்து ஒரு நொடியில் பிரிந்து விடுகின்றது. அதன் பின் சரீரம் மண்ணோடு மண்ணாகிப் போகும். ஆவியோ நாம் உலகில் செய்த பலன்களுக்கு தேவனிடமிருந்து பலனை எதிர்கொள்ளும். ஆகவே தான் இன்றும் பரிசுத்த ஆவியானவர் தம் மக்களோடு பேசுவதை விரும்புகின்றார். அவர் தொடர்ந்து தம் மக்களான கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களோடு இணைந்து செயலாற்ற விரும்புகின்றார். கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாக பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வழிநடத்தலை பெற்றுக்கொள்ள இன்றே சந்தர்ப்பம். பயன்படுத்திக்கொள்ளுங்கள். பாக்கியவான்களாகுங்கள்.


Syndication
No Comment for this post yet...