தேவனுடைய ஆசீர்வாதங்கள்
தேவன் இன்று நீதிமானை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
அவருடைய கண்கள் பரிசுத்தமுள்ள மனிதனை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்றது. அவரே வானத்தையும்
பூமிiயும் உருவாக்கி மனிதனையும் உருவாக்கினவர். இன்று நீதியாய் உள்ள மனிதன் எப்போது
தேவனை தேடி வருவான் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார். வாழ்க்கையில் பரிசுத்தமுள்ள
மனிதனால் தேவனுடைய ஆசீர்வாத்தையும் அவருடைய நீதியையும் பெற முடியும். எவ்வாறு தேவனுடைய
ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வது? செய்யும் வேலைகளில் பரிசுத்தம் காணப்பட வேண்டும். நினைவுகளான
சிந்தனைகள் சரியானவைகளாக இருக்க வேண்டும். அவனுடைய செயலும் சொல்லும் தேவனுக்கு ஏற்ற
விதத்தில் இருக்க வேண்டும். அப்போது தேவன் தம்முடைய கிருபையை அவன் மேல் பொழிகிறார்.
கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடிய
பரிசுத்தமுள்ள மனிதன் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வான் என்பது நிச்சயமானதே
“யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய
பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து,
தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே. அவன் கர்த்தரால்
ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்”. சங்கீதம்
24:3-5


Syndication
No Comment for this post yet...