தேவன் எம் தந்தை
எங்கள் தேவனை நாம் அப்பா பிதாவே என்று உரிமையோடு அழைக்க முடியும். ஏனெனில் தேவனை அப்பா என்றழைக்க நாம் பயப்படவேண்டிய தேவையில்லை. அவர் நம்மோடு இருக்கின்றவராகையால் அவரை உரிமையோடு அழைக்க முடியும். ஏனெனில் நாம் ஆண்டவருக்கு முன்னராக அடிமைத்தனத்தின் ஆவியை பெற்றுக்கொள்ளவில்லை. அவருக்குள்ளாக நாம் புத்திர சுவீகாரத்தின் ஆவியை பெற்றிருக்கின்றோம் என்று வேதாகமம் கூறுகின்றது. எவ்வாறு இந்த சந்தர்ப்பம் எமக்கு ஏற்றபட்டது. கிறிஸ்து நமக்காக சிலுவையில் மரித்ததினாலே நாம் இவ்வாறான ஓர் சலாக்கியத்தைப் பெற்றுக் கொண்டுள்ளோம். கிறிஸ்து சிலுவையின் மேலாக பெற்ற வெற்றியானது எங்களை பிதாவின் புத்திரர்களாக மாற்றுகின்றது. ஆயினும் நாம் சிலுவையில் மரணித்த கிறிஸ்து தேவனுடைய சரீரமான வெளிப்பாடு எனவும் அவர் மரணத்திலிருந்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் எனவும் மீண்டும் உலகிற்கு வரப்போகின்ற இராஜாதி இராஜா எனவும் விசுவாசிக்கும் போது நாம் தேவனில் அவருடைய புத்திர சுவிகார ஆவியை பெற்றுக் கொள்ளுகின்றோம்.
ஏனெனில் கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நம்மை இயேசுவானவர் தேவனோடு இணைத்து வைக்கின்றார். அது எம்மை தேவனுக்கு ஏற்ற பிள்ளைகளாக மாற்றியமைக்கின்றது. இதன் மூலமாக நாம் பெற்றுக் கொள்ளுகின்ற நித்திய ஜீவனானது எம்மை பிதாவுக்கு புத்திரர்களாக மாற்றுகின்றது. அதனால் நாம் பயமுள்ள ஆவியை விட்டு தேவனுக்குரிய புத்திரர்களாக தேவனை அப்பா என்றும் பிதாவே என்றும் அழைக்கத்தக்க ஆவியை பெற்றுக் கொள்ளுகின்றோம். உலகத்தின் மனிதர்கள் தங்கள் பாவத்திலிருந்து விடுபட்டு கிறிஸ்துவை அடைந்து கொள்ளும் போது அவர்கள் பிதாவை அப்பாவாக கொள்ள முடிகின்றது. அவரது தகப்பன் முறையிலான உறவின் வாயிலாக நாம் தேவனை அறிந்து கொள்ளுகின்றோம்.
~அந்தப்படி திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா, பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவீகாரத்தின் ஆவியை பெற்றீர்கள்| ரோமர் 8:15
ஏனெனில் கிறிஸ்துவின் உயிர்ப்பினால் நம்மை இயேசுவானவர் தேவனோடு இணைத்து வைக்கின்றார். அது எம்மை தேவனுக்கு ஏற்ற பிள்ளைகளாக மாற்றியமைக்கின்றது. இதன் மூலமாக நாம் பெற்றுக் கொள்ளுகின்ற நித்திய ஜீவனானது எம்மை பிதாவுக்கு புத்திரர்களாக மாற்றுகின்றது. அதனால் நாம் பயமுள்ள ஆவியை விட்டு தேவனுக்குரிய புத்திரர்களாக தேவனை அப்பா என்றும் பிதாவே என்றும் அழைக்கத்தக்க ஆவியை பெற்றுக் கொள்ளுகின்றோம். உலகத்தின் மனிதர்கள் தங்கள் பாவத்திலிருந்து விடுபட்டு கிறிஸ்துவை அடைந்து கொள்ளும் போது அவர்கள் பிதாவை அப்பாவாக கொள்ள முடிகின்றது. அவரது தகப்பன் முறையிலான உறவின் வாயிலாக நாம் தேவனை அறிந்து கொள்ளுகின்றோம்.
~அந்தப்படி திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா, பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவீகாரத்தின் ஆவியை பெற்றீர்கள்| ரோமர் 8:15


Syndication
No Comment for this post yet...