03 தசாப்தங்களுக்கு மேலாக நடைபெறுகின்ற யுத்தமானது இலங்கையின் பொருளாதாரத்திற்கு விழுந்த பெரும் அடியாகும்.
இந்த யுத்தமானது நாட்டை பெரும் பாதிப்புக்குள்ளாக்கி பல அழிவுகளை கொடுத்ததே மிஞ்சி நிற்கின்றது.
அந்த வகையில் வெளிநாட்டவர்களின் மூலமாக சமாதான நடவடிக்கைகள் இலங்கையில் ஏற்பட்ட போது அதற்கு யுத்தத்தை மேற்கொண்டு வரும் இரு தரப்பினரும் தமது ஒப்புதலை அளித்தனர்.
இதன் விளைவாக சில வருடங்களாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமுல் படுத்தப்பட்டு வந்ததோடு சமாதான பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றது.
ஆனால் பேச்சு வார்த்தைகளும் முற்று பெற்றன. தற்போது போர் நிறுத்தமும் நீக்கப்படும் நிலைக்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் பொது மக்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்களை இரு தரப்பும் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
பொது மக்களின் இழப்புக்களுக்கு தகுந்த இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.
பொது மக்கள் தமது இயல்பு வாழ்வை மேற்கொள்ள நிவாரணங்கள், உதவிகள் செய்வதற்கு இரு தரப்பும் முன்வர வேண்டும்.
ஆக இலங்கையின் நிலைமை மிக மோசமாக போவதற்கு காரணமான அனைத்திற்காகவும் நாம் ஜெபிக்க வேண்டியது முக்கியமானதாகும். அழிந்து போகும் ஜனங்கள் தேவனுக்கு என்ன கூறப்போகிறார்கள் என்பதை நாம் அறிய வேண்டும். மக்களின் இரத்தப்பழி சுமக்கப் போகும் தலைவர்கள் தேவனுக்கு எதனை கூறப்போகிறார்கள். இதனை கிறிஸ்தவ சமுதாயம் ஜெபத்தில் முன்னெடுக்காமல் இருப்பதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்.
ஆகவே ஒன்று பட்டு ஜெபியுங்கள்.
தேவன் பெரிய காரியத்தை இலங்கையில் செய்வார் என்பது நிச்சயம்.
மேலும்... லூக்கா 21: யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.
Syndication
No Comment for this post yet...