வரும் காலத்திற்கான பார்வை
கர்த்தருடைய ஆவியானவரின் நாளாகிய பெந்தகொஸ்தே நாளின் போது பரிசுத்த ஆவியானவர் சீடர்கள் மத்தியில் கடந்து வந்தார். சீஷர்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட போது அவர்கள் பலவித பாஷைகளில் தேவனை ஸ்தோத்திரம் செய்தார்கள். கர்த்தருடைய பெலன் அவர்கள் மேல் நிழலிட்டதால் அவர்கள் பெலனடைந்தார்கள். அன்றைய நாள் தொடங்கி இன்றைய நாள் வரைக்கும் கர்த்தருடைய நற்செய்தி உலகமெங்கும் பிரசித்தமாகிக் கொண்டிருக்கின்றது. ஏனெனில் இது கடைசிக்காலமாயிருக்கிறது. இவ்விதமான நாளிற்காகவே பலரும் காத்துக் கொண்டிருந்தனர். இவர்களுடைய எதிர்பார்ப்பாகிய இந்த நாளின் போது கர்த்தருடைய ஆவியானவர் எங்களுக்குள்ளாக கடந்து வருவதால் தீர்க்கதரிசனங்களை ஆவியானவர் தந்தருளுகின்றார். சொப்பனங்களை காண்பிக்கின்றார். இது ஒரு புது பெலனாக உருவெடுக்கின்றது. சமூகத்தில் இயேசுவை குறித்து சாட்சி கொடுக்க பரிசுத்த ஆவியானவரின் பெலன் உதவி செய்கின்றது. கிறிஸ்து இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் சிறந்த ஊடகமாக நாம் பரிசுத்த ஆவியானவரால் மாற்றப்படுகின்றோம்.
கடைசி நாள்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இவ்வாறாக தேவனுடைய ஆவியாவரை விசுவாசிப்பதன் மூலமாக அவர் எங்கள் வாழ்வில் பலத்த அற்புதங்களை செய்ய வல்லவராயிருக்கின்றார் என்பதை அறிந்து கொண்டு அவருக்கு இடம் கொடுக்கும் போது புதுவித வல்லமையால் நிரப்பிடுவார். எதிர்காலத்தை குறித்த தீர்க்க தரிசனங்களை சொப்பனங்களை நமக்கு காட்டுவார். இது எவ்வளவு பெரிய பாக்கியம். இதை அடைந்து கொள்ள இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவரது கிருபை உங்கள் மேல் தங்கும்.
இயேசு கிறிஸ்து கூறினார்.: “கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்கதரிசனஞ்சொல்;லுவார்கள். உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள். உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்.” அப்போஸ்தலர் 2:17
கடைசி நாள்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இவ்வாறாக தேவனுடைய ஆவியாவரை விசுவாசிப்பதன் மூலமாக அவர் எங்கள் வாழ்வில் பலத்த அற்புதங்களை செய்ய வல்லவராயிருக்கின்றார் என்பதை அறிந்து கொண்டு அவருக்கு இடம் கொடுக்கும் போது புதுவித வல்லமையால் நிரப்பிடுவார். எதிர்காலத்தை குறித்த தீர்க்க தரிசனங்களை சொப்பனங்களை நமக்கு காட்டுவார். இது எவ்வளவு பெரிய பாக்கியம். இதை அடைந்து கொள்ள இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவரது கிருபை உங்கள் மேல் தங்கும்.
இயேசு கிறிஸ்து கூறினார்.: “கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்கதரிசனஞ்சொல்;லுவார்கள். உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள். உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்.” அப்போஸ்தலர் 2:17


Syndication
No Comment for this post yet...