தேவ பயம்
கர்த்தருக்கு பயந்திருக்கும் ஒவ்வொருவருடைய வாழ்விலும்
கர்த்தர் கிரியை செய்கின்றார். அவர்கள் ஒவ்வொருவருடைய தலைமுறையையும் அவர் கண்காணிக்கின்றார்.
அவர் ஒவ்வொருவர் மேலாகவும் தம்முடைய கரத்தை நீட்டுகின்றார். அவருடைய செய்கைகளுக்கு
முடிவேயில்லை. அவருடைய இரக்கங்களுக்கு எல்லேயேயில்லை. ஆகையினால் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு
தம்முடைய அன்பை வெளிப்படுத்துகின்றார். அவர் தாம் படைத்த மனிதனை மிகவும் அன்பு கொண்டவராகவே
நோக்குகின்றார். அவர் மனிதன் மேல் பிரியமாயிருக்கின்றார். ஆதலால் அவர் மனிதன் பேரில்
மகிழ்ச்சியடைகின்றார். ஒவ்வொரு பொழுதும் மனிதன் மேலாக கரிசனை வைக்கக்கூடிய ஒருவராக
தேவன் மாத்திரமே இருக்கின்றார். உதவிக்காக வருகின்ற மனிதர்கள் எம்மை கைவிட்டு போகலாம்.
ஆனாலும் தேவனாகிய கர்த்தர் எம்மை ஒருபோதும் தவிக்க விடமாட்டார். அவருடைய உன்னதங்களில்
அவர் எங்களை உட்காரச்செய்யும் பொருட்டு எங்கள் மேல் இரக்கம் காண்பிக்கின்றவராயி;ருக்கின்றார்.
தேவனை நோக்கி பார்த்து அவருக்கு பயப்படவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். அப்போது
அவர் தம்முடைய இரக்கங்களின் காரணத்தினால் எங்களை காத்துக்கொள்வார். நாம் அவருக்கு பயப்படாது
செல்லும் போது அவர் எங்களிடமிருந்து தூரமாகின்றார். அதினிமித்தமான உலகத் துயரங்களுக்குள்ளான
நாங்கள் மூழ்க நேரிடுகின்றது. தொல்லைகள், கவலைகள், கஸ்டங்கள் எங்கள் வாழ்க்கையை ஊடறுக்கின்றது.
ஆயினும் அவைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு இயேசுக்கிறிஸ்து தம்மையே எங்களுக்கு பலியாக்கினார்.
ஆகவே அவருக்கு நாம் பயப்படுகின்ற போது அவருடைய கட்டளைகளுக்கு இணங்கி வாழ்கின்ற போது
அவருக்கு பிரியமானவைகளை செய்கின்ற போது அவர் எங்கள் மேல் இரக்கம் காட்டுகின்றார். இவ்வாறான
இரக்கமுள்ள தேவனை இதற்கு முதல் எப்போவாவாது நாம் சந்தித்திருக்கின்றோமா? ஆகவே அவருடைய
இரக்கங்களை பெற்றுக்கொண்டு நித்திய மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ள அவருக்கு பயப்படுதல்
எத்தனை மேன்மையுள்ள காரியமாக காணப்படுகின்றது. அது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கின்ற
காரியமாக இருக்கின்றது. அவர் தம்மேல் பயந்தவர்களுக்கு இரக்கம் காட்டுவது போல அவர்களது
சந்ததியாருக்கும் தமது இரக்கத்தை காண்பிக்க வல்லவராயிருக்கின்றார். அதினிமித்தமான அவர்
மேல் நாம் பயமுள்ளவர்களாக எங்கள் வாழ்க்கையில் நன்மை செய்ய முயல வேண்டும். அப்போது
அவருடைய இரக்கங்களுக்கு நாம் சொந்தங்கொண்டாட முடியும். அவருடைய எல்லையில்லா இரக்கங்களைப்
பெற்றுக் கொள்ள முடியும் என்பது நிச்சயமே.
கர்த்தர் கிரியை செய்கின்றார். அவர்கள் ஒவ்வொருவருடைய தலைமுறையையும் அவர் கண்காணிக்கின்றார்.
அவர் ஒவ்வொருவர் மேலாகவும் தம்முடைய கரத்தை நீட்டுகின்றார். அவருடைய செய்கைகளுக்கு
முடிவேயில்லை. அவருடைய இரக்கங்களுக்கு எல்லேயேயில்லை. ஆகையினால் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு
தம்முடைய அன்பை வெளிப்படுத்துகின்றார். அவர் தாம் படைத்த மனிதனை மிகவும் அன்பு கொண்டவராகவே
நோக்குகின்றார். அவர் மனிதன் மேல் பிரியமாயிருக்கின்றார். ஆதலால் அவர் மனிதன் பேரில்
மகிழ்ச்சியடைகின்றார். ஒவ்வொரு பொழுதும் மனிதன் மேலாக கரிசனை வைக்கக்கூடிய ஒருவராக
தேவன் மாத்திரமே இருக்கின்றார். உதவிக்காக வருகின்ற மனிதர்கள் எம்மை கைவிட்டு போகலாம்.
ஆனாலும் தேவனாகிய கர்த்தர் எம்மை ஒருபோதும் தவிக்க விடமாட்டார். அவருடைய உன்னதங்களில்
அவர் எங்களை உட்காரச்செய்யும் பொருட்டு எங்கள் மேல் இரக்கம் காண்பிக்கின்றவராயி;ருக்கின்றார்.
தேவனை நோக்கி பார்த்து அவருக்கு பயப்படவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். அப்போது
அவர் தம்முடைய இரக்கங்களின் காரணத்தினால் எங்களை காத்துக்கொள்வார். நாம் அவருக்கு பயப்படாது
செல்லும் போது அவர் எங்களிடமிருந்து தூரமாகின்றார். அதினிமித்தமான உலகத் துயரங்களுக்குள்ளான
நாங்கள் மூழ்க நேரிடுகின்றது. தொல்லைகள், கவலைகள், கஸ்டங்கள் எங்கள் வாழ்க்கையை ஊடறுக்கின்றது.
ஆயினும் அவைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு இயேசுக்கிறிஸ்து தம்மையே எங்களுக்கு பலியாக்கினார்.
ஆகவே அவருக்கு நாம் பயப்படுகின்ற போது அவருடைய கட்டளைகளுக்கு இணங்கி வாழ்கின்ற போது
அவருக்கு பிரியமானவைகளை செய்கின்ற போது அவர் எங்கள் மேல் இரக்கம் காட்டுகின்றார். இவ்வாறான
இரக்கமுள்ள தேவனை இதற்கு முதல் எப்போவாவாது நாம் சந்தித்திருக்கின்றோமா? ஆகவே அவருடைய
இரக்கங்களை பெற்றுக்கொண்டு நித்திய மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ள அவருக்கு பயப்படுதல்
எத்தனை மேன்மையுள்ள காரியமாக காணப்படுகின்றது. அது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கின்ற
காரியமாக இருக்கின்றது. அவர் தம்மேல் பயந்தவர்களுக்கு இரக்கம் காட்டுவது போல அவர்களது
சந்ததியாருக்கும் தமது இரக்கத்தை காண்பிக்க வல்லவராயிருக்கின்றார். அதினிமித்தமான அவர்
மேல் நாம் பயமுள்ளவர்களாக எங்கள் வாழ்க்கையில் நன்மை செய்ய முயல வேண்டும். அப்போது
அவருடைய இரக்கங்களுக்கு நாம் சொந்தங்கொண்டாட முடியும். அவருடைய எல்லையில்லா இரக்கங்களைப்
பெற்றுக் கொள்ள முடியும் என்பது நிச்சயமே.
லூக்கா 1:50 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத்
தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.


Syndication
No Comment for this post yet...