மிகவும்
ஆனந்தமான துள்ளிக்குதித்தான் நம்முடைய குட்டிச் சிறுவன் சுரேஷ். அவனுக்கு அன்று
அவனுடைய மாமா பரிசு ஒன்றை அனுப்பியிருந்தார். மிகவும் அழகான கைக்கடிகாரம்.
அதிலுள்ள பட்டன்களை அழுத்தும் போது அது ஒவ்வொரு வண்ணங்களால் பிரகாசித்தது. அதைக்
கைகளில் அணிந்தவனாய் வீட்டின் எங்கும் சுற்றிக்கொண்டிருந்தான். அவனுடைய தங்கை
அகிலாவுக்கு அதை அழுத்தி பார்க்க ஆசையாக வந்தது. அதை தரும்படி அவள் சுரேஷிடம்
கேட்டாள். அவனோ அதைக் கொடுக்காமல் தன்னிஷ்டம் போல் ஆடிக் கொண்டிருந்தான்.
திடீரென்று அவன் அணிந்திருந்த கடிகாரம் கீழே விழுந்தது. இப்போது அது வேலை
செய்யவில்லை. அவன் தன் தங்கையை பார்த்தான். அவளுக்கும் அதிர்ச்சி. அவன் உடனே
கடிகாரத்தை கரங்களில் ஏந்திக்கொண்டவனாக முழங்கால்படியிட்டான். ஆண்டவரே நீர் இந்த
கடிகாரத்தை மீண்டும் இயங்கச்செய்யும். அப்படி செய்தால் நான் இதை தங்கைக்கு விளையாட
கொடுப்பேன் என ஜெபித்தான். ஜெபித்து முடிக்கவும் அப்பா வந்து கடிகாரத்திலிருந்து
கழன்றிருந்த பட்டறியை பூட்டவும் சரியாக இருந்தது. கடிகாரம் இப்போ வேலைசெய்தது.
அவன் அதை தங்கைக்கும் விளையாட கொடுத்தான்.
மத்தேயு 5:42
உன்னிடத்தில்
கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு
முகங்கோணாதே.


Syndication