பிரகாசிக்கும் மின்னல்
கிறிஸ்துவானவரின் வருகையானது அதிசீக்கிரத்தில் இருப்பது போலவே
அவருடைய நாளானது நிச்சயம் நிகழும் என வேதாகமம் தெளிவாக அறிவிக்கின்றது. ஏனெனில் கிறிஸ்துவானாவர்
இராஜாவாக வரப்போகும் நாளை காணுகின்ற கண்கள் அதைக் காணும்போது தங்கள் குற்றங்களை குறித்து
மனஸ்தாபப்படவேண்டியதாயிருக்கும். தாங்கள் செய்த அக்கிரமங்களுக்குத் தக்க பலனை அடைவதற்காக
அந் நாள் நியமிக்கப்பட்டிருக்கின்றது. அவருடைய வருகையின் நாளை குறித்துச் சொல்லும்
திராணி மனிதர்களுக்கு இன்னும் தரப்படவில்லை. மனிதர்கள் அறியாத நாளில் கிறிஸ்துவானவர்
வருவார். அவர் நிச்சயம் தமது நியாயத்தீர்ப்பை மனிதர்கள் மேல் வெளிப்படுத்துவார். அவரது
நாளின் ஆரம்பம் அல்லது முடிவு மிகவும் சீக்கிரம் நிகழப்போகின்றது. அவருடைய வருகையின்
நாளை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் எமக்கு கிறிஸ்துவின் மேலான நம்பிக்கை மற்றும்
விசுவாசமானது மிகவும் ஆழமாய் காணப்படவேண்டியதாய் உள்ளது. லூக்கா 17:24
“மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல
மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்”


Syndication
No Comment for this post yet...