தொழுது கொள்
தொழுகை முக்கியம் என வேதாகமம் கூறுகின்ற போதும் தொழுது கொள்ளுகின்ற போது நாம் இறைவனை கிட்டிச் சேரமுடியும் என்பது விசுவாச நம்பிக்கையாக உள்ளது. ஏனெனில் தொழுகைக்கான அழைப்பு எமக்கு எந்நேரமும் உண்டு. ஏனெனில் தொழுதுகொள்ளும் உரிமை எமக்குள்ளதனால் நாம் தொழுகைக்கு முக்கியத்துவம் செலுத்த வேண்டியது அவசியமாக இருக்கின்றது. கிறிஸ்து எமக்காக மரித்ததினாலே நாம் அவரை தொழுது கொள்ள வேண்டியது அவசியம். எமது தொழுகையின் முக்கிய பாகம் இயேசுவுக்கே செலுத்தப்பட வேண்டும். கர்த்தருடைய நாமமானது அதிசயமானது. அவருடைய நாமத்தை தொழுது கொள்ளுபவனுக்கே இரட்சிப்பு கிடைக்கும் என வேதாகமம் போதிக்கின்ற முக்கிய விடயமாகும்.
கர்த்தருடைய நாமத்தின் மேலாக விசுவாசம் கொண்டு அவர் நித்தியமான பிதாவெனவும் அவர் மாம்சமாக கிறிஸ்துவாக வெளிப்பட்ட மனித குமாரன் எனவும் தம்முடைய ஆவியினால் வெளிப்படும் ஆவியானவராகவும் இருக்கின்றார் எனவும் விசுவாசித்து அவருடைய நாமத்தை தொழுகையில் அவர் நமக்கு இரட்சிப்பை கட்டளையிட வல்லவராயிருக்கின்றார். அவருடைய கிரியைகள் அவர் தம்மை எங்களுக்கு வெளிப்படுத்துகின்ற காரியங்கள் மூலமாக அவரை கண்டு கொள்ளுகின்ற நாம் அவருக்கேற்ற கனத்தை கொடுக்கும் படியாக அவரை தொழுது கொள்ளுவது அவசியமாக இருக்கின்றது. அவர் எங்களுடைய நேச பிதா என்பதை மறுக்க முடியாது. ஆகவே அவரது அன்பு எங்களை அவருடைய பலத்த கிரியைகளை காணும்படியாக செய்தது. அவர் எங்கள் மத்தியில் அற்புதங்களையும் அடையாளங்களையும் இன்றும் நடப்பித்துக் கொண்டிருக்கின்றார். அவரது செயல்கள் மூலமாக அவர் இன்றும் தம்மை உயிருள்ள தேவனாக, இரட்சகராக, மாவேந்தராக காண்பித்துக் கொண்டிருக்கின்றார்.
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்@ நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். அப்போஸ்தலர் 2:21-22
கர்த்தருடைய நாமத்தின் மேலாக விசுவாசம் கொண்டு அவர் நித்தியமான பிதாவெனவும் அவர் மாம்சமாக கிறிஸ்துவாக வெளிப்பட்ட மனித குமாரன் எனவும் தம்முடைய ஆவியினால் வெளிப்படும் ஆவியானவராகவும் இருக்கின்றார் எனவும் விசுவாசித்து அவருடைய நாமத்தை தொழுகையில் அவர் நமக்கு இரட்சிப்பை கட்டளையிட வல்லவராயிருக்கின்றார். அவருடைய கிரியைகள் அவர் தம்மை எங்களுக்கு வெளிப்படுத்துகின்ற காரியங்கள் மூலமாக அவரை கண்டு கொள்ளுகின்ற நாம் அவருக்கேற்ற கனத்தை கொடுக்கும் படியாக அவரை தொழுது கொள்ளுவது அவசியமாக இருக்கின்றது. அவர் எங்களுடைய நேச பிதா என்பதை மறுக்க முடியாது. ஆகவே அவரது அன்பு எங்களை அவருடைய பலத்த கிரியைகளை காணும்படியாக செய்தது. அவர் எங்கள் மத்தியில் அற்புதங்களையும் அடையாளங்களையும் இன்றும் நடப்பித்துக் கொண்டிருக்கின்றார். அவரது செயல்கள் மூலமாக அவர் இன்றும் தம்மை உயிருள்ள தேவனாக, இரட்சகராக, மாவேந்தராக காண்பித்துக் கொண்டிருக்கின்றார்.
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்@ நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். அப்போஸ்தலர் 2:21-22


Syndication
No Comment for this post yet...