புதிய வாழ்வின் நம்பிக்கை
தேவனுடைய ஜனங்களாயிருப்பதற்கான தகுதியை இயேசுக் கிறிஸ்துவின் மூலமாய் பெற்றுக்கொண்ட சிலாக்கியமுள்ள ஜனங்களாய் நாம் காணப்படுகின்றோம். ஒரே தேவனுடைய ஒரே மக்களாய் நாம் இருப்பதற்கு நம்முடைய செயல்கள் அல்ல. மாறாக தேவனுடைய கிருபையின் காரணமாக இயேசுக்கிறிஸ்துவின் மீட்பினால் நாம் அவருடைய சொந்த ஜனங்களாய் உள்ளோம் என பேதுரு தெளிவாக அறிவிக்கின்றார். இரக்கமானது சாதாரணமாக நாம் வெளிப்படுத்துகின்ற உணர்வை விட மிகவும் பெறுமதி வாய்ந்ததாக அமைந்துள்ளது. முன்னர் நாம் இரக்கம் பெறாதவர்களாக காணப்பட்டபோது எம்மால் சரியாக நடந்து கொள்ள முடியாததாய் இருந்திருந்த போது தேவனுடைய அன்பு எம்மீது இரக்கம் பெற வைத்தது. அதனால் நாம் தேவனுடைய இரக்கத்தை பெற்றுக்கொண்டோம். தேவனுடைய இரக்கமானது எமக்கு நித்திய ஜீவனை பெற்றுத் தருகின்றது. அவருடைய வார்த்தைகள் எமக்கு புதிய ஜீவனுள்ள உணவு ஆகும்.
தேவனுடைய வார்த்தையான வேதாகமமானது எமது அனுதின வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஆவியின் போசாக்கை கொண்டுள்ள புத்தகமாகும். நாம் தேவனுடைய ஜனங்களாவதற்கு முன் எம்மிடமிருந்த பழைய வாழ்க்கையானது பல்வேறு பாவங்களையும் எல்லாவித சாபங்களைக் கொண்டு அமைந்திருந்த பாவமான வாழ்க்கையாக காணப்பட்டது. அதனால் நமது வாழ்க்கையின் எதிர்காலமானது சூன்யமாகவும் அர்த்தமற்றதாகவும் காணப்பட்டது. ஆயினும் அந்த நிலை மாற்றப்படத்தக்கதாக இப்போது நாம் தேவனுடைய பிள்ளைகளாக காணப்படுகின்றோம். தேவனுடைய பிள்ளைகளான பின் எமக்கு எதிராக எந்த வித மந்திரமோ தந்திரங்களோ சாத்தானால் மேற்கொள்ள முடியாது. கிறிஸ்து உலகத்தினை வெற்றி கொண்டது போலான வல்லமையை நாமும் பெற்றுக்கொண்டுள்ளோம். இயேசுவின் அதே வல்லமை எமக்குள்ளாக பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்படுகின்றது. அவரது வல்லமையையும் அவரது துணையையும் கொண்டு நாம் சாத்தானுக்கு எதிர்த்து நி;ற்க முடிவதோடு உலகத்தின் பாவங்களிற்கு எதிராக எம்மால் செயற்பட முடியும். இவ்விதமாய் இயேசுக்கிறிஸ்துவின் மூலமாய் தேவனுடைய பிள்ளைகளான எம்மை பரிசுத்த ஆவியானவர் வழிநடத்திச் செல்லுகின்றார்.
முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை. இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள். முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள். 1பேதுரு 2:10
தேவனுடைய வார்த்தையான வேதாகமமானது எமது அனுதின வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஆவியின் போசாக்கை கொண்டுள்ள புத்தகமாகும். நாம் தேவனுடைய ஜனங்களாவதற்கு முன் எம்மிடமிருந்த பழைய வாழ்க்கையானது பல்வேறு பாவங்களையும் எல்லாவித சாபங்களைக் கொண்டு அமைந்திருந்த பாவமான வாழ்க்கையாக காணப்பட்டது. அதனால் நமது வாழ்க்கையின் எதிர்காலமானது சூன்யமாகவும் அர்த்தமற்றதாகவும் காணப்பட்டது. ஆயினும் அந்த நிலை மாற்றப்படத்தக்கதாக இப்போது நாம் தேவனுடைய பிள்ளைகளாக காணப்படுகின்றோம். தேவனுடைய பிள்ளைகளான பின் எமக்கு எதிராக எந்த வித மந்திரமோ தந்திரங்களோ சாத்தானால் மேற்கொள்ள முடியாது. கிறிஸ்து உலகத்தினை வெற்றி கொண்டது போலான வல்லமையை நாமும் பெற்றுக்கொண்டுள்ளோம். இயேசுவின் அதே வல்லமை எமக்குள்ளாக பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்படுகின்றது. அவரது வல்லமையையும் அவரது துணையையும் கொண்டு நாம் சாத்தானுக்கு எதிர்த்து நி;ற்க முடிவதோடு உலகத்தின் பாவங்களிற்கு எதிராக எம்மால் செயற்பட முடியும். இவ்விதமாய் இயேசுக்கிறிஸ்துவின் மூலமாய் தேவனுடைய பிள்ளைகளான எம்மை பரிசுத்த ஆவியானவர் வழிநடத்திச் செல்லுகின்றார்.
முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை. இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள். முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள். 1பேதுரு 2:10


Syndication
No Comment for this post yet...